TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.1 – ஒரு வேண்டுகோள்

3.1 ஒரு வேண்டுகோள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.1 – ஒரு வேண்டுகோள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - oru vendukol

7th Std Tamil Text Book – Download

நூல் வெளி

தேனரசன்

  • தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  • வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
  • வனப்பு – அழகு
  • நெடி – நாற்றம்
  • பூரிப்பு – மகிழ்ச்சி
  • மழலை – குழந்தை
  • மேனி – உடல்

பாடலின் பொருள்

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீசவேண்டும். உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும். சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.

  1. களைப்பு
  2. வனப்பு
  3. மலைப்பு
  4. உழைப்பு

விடை : வனப்பு

2. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.

  1. நெடி
  2. காட்சி
  3. மணம்
  4. ஓசை

விடை : நெடி

3. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.

  1. தங்கையின்
  2. தம்பியின்
  3. மழலையின்
  4. கணவனின்

விடை : மழலையின்

4. ‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. வனம் + இல்லை
  2. வனப்பு + இல்லை
  3. வனப்பு + யில்லை
  4. வனப் + பில்லை

விடை : வனப்பு + இல்லை

5. ‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வார்ப்எனில்
  2. வார்ப்பினில்
  3. வார்ப்பெனில்
  4. வார்ப்பு எனில்

விடை : வார்ப்பெனில்

நயம் அறிக

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச் சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

  • பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
  • உடைப்பவனின் – உழவனின்
  • சிகரங்களா – அலைகளா – காடுகளா
  • பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
  • வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

தாய்மையின் ஓவியத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.

2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?

இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிறு வினா

1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

  • நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையை செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.
  • உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.
  • தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
  • சிறு குழந்தையின் சித்திரத்தை தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.
  • ஆல்பஸ் மலைச் சிகரஙகள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சிந்தனை வினா

நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனிதநேயச் சிந்தனைய வெளிப்படுத்தும் வகையில் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

கற்பவை கற்றபின்

1. உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.

எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழிரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் பம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்டது. சிலம்பாட்டத்டதில் எதிரொளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்ற அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

2. உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து வந்து வகுப்பறையில் பகிர்க.

1. “நீங்கள் சேற்றில்
கால் வைத்தால் தான்
நாங்கள் சோற்றில் கைவைக்க முடியும்”

2. “உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”

3. “உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தேனரசன் எழுதிய கவிதை நூல்களில் பொருந்ததாது

  1. மண்வாசல்
  2. தலைப்பாகை
  3. வெள்ளை ரோஜா
  4. பெய்து பழகிய மேகம்

விடை : தலைப்பாகை

2. _____________ சிலையை செதுக்கினால், அதில் தலைப்பாகை நாற்றம் வீச வேண்டும்.

  1. நிலத்தை உழுபவரின்
  2. வீடு கட்டுபவரின்
  3. விவசாயின்
  4. பாறை உடைப்பவரின்

விடை : பாறை உடைப்பவரின்

3. ___________ உருவ வார்ப்பாக இருந்தால் ஈரமண் அதில் மணம் வீச வேண்டும்.

  1. ஆசிரியர்
  2. தச்சர்
  3. உழவரின்
  4. சிற்பி

விடை : உழவரின்

4. ____________ சித்திரத்தை தீட்டினால் அதில் பால்மணம் கமழ வேண்டும்.

  1. சிறு குழந்தையின்
  2. அன்னையின்
  3. முதியவளின்
  4. சிறு பெண்ணின்

விடை : சிறு குழந்தையின்

5. “வழித்தெடுக்குமாறு” பிரித்தெடுக்க கிடைப்பது _________

  1. வழித்த் + எடுக்குமாறு
  2. வழித்து + எடுக்குமாறு
  3. வழித்து + தெடுக்குமாறு
  4. வழித்த் + தெடுக்குமாறு

விடை : வழித்து + எடுக்குமாறு

6. “உயிர்ப்பில்லை” பிரித்தெடுக்க கிடைப்பது ________

  1. உயிர்ப் + பில்லை
  2. உயிர்ப்பு + இல்லை
  3. உயிர் + இல்லை
  4. உயிர் + பில்லை

விடை : உயிர்ப்பு + இல்லை

7. “சித்திரம் + ஆக்கினால்” பிரித்தெடுக்க கிடைப்பது _________

  1. சித்திரம் ஆக்கினால்
  2. சித்திரம் மாக்கினால்
  3. சித்திர ஆக்கினால்
  4. சித்திரமாக்கினால்

விடை : சித்திரமாக்கினால்

சேர்த்து எழுதுக

1. பிரும்மாக்கள் அ. அழகு
2. நெடி ஆ. மகிழ்ச்சி
3. வனப்பு இ. படைப்பாளர்கள்
4. பூரிப்பு ஈ. நாற்றம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. இயற்கையின் விந்தைத் தோற்றங்களாக தேனரசன் கூறியவை யாவை

  • ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள்
  • அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள்
  • அமேசான் காடுகள்
  • பனிபடர் பள்ளத்தாக்குகள்
  • தொங்கும் தோட்டங்கள்

ஆகியவை விந்தைத் தோற்றங்களாக தேனரசன் கூறியுள்ளார்.

2. உழவரின் உருவ வார்ப்பில் நிறைந்து இருக்க வேண்டியது யாது?

உழவரின் உருவ வார்ப்பில் ஈர மண்ணின் மணம் வீச வேண்டும்.

3. தேனரசனின் படைப்புகள் யாவை?

  • மண்வாசல்
  • வெள்ளை ரோஜா
  • பெய்து பழகிய மேகம்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment