TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.2 – கீரைப்பாத்தியும் குதிரையும்

3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.2 – கீரைப்பாத்தியும் குதிரையும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - keeraipathium kuthiraium

7th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • வண்கீரை – வளமான கீரை
  • பரி – குதிரை
  • முட்டப்போய் – முழுதாகச் சென்று
  • கால் – வாய்க்கால், குதிரையின் கால்
  • மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்

மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை

வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

நூல் வெளி

  • காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
  • மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
  • திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “ஏறப் பரியாகுமே” என்றும் தொடரில் “பரி” என்பதன் பொருள்

  1. யானை
  2. குதிரை
  3. மான்
  4. மாடு

விடை : குதிரை

2. பொருந்தாத ஓசை உடைய சொல்

  1. பாய்கையில்
  2. மேன்மையால்
  3. திரும்புகையில்
  4. அடிக்கையால்

விடை : திரும்புகையில்

3. ‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. வண் + கீரை
  2. வண்ணம் + கீரை 
  3. வளம் + கீரை
  4. வண்மை + கீரை

விடை : வண்மை + கீரை

4. “கட்டி + அடித்தல்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. கட்டியிடித்தல்
  2. கட்டியடித்தல்
  3. கட்டிஅடித்தல்
  4. கட்டுஅடித்தல்

விடை : கட்டியடித்தல்

சிறு வினா

1. கீரைபாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

கீரைப்பாத்தி குதிரை
1. மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
2. மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்;
3. வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். எதிரிகளை மறித்துத் தாக்கும்;
4. நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

நான் குதிரையும், ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும், தாக்கும்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “வரதன்” இயற்பெயர் கொண்டவர் _________

  1. பாரதியார்
  2. சுரதா
  3. பாரதிதாசன்
  4. காளமேகப்புலவர்

விடை : காளமேகப்புலவர்

2. “மறித்தல்” என பொருள் தரும் சொல் __________

  1. பாய்தல்
  2. தடுத்தல்
  3. அடைதல்
  4. உடைதல்

விடை : தடுத்தல்

குறு வினா

1. சிலேடை என்றால் என்ன?

ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது ‘சிலேடை’ எனப்படும்.

2. மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடிய புலவர் யார்?

காளமேகப்புலவர்

3. காளமேகப்புலவரின் படைப்புகள் யாவை?

  • திருவானைக்கா உலா
  • சரசுவதி மாலை
  • பரபிரம்ம விளக்கம்
  • சித்திர மாடல்

4.  காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

தனிப்பாடல் திரட்டு

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment