TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 2.6 – துணை வினைகள்

2.6 துணை வினைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 2.6 – துணை வினைகள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Thunai vinaigal

9th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

பலவுள் தெரிக.

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ____________. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ____________.

  1. வந்தான் , வருகிறான்
  2. வந்துவிட்டான், வரவில்லை
  3. வந்தான் , வருவான்
  4. வருவான், வரமாட்டான்

விடை : வந்துவிட்டான், வரவில்லை

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்துக?

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில்

  • தனி வினை
  • கூட்டு வினை

என இரு வகைப்படுத்தலாம்.

2. கூட்டு வினை என்றால் என்ன?

கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.

3. முதல் வினை என்றால் என்ன?

ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்துதன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை முதல் வினை (MAIN VERB) எனப்படும்.

4. துணைவினைகளின் பண்புகள் யாவை?

  • துணை வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
  • இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
  • பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

கற்பவை கற்றபின்…

துணைவினைகளைப் பயன்படுத்துக.

1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ____________ மொழியாகும்.

விடை : வேறுபடுத்துவது

2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) ____________

விடை : பெற்றிருக்கின்றன

3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) ____________ மொழி தமிழ்.

விடை : புதுபித்துக் கொள்ளும்

4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ____________

விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்

துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

(வேண்டும், பார், உள், வா, விட)

1. வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க ____________

விடை : வேண்டும்

2. பார் – படத்தை உற்றுப் ____________

விடை : பார்

3. உள் – கடல் நீரினை ____________ வாங்கியது

விடை : உள்

4. வா – நாளை என் வீட்டுக்கு ____________

விடை : வா

5. விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து ____________ வேன்

விடை : விடு

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, துணைவினைகளை இட்டு எழுதுக

1. மார்னிங் எழுந்து

  • தமிழ்ச் சொல் : காலையில் எழுந்து
  • துணை வினை சொல் : காலையில் எழுந்துவிட்டாள்

2. பிரஷ் பண்ணி

  • தமிழ்ச் சொல் : பல் துலக்கி
  • துணை வினை சொல் : பல் துலக்கி முடித்தாள்

3. யூனிஃபார்ம் போட்டு

  • தமிழ்ச் சொல் : சீருடை அணிந்து
  • துணை வினை சொல் : சீருடை அணிந்து கொண்டாள்.

4. ஸ்கூலுக்குப் போனாள்

  • தமிழ்ச் சொல் :  பள்ளிக்கு போனாள்
  • துணை வினை சொல் : பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள்.

மொழியை ஆள்வோம்!

 படித்துச் சுவைக்க.

பூ மொழி

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்
கூடத்துச் சன்னலையும்
சமையலறைச் சன்னலையும்
விரிந்த கிளைகளால்
பார்த்துக் கொண்டிருக்கிறது.
கைகளசைத்துக் கால்களுதைத்துக்
கூடத்தில் கிடக்கும் சிசு
மிழற்றுகிறது ஒரு சொல்லை
சமையலறையில்
பணி முனைந்திருக்கிற அம்மா
அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்
பதில் அனுப்புகிறாள்.
விரல் நீட்டிச் சிசு பேசுகிறது மீண்டும்
அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள்
கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்
கூடத்துச் சன்னலுக்கும்
சமையலறைச் சன்னலுக்குமாய்க்
கிளைகளின் வழியே ஓடி ஓடிக்
கவனிக்கிறது அணில்.
பெருகும் சொற்களும்
அபூர்வ எதிர்வினைகளும்
அதீதக் குழப்பத்திலாழ்த்த
அணில் ஓடிக் களைக்கிறது சன்னல்களுக்கிடையே
அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து
அதன்மீது உதிர்த்துக்கொண்டிருப்பது தெரியாமல்.

-யூமா வாசுகி

இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்ப்பு : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்ப்பு : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்

பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்ப்பு : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்

பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

மொழி பெயர்ப்பு : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்

பிழை நீக்கி எழுதுக.

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

  • கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

வடிவ மாற்றம் செய்க.

நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க.

9th Standard - Thunai vinaigal - Neer Sularchi

நீர்ச்சுழற்சி

மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர் பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழை பொழிந்து நிலத்தை அடைந்து, கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியகாக்கப்படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும்… இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

வரவேற்பு மடல் எழுதுக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

மாவட்டக் கல்வி அலுவர்க்கு வாசித்து அளிக்கும் வரவேற்பு மடல்

மூதறிரே! தமிழ் அறிஞரே!

அன்பின் உருவமே! அறிவின் ஊற்றே பண்பின் சிகரமே! எளிமையின் வடிவமே! எளிமையுடன் பழகும் பண்பாளரே! அனுபவம் சான்ற மூதறிஞரே! தமிழ் மீது பற்று கொண்ட தமிழ் அறிஞரே! தங்கள் வருகையால் பெருமிதம் அடைகின்றோம். இன்முகத்தடன் தங்களை வருக! வருக! என வரவேற்கிறோம்.

தமிழ் நாவலரே! சொல்லின் செல்வரே!

கேட்காதவரையும் கேட்க வைக்கும் இனிமையும் நகைச்சுவையும் கொண்ட “பேச்சாற்றல் மிக்க தமிழ் நாவலரே! எழுத்தாற்றல் மிக்க சொல்லின் செல்வரே!” தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

கடமை தவறாதவரே! நேர்மையானவரே!

காலம் தவறாமல் பணிக்கு வந்து கடமை தவறாதவரே! உங்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். உண்மையே ஒருவரை உயர்த்தும் என்பதற்குச் சான்றான நேர்மையானவரே! உங்களை வருக! வருக! என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நாள் :
இடம் : திருநெல்வேலி

இவண்
இலக்கிய மன்றச்செயலர்

நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

– கவிமணி

திரண்ட கருத்து

காடு, மலை குதித்து வந்தேன். காடும் செடியும் கடந்து வந்தேன். சமவெளி எங்கும் தவழ்ந்து வந்தேன். ஊறாத ஊற்றிலும் உட்புகுந்து, மணல் ஓடைகள் பொங்கி ஓடி வந்தேன்.

மோனை நயம்

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • ல்லும் – டந்து
  • ல்லை – ங்கும் நான்

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • ல்லை – கல்லும்
  • றாத – ஏறி

சுவை நயம்

இப்பாடலில்”பெருமிதச் சுவை” பயின்றுள்ளது.

சந்த நயம்

நாட்டுப்புறச் சிந்து இராகத்தில் இப்பாடலைப் பாடலாம்

அணி நயம்

இப்பாடலில் ‘வந்தேன்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருட் பின்வருநிலை அணி அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக.

1. ஆற்றங்கரையோரம்

  • ஆறு
  • கரை
  • ஓரம்
  • கரம்
  • ஆரம்

2. கடையெழுவள்ளல்கள்

  • கடை
  • கல்
  • கள்
  • ஏழு
  • வள்ளல்

3. எடுப்பார்கைப்பிள்ளை

  • எடு
  • பார்
  • கை
  • பிள்ளை

4. தமிழ்விடுதூது

  • தமிழ்
  • விடு
  • தூது

5. பாய்மரக்கப்பல்

  • பாய்
  • மரம்
  • கப்பல்
  • கல்

6. எட்டுக்கால்பூச்சி 

  • எட்டு
  • கால்
  • பூச்சி
  • பூ

அகராதியில் காண்க.

1. கந்தி

  • கழுகு
  • வாசம்
  • கந்தகம்
  • தவப்பெண்

2. நெடில்

  • நீளம்
  • மூங்கில்
  • நெட்டெழுத்து

3. பாலி

  • ஆலமரம்
  • அணை
  • எல்லை
  • ஒரு பாஷை
  • பாற்பசு
  • செம்பருத்தி
  • கரை

4. மகி

  • பூமி
  • பசு

5. கம்புள்

  • சங்கு
  • கம்பங்கோழி
  • வானம்பாடி

6. கைச்சாத்து

  • கையொப்பம்
  • பொருள்பட்டி

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

1. அரிசி போடுகிறேன்.

  • புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

2. மழை பெய்தது.

  • மாலையில் மழை பெய்ததது.
  • நேற்று மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்ததது.

3. வானவில்லைப் பார்த்தேன்.

  • மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நாள்தோறும் மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

4. குழந்தை சிரித்தது.

  • தாெட்டிலில் குழந்தை சிரித்தது.
  • தாெட்டிலில் அழுத குழந்தை சிரித்தது.
  • அம்மாவைப் பார்த்ததும் அழுத குழந்தை சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து  சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து  சிரித்தது.
  • அழுத குழந்தை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

5. எறும்புகள் போகின்றன.

  • எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் கல்லில் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள்போகின்றன.
  • சர்க்கரையை நோக்கி எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

6. படம் வரைந்தான்

  • அவன் படம் வரைந்தான்.
  • அவன் விலங்குகளின் படம் வரைந்தான்.
  • இயற்கையைப் படம் வரைந்தான்.
  • இயற்கை மரங்களை படமாக வரைந்தான்
  • பறக்கும் பறவைகளை அழகாக படம் வரைந்தான்.

வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள், பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

1. பார்த்தேன்

9th Standard - Thunai vinaigal

எழுதிப் பார்த்தான் தடுக்கப் பார்த்தான்
கொடுத்துப் பார்த்தான் ஓடப் பார்த்தான்

2. கொடுத்தார்

9th Standard - Thunai vinaigal

எழுதிக் கொடுத்தார் படிக்கக் கொடுத்தார்
வாங்கிக் கொடுத்தார் பார்த்துக் கொடுத்தார்

3. நடந்தான்

9th Standard - Thunai vinaigal

பார்த்து நடந்தான் கேட்டு நடந்தான்
சிரித்து நடந்தான் வாங்கி நடந்தான்

4. சேர்ந்தார்

9th Standard - Thunai vinaigal

நடந்து சேர்ந்தார் போய்ச் சேர்ந்தார்
ஓய்ந்து சேர்ந்தார் வந்து சேர்ந்தார்

5. அமைத்தாேம்

9th Standard - Thunai vinaigal

ஓய்ந்து அமைத்தோம் பார்த்து அமைத்தோம்
கண்டு அமைத்தோம் கேட்டு அமைத்தோம்

வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.

வினையடி – வை, வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

வினையடி முதல் வினை துணை வினை
வை மூட்டையைத் தலையில் வைத்தான் அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார்.
வா நீ நாளை வீட்டுக்கு வா ஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர்
போ நான் நூலகத்துக்குப் போனேன் நான் பயந்து போனேன்
செய் அவன் அதைச் செய்தான் அவன் அதைச் செய்ய வைத்தான்
மாற்று அவன் கடையை மாற்றினான் அவன் கடையை மாற்றச் செய்தான்
இரு நான் தனியாக இருந்தேன் அவனை தனியாக இருக்கச் செய்தேன்
கொடு அவள் கொடுத்தாள் அவளுக்குக் கொடுக்க செய்தான்
கொள் நீ அதைக் கொள் அவன் அதை ஏற்றுக் கொள்ளட்டும்.
எழுது மாறன் எழுதினான் நான் அவனை எழுதச் செய்தேன்
விடு யாரையும் உள்ளே விடாதே அப்பா இனி வந்து விடுவார்
போடு தொப்பியை கீழே போடு சாப்பிட்டவுடன் இலையைச் சுருட்டிப் போட வேண்டும்.

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
  2. வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் புதிய அழகிய பொருள்களைப் பார்த்தால் ஆசை வரும். அவர்களைப் போல நானும் முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.
  3. அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
  4. பள்ளிகளை சுத்தமாக வைத்திருப்பேன்
  5. சாலையோரத்தில் மரங்களை நட்டு நீர் ஊற்றி வளர்ப்பேன்.
  6. பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.

கலைச்சொல் அறிவோம்

  • குமிழிக் கல் – Conical Stone
  • நீர் மேலாண்மை – Water Management
  • பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  • வெப்ப மண்டலம் – Tropical Zone

அறிவை விரிவு செய்

  • அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
  • தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
  • தண்ணீர் தேசம் – வைரமுத்து
  • வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
  • மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்

மறைநீர் (Virtual Water)

கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம். முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. புலப்படாத் தண்ணீர் என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும். ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.

( மா. அமரேசன் – கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment