TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 6.3 – நாச்சியார் திருமொழி

6.3 நாச்சியார் திருமொழி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 6.3 – நாச்சியார் திருமொழி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - NachiyarThirumolizhi

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் ஆண்டாள்
ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர்
காலம் கி.பி. 9
பிறப்பு 01.07.1906
பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி
சிறப்பு சூடிக்கொடுத்த சுடர்கொடி என்றதாலும், இறைவனை ஆண்டதாலும் அண்டாள் எனப்பட்டார். இறைவனே ஆண்டதால் நாச்சியர் எனப்பட்டார்.

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள், மகள் அம்சமாக பிறந்தவள்

சொல்லும் பொருளும்

  • தீபம் – விளக்கு
  • சதிர் – நடனம்
  • தாமம் – மாலை

இலக்கணக் குறிப்பு

  • கொட்ட – வினையெச்சம்
  • முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. தொட்டு – தொடு (தொட்டு) + உ

  • தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம்
  • உ – வினையெச்ச விகுதி

2. கண்டேன் – காண் (கண்) + ட் + ஏன்

  • காண் – பகுதி (’கண்’ எனக் குறுகியது விகாரம்)
  • ட் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்.
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
  • ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.
  • இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

  1. கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  2. தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  3. ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
  4. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

குறு வினா

கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

இசைக்கருவிகள் மற்றும் சங்குகள் முழங்க கண்ணன் புகுந்த பந்தலில் முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது.

சிறு வினா

ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக

  • கைகளில் கதிரவன் போன்ற ஒளி யை உடைய விளக்கையும், கலசத்தையும் ஏந்தி வந்து அழைக்க, வடமதுரை மன்னன் கண்ணன் பாதுகை அணிந்து நடந்து வருகிறார்’.
  • இசைக்கருவிகள் சங்குகள் முழங்க, அத்தை மகனும், “மது” என்ற அரக்கனை அழித்தவனுமாகிய கண்ணன், புகுந்த பந்தலில் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ___________ இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது.

  1. சங்க
  2. அற
  3. பக்தி
  4. மறுமலர்ச்சி

விடை : பக்தி

2. ஆண்டாள் காதல் கொண்டது ___________

  1. ஈசன்
  2. முருகன்
  3. பிரம்மன்
  4. திருமால்

விடை : திருமால்

3. வட மதுரையை ஆளும் மன்னன் ___________

  1. ஈசன்
  2. கண்ணன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

4. மது என்னும் அரக்கனை அழித்தவர் ___________

  1. கண்ணன்
  2. ஈசன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

5. பொருந்தாதவற்றைக் குறிப்பிடுக

  1. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள்
  2. திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிவற்றை இயற்றியுள்ளார்.
  3. பாமாலையோடு தான் அணிந்த பூமாலையும் சூட்டியதால் சூடிக்கொடுத்து சுடர்கொடி என அழைக்கப்பட்டார்
  4. பன்னிருதிருமுறைகள் தொகுப்பில் ஆண்டாளின் பாடல்கள் உள்ளன

விடை : பன்னிருதிருமுறைகள் தொகுப்பில் ஆண்டாளின் பாடல்கள் உள்ளன

6. பன்னிரு ஆழ்வார்களில் ஓரே பெண் ஆழ்வார் …………..

  1. ஆண்டாள்
  2. குலசேகர ஆழ்வார்
  3. திருமங்கையாழ்வார்
  4. காரைக்காலம்மையார்

விடை : ஆண்டாள்

7. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்பது _____________

  1. நாயன்மார் பாடிய பாடல் தொகுப்பு
  2. சித்தர்கள் பாடிய பாடல் தொகுப்பு
  3. முனிவர்கள் பாடிய பாடல் தொகுப்பு
  4. ஆழ்வார்கள் பாடிய பாடல் தொகுப்பு

விடை : ஆழ்வார்கள் பாடிய பாடல் தொகுப்பு

8. மதுரையார் மன்னன் _____________

  1. கண்ணன்
  2. ஈசன்
  3. முருகன்
  4. பிரம்மன்

விடை : கண்ணன்

9. பந்தலில் தொங்கவிடப்பட்டிருந்தது _____________

  1. வைரம்
  2. பவளம்
  3. முத்து
  4. மாணிக்கம்

விடை : முத்து

10. ஆண்டாள் தன் கனவை யாரிடம் சொன்னாள்?

  1. கண்ணன்
  2. தோழி
  3. பெரியாழ்வார்
  4. அம்மா

விடை : தோழி

10. கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி – இவ்டிகளில் அமைந்துள்ள நயம்

  1. இயைபு
  2. முரண்
  3. மோனை
  4. எதுகை

விடை : எதுகை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _____________ வழிபட்டுச் சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆழ்வார்கள்

விடை : திருமாலை

2. ஆழ்வார்கள் _____________ ஆவர்

விடை : பன்னிருவர்

3. _____________ வளர்ப்பு மகள் ஆண்டாள்

விடை : பெரியாழ்வாரின்

4. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு _____________

விடை : நாலாயிர திவ்யப் பிரபந்தம்

5. ஆண்டாள் பாடியவை _____________, _____________

விடை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி

6. நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _____________

விடை : 140

குறு வினா

1. திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்தியவர்கள் யார்?

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.

2. “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றால் என்ன?

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.

3 ஆண்டாள் பாடிய நூல்கள் யாவை?

திருப்பாவை, நாச்சியார் திருமொழி

4. ஆண்டாள் -குறிப்பு வரைக

  • பன்னிரு ஆழ்வார்களின் ஒருவராவர்
  • ஆண்டாள் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.

5. நாச்சியார் திருமொழி – குறிப்பு வரைக

  • நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது .
  • நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
  • திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆகிய ஆண்டாள் பாடியவை

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment