TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள்

5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - kalveer sirantha pengal

9th Std Tamil Text Book – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது?

பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.

சிறு வினா

1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக

ஔவையார் ஒக்கூர் மாசாத்தியார்,
ஆதிமந்தியார் வெண்ணிக் குயத்தியார்
பொன்முடியார் அள்ளூர் நன்முல்லையார்
நக்கண்ணையார் காக்கைப்பாடினியார்
வெள்ளிவீதியார் காவற்பெண்டு
நப்பசலையார்

2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

“தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட

ஆமாம் வில்லினில் பாட

வந்தருள்வாய் தமிழ் மகளே!

இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!

ஆமாம்! பாடப்போகிறோம்.

மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்

இன்று பெண்கள்…

சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்

இன்று பெண்கள்…

பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்

இன்று பெண்கள்…

ஆமாம்!

வாழிய வாழிய பெண்கல்வி

ஆமாம் வாழிய வாழியவே!”

3. முத்துலெட்சுமி – குறிப்பு வரைக. (அல்லது) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.

  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பங்களை எழுதுக.

  • மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
  • இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

நெடு வினா

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க

மூவலூர் இராமாமிர்தம்:-

  • தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
  • திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
  • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

முத்துலெட்சுமி:-

  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்:-

  • மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
  • இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

கற்பவை கற்றபின்…

1. இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.

அன்னை தெரசா

கல்கத்தாவில் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்காகச் சேவை செய்தார். சிறந்த சமூக சேவகர், ஏழைக்காக, ஆதரவற்றோருக்காகப் பரிந்து பேசுபவர் என்று உலகமே இவரைப் பாராட்டியது. 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 1980-ல் பாரத ரத்னா விருதையும் பெற்றவர்.

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக கருதப்படுபவர். பிரதமராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எண்ணற்ற முடிவுகளைத் துணிச்சலாக எடுத்தவர்.

மேரி கியூரி

வரலாறு காணாத விஞ்ஞானி என்று போற்றப்படுபவர். இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்.

ஜே.கே.ரவுலிங்

ஹாரிபாட்டர் நாவல் எழுதி உலகப்புகழ் அடைந்தவர்.

ஸ்டெஃபி கிராஃப்

உலக டென்னிஸ் வீராங்கனை 32 கிராண்ட் ஸ்லாம்கள் ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பல கிராண்ட் பிரீ பட்டங்கள் பெற்றவர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஐ.நா.வில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியர்

பிளாரன்ஸ் ஜாய்னர்

தடகள ராணி என்றழைக்கப்படுபவர். 3 ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவர். 2 சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவர்

2. கல்வி குறித்த சிறப்புத்தொடர்கள், பொன்மொழிகளை திரட்டிக் கட்டுரை எழுதுக.

கல்வியின் மேன்மை

முன்னுரை

“கல்வி அழகே அழகு”

மனிதன் ஆறறிவு பெற்றவன். ஆறாம் அறிவு மனம். இந்த மனம் பகுத்தறிய கல்வி அவசியம். பொருளாால் உயர்வது சிறப்பன்று. கல்வியால் உயர்வது தான் சிறப்பு.

கல்வி – விளக்கம்

கல்லுதல் என்பதற்குத் தோண்டுதல் என்பது பொருள். மனித மூளையில் உறைந்து கிடக்கும் அரிய ஆற்றல்களைப் பயிற்சியின் மூலம் வெளிக் கொண்டு வருவதே கல்வி. பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு மட்டும் கல்வியாகாது. ஏராளமான நூல்களை ஆழ்ந்து கற்பது தான் கல்வி.

கல்வியின் அவசியம்

கல்வி கற்றால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும் என்பது தான் இன்றைய நிலை. கல்வி என்பது சம்பாதிப்பதற்கு மட்டும் என்று நினைப்பது தவறு. சமுதாயத்தில் எற்றம் பெற கல்வி அவசியம். சிறப்பான முறையில் குடும்பம் நடத்த அறிவு மேம்பட கல்வி அறிவு மிக அவசியம்.

கல்வியின் சிறப்பு

கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு உள்ள வரை பிறருக்கு கைகொடுக்கும். வெள்ளத்தால் அழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருட முடியாதது கல்வி மட்டுமே. எடுத்தால் குறையாத செல்வம் கொடுத்தால் வளர்வது கல்வி மட்டுமே!

கல்வியின் பயன்கள்

  • “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பதற்கேற்ப அனைத்து இடங்களிலும் பணி புரியலாம்.
  • சமுதாயத்தில் உயர்நிலை பெறலாம்.
  • சாதி பேதங்களை ஒழிக்கும், சமத்துவம் தரும்.
  • ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை நீக்கும்.
  • குடும்பம் அறிவு ஒளி பெறும்.

கல்வியால் உயர்ந்தோர்

பாரதியார், காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், தாகூர், இராதகிருஷ்ணன், அண்ணாதுரை, அப்துல்கலாம் எனப் பலரும் கல்வியால் உயிர்ந்திருந்தனர். இன்றைய காலக்கட்டத்தில் கல்வியால் மட்டுமே சாதனைச் சிகரங்களாக உயர முடியும் என்பது கண்கூடான உண்மையும் கூட.

நிறைவுரை

“கற்றது கைம்மண்ணளவு கல்லாது உலகளவு” என்று நினைத்து நாம் தொடர் கற்றலில் ஈடுபட வேண்டும். இன்று தலை குனிந்து படித்தால் நாளை உலகம் உன்னைத் தலை நிமிர்ந்து பார்க்கும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “கொவ்வைத் தமிழைக் கொண்டு பாடியவர்” என்று குறிப்பிடப்படுபவர் ____________

  1. ஓவையார்
  2. ஆதிமந்தி
  3. ஆண்டாள்
  4. பொன்முடியார்

விடை : ஆண்டாள்

2. முதன் முதலாக பெண் கல்விக்குப் பரிந்துரை செய்த குழு ____________

  1. கோத்தாரி குழு
  2. ஹண்டர் குழு
  3. பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
  4. ராஜாராம் குழு

விடை : ஹண்டர் குழு

3. முதன்முதலாகப் பெண்களுக்கான பள்ளி ___________ மாநிலத்தில் தொடங்கப்பட்டது

  1. தமிழநாடு
  2. கேரளா
  3. குஜராத்
  4. மாராட்டியம்

விடை : மாராட்டியம்

4. மூவலூர் இராமாமிர்தம் ___________ சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

  1. சொத்துரிமை
  2. வாக்குரிமை
  3. தேவதாசி ஒழிப்பு
  4. இனவேறுபாடு

விடை : தேவதாசி ஒழிப்பு

5. தமிழக அரசு, 8 வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை ___________ பெயரால் வழங்கப்படுகின்றது.

  1. முத்துலட்சுமி
  2. சாவித்திரி பூலே
  3. மூவலூர் இராமாமிர்தம்
  4. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

விடை : மூவலூர் இராமாமிர்தம்

6. வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் ___________

  1. முத்துலட்சுமி
  2. சாவித்திரி பூலே
  3. மூவலூர் இராமாமிர்தம்
  4. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

விடை : ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

7. சட்டமேற்படிப்பிற்குரிய பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் ___________

  1. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
  2. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
  3. ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்

8. கல்வி மற்றும் திருமண உதவித் தொகையுடன் தொடர்புடையது ___________

  1. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
  2. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
  3. ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்

9. கோத்தாரி கல்விக் குழு அனைத்து நிலையிலும் ____________யை வலியுறுத்தியது

  1. ஆண்கள் கல்வி
  2. மகளிர் கல்வி
  3. முதியோர் கல்வி
  4. திருநங்கையர்கள் கல்வியை

விடை : மகளிர் கல்வி

10. மறைமலை அடிகளாரின் மகள் ___________

  1. முத்துலட்சுமி
  2. மூவலூர் இராமாமிர்தம்
  3. நீலாம்பிகை அம்மையார்
  4. ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்

விடை : நீலாம்பிகை அம்மையார்

பொருத்துக

1. சாராதா சட்டம் அ. 1930
2. அவ்வை இல்லம் ஆ. 1929
3. புற்றுநோய் மருத்துவமனை இ. 1964
4. கோத்தாரி கல்விக்குழு ஈ. 1952
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. முத்துலட்சுமி அ. தேவதாசி ஒழிப்புச் சட்டம்
2. சாவித்திரி பூலே ஆ. இலவச மருத்துவம் அளித்தவர்
3. ஜடோஸ் சோபியா ஸ்கட்டர் இ. முதல் பெண் ஆசிரியர்
4. மூவலூர் இராமாமிர்தம் ஈ. முதல் பெண் மருத்துவர்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மலாலா ___________ நாட்டில் பெண்கல்வி வேண்டுமென்று போராடியவர்

விடை :பாகிஸ்தான்

2. பெண்களுக்கெனப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு ___________

விடை : 1848

3. 2014-ல் நோபல் பரிசு வாங்கிய பெருமைக்குரியவர்கள் ___________, ___________

விடை : கைலாஷ் சத்யார்த்தி, மலாலா

4. சாவித்திரிபாய் பூலே இந்தியாவின் முதல் ___________

விடை : பெண் ஆசிரியர்

5. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் ___________

விடை : முத்துலெட்சுமி

6. முத்துலெட்சுமி ___________-ல் அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கினார்

விடை : 1952

7. கைலாஷ் சத்தியமூர்த்தி நிறுவிய அமைப்பு 

விடை : குழந்தையைப் பாதுகாப்போம்

8. 80 ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியாய் இருந்தவர் ___________

விடை : கைலாஷ் சத்தியமூர்த்தி

9. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ___________

விடை : முத்துலெட்சுமி

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ___________

விடை : முத்துலெட்சுமி

11. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ___________

விடை : முத்துலெட்சுமி

12. முத்துலெட்சுமி 1930-ல் அடையாற்றில் ___________ தொடங்கினார்

விடை : அவ்வை இல்லம்

13. இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் ___________, ___________

விடை : காரைக்காலம்மையார், ஆண்டாள்

14. முப்பெண்மணிகள் வரலாறு நூலை எழுதியவர் ___________

விடை : நீலாம்பிகை அம்மையார்

15. பட்டினத்தார் பாராட்டிய மூவர் நூலை எழுதியவர் ___________

விடை : நீலாம்பிகை அம்மையார்

16.  ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்கள் ___________, ___________

விடை : சூரியன், பரமாணுப்புராணம்

குறு வினா

1. பெண்கல்வி ஊக்குவிப்புக்கான திட்டங்கள் யாவை?

  • ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் – பட்ட மேற்படிப்புக்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் – கல்வி திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது

2. பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்வர்கள் யார்?

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், பாரதியார், பாரதிதாசன்

3. சாவித்திரிபாய் பூலே ஆற்றிய பணி யாது?

  • 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

4. ஒருவரின் வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுப்பது?

கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுக்கிறது.

5. ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் பற்றி குறிப்பு வரைக

  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
  • இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
  • சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment