TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 3.1 – ஏறு தழுவுதல்

3.1 ஏறு தழுவுதல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 3.1 – ஏறு தழுவுதல்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Yeru thaluvuthal

9th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. பொருந்தாத இணை எது?

  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

விடை : திருவாரூர் – கரிக்கையூர்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ

விடை : ஆ – அ – இ

குறு வினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

ஜல்லிக்கட்டு, மாடு பிடித்தல், மஞ்சு விரட்டு

2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

ஏறுகோள், எருதுகட்டி

3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  • சேலம்
  • நீலகிரி – கரிக்கையூர்
  • மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
  • தேனி – சித்திரக்கல் புடவு
  • சிந்துசமவெளி அகழாய்வு

 சிறு வினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.

 நெடு வினா

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க

  • காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக்  ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது.
  • காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.
  • அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
  • காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.
  • வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
  • தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.
  • நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.
  • எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
  • அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

  • ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
  • நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
  • மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
  • நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்…

1. இலக்கியங்கள் காட்டும் ஏறுதழுவுதல் காட்சிகளை உங்கள் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விளையாட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டு வகுப்பறையில் கலந்துரையாடுக.

இலக்கியங்கள் காட்டும் ஏறுதழுவுதல் காட்சி எங்கள் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விளையாட்டு நிகழ்வு
1. முல்லை நில ஆயர்கள் மட்டுமே ஏறுதழுவலில் ஈடுபட்டு இருந்தனர் ஆயர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
2. திமில் பெருத் காளைகள் பல. தரையைக் கிளறி, புழுதியை எழுப்பின. சில நிலத்தை நொறுக்கின. சில தம்முள்  முரண்பட்டு ஒன்றொடொன்று எதிரத்துக் கொண்டன. சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இந்த காளைகள் போருக்குச் செல்லும் மருதப்போர் வீரரைப் போற்றிருந்தன என்கிறன்றது கலித்தொகை வாடி வாசல் என்னும் வழியாக எருதுகள் கொண்டு வரப்படும். வீரர்கள் களமிறங்கி ஒடுகின்ற மாட்டைப் பிடித்து அடக்க முயற்சிப்பர். திமிலினைப் பிடித்து அடக்குவர். வெற்றி பெற்ற காளைக்கும், வீரனுக்கும் பரிசளிப்பர்.

2. உங்கள் ஊரில் பொங்கல்விழா நடைபெறுகிறது. அவ்விழாவில் சாக்கு ஓட்டம், தவளை ஓட்டம், புட்டியில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி, உருளைக் கிழங்கு பொறுக்குதல், ஊசியில் நூல் கோத்தல், கோலம் போடுதல், கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போட்டிகள் குறித்து நேரடி வருணனை செய்க.

சாக்கு ஓட்டம்

தத்தித் தவழும் நந்தவனங்களின் சாக்கு ஓட்டம் பாரீர்!

தவளை ஓட்டம்

நடை பயின்ற அன்னங்களின் தவளை ஓட்டம் இதோ பாரீர்!

புட்டியில் தண்ணீர் நிரப்புதல்,

பூஞ்சோலை மலர்கள் தண்ணீர் நிரப்பும் காட்சிப் பாரீர்!

இசை நாற்காலி

குயில் கீதங்களின் இசையில் அமரும் இனிய விளையாட்ட இதோ!

உருளைக் கிழங்கு பொறுக்குதல்

இளந்தளிர்கள் குனிந்து விளையாடும் உருளைக் கிழங்கு பொறுக்குதல் நிகழ்வை நோக்குங்கள்!

ஊசியில் நூல் கோத்தல்

கண்ணுக்கு விளையாட்டு நூல்கோரத்தல் பாரீர்!

கோலம் போடுதல்

புள்ளிமயில்கள் கோலம் போடும் அழகு பாரீர்!

கயிறு இழுத்தல்

பிரத்ததைச் சேர்க்கும் கயிறு திரத்தல் காணுங்கள்!

மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல்

நிதானமே பிரதானம் என்பதைச் சொல்லும் போட்டியைப் பாரீர்!

பானை உடைத்தல்

பண்பாட்டு அடையாளமான பானை உடைக்கும் இளங்காளைகளைப் பாரீர்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கீழ்கண்டவற்றுள் இலக்கியம் சாராத “ஏறுதழுவுதல்” பற்றிக் கூறும் நூலைக் கண்டறிக

  1. கலித்தொகை
  2. புறப்பொருள் வெண்பாமாலை
  3. கண்ணுடையம்மன் பள்ளு
  4. சிலப்பதிகாரம்

விடை : புறப்பொருள் வெண்பாமாலை

2.காளைகள் __________ போர் வீரர்களைப் போன்றிருந்தது.

  1. குறிஞ்சி நில
  2. முல்லை நில
  3. மருத நில
  4. நெய்தல் நில

விடை : மருதநில

3. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. கலித்தொகை – காளை
  2. சிலப்பதிகாரம் – ஏறுகோள்
  3. புறப்பொருள் வெண்பாமாலை- ஏறுகோள்
  4. கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

விடை : கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

3. சொற்றொடர்களை முறைப்படுத்தக

1. காளை முக்கியப்பங்கு
2. சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும்
3. வகிக்கின்றது.

  1. 3, 1, 2
  2. 1, 2, 3
  3. 2, 1, 3 

விடை : 2, 1, 3

3. வேறுபட்ட சொல்லைக் கண்டறிக

  1. ஏர் மாடுகள்
  2. எருதுகள்
  3. ஏறுதழுவுதல்
  4. ஏறுகள்

விடை : ஏறுதழுவுதல்

3. வேறுபட்ட சொல்லைக் கண்டறிக

  1. மஞ்சு விரட்டு
  2. சல்லிக் கட்டு
  3. ஏறுதழுவுதல்
  4. ஏறுகள்

விடை : ஏறுதழுவுதல்

3. ஏறுகள் பயன்பாடு இடம் பெறாத அகத்திணைகள் எவை?

  1. குறிஞ்சி, நெய்தல்
  2. முல்லை, மருதம்
  3. முல்லை, பாலை
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : குறிஞ்சி, நெய்தல்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை __________

விடை : மாடுகள்

2. தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு __________

விடை : ஏறுதழுவுதல்

3. நூறாண்டுகள் பல கடந்தும் தமிழர் தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருப்பது __________

விடை :  ஏறுதழுவுதல்.

4. பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது __________

விடை :  தமிழர் வரலாறு.

5. கலித்தொகையி்ல் __________ கலியில் ஏறுதழுவுதல் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன

விடை : முல்லை

6. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் __________

விடை : கண்ணுடையம்மன் பள்ளு

7. ஏறுதழுவுதல் குறித்த பல __________, __________ தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன

விடை : நடுகற்கள், புடைப்புச்சிற்பங்கள்

8. தமிழகத்தில் ஏறுதழுவலில் அடக்குபவர் எந்த __________ பயன்படுத்தக் கூடாது

விடை : ஆயுத்தையும்

9. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற __________

விடை : வளையத்தினை

10. காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு __________

விடை : ஸ்பெயின்

11. சல்லிகட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று __________ என அழைக்ககப்படுகின்றது.

விடை : ஜல்லிக் கட்டு

12. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான ஏறு தழுவுதல் __________ ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது.

விடை : 2000

சிறு வினா

1. தமிழகத்தின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு எது?

ஏறுதழுவுதல் விளையாட்டு

2. ஏறுதழுவுதல் (ஏறுகோள்) பற்றி எடுத்துரைக்கும் இலங்கியங்கள் யாவை?

  • கலித்தொகை
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • சிலப்பதிகாரம்
  • கண்ணுடையம்மன் பள்ளு

3. ஜல்லிக்கட்டு – பெயர்க்காரணம் தருக

  • சல்லிக்கட்டு என்பது திரிந்து ஜல்லிக்கட்டு என்று ஆனது
  • சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
  • சல்லி நாணயங்களைத் முடிந்து கொம்புகளில் கட்டி விடும் வழக்கமும் இருந்தாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்

4. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் வேறு சில பெயர்கள் யாவை?

ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள்

5. மாட்டுப் பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது?

தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல்.

6. காளைப்போர் இடம் பெற்றுள்ள் வெளிநாட்டுச் சித்திரங்கள் யாவை?

  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்கள்
  • கிரிட் தீவில் உள்ள கினோஸஸ் என்னுமிடத்திலுள்ள அரண்மனைச் சிற்பங்கள்

7. கரிக்கையூர் ஓவியத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் யாவை?

கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருகளைப் பலர் ஒன்று கூடி விரட்டுவது பண்டைய ஓவியக் காட்சி கரிக்கையூர் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது.

குறு வினா

1. ஏறு தழுவுதல் வேறு பெயர்கள் யாவை?

  • மாடு பிடித்தல்
  • மாடு விடுதல்
  • சல்லிக்கட்டு
  • காளை விரட்டு
  • வேலி மஞ்சு விரட்டு
  • மாடு அணைதல்
  • மஞ்சு விரட்டு
  • எருது கட்டி
  • ஏறு விடுதல்

2. மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படும் விதத்தினை எவிளக்குக

  • மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர்.
  • கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர்.
  • பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

3. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் காளை ஆற்றிய பங்கினை விளக்குக

  • சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment