TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.5 – வழக்கு

3.5 வழக்கு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.5 – வழக்கு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - valaku

7th Std Tamil Text Book – Download

மதீப்பிடு

பொருத்துக.

1. பந்தர் அ. முதற்போலி
2. மைஞ்சு ஆ. முற்றுப்போலி
3. அஞ்சு இ. இடைப்போலி
அரையர் ஈ. கடைப்போலி
விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. வழக்கு என்றால் என்ன?

நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில்  பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.

  • இடக்கரடக்கல்
  • மங்கலம்
  • குழூஉக்குறி

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்த தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

போலிச் சொல் : நஞ்சு வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது
சரியான சொல் : நைந்து வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது

கூடுதல் வினாக்கள்

1. வழக்கு எத்தனை வகைப்படும்?

வழக்கு இருவகைப்படும்.

அவை

  1. இயல்பு வழக்கு
  2. தகுதி வழக்கு

2. இயல்பு வழக்கு என்பது யாது? அதன் வகைகளை எழுதுக?

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிபபிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

இயல்பு வழக்கானது மூன்று வகைப்படும். அவை

  • இலக்கணமுடையது
  • இலக்கணப்போலி
  • மரூஉ

3. மரூஉ என்றால் என்ன?

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

4. இடக்கரடக்கல் என்பது என்ன? சான்று தருக.

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

(எ.கா.)

  • கால் கழுவி வந்தான்.
  • குழந்தை வெளியே போய்விட்டது.
  • ஒன்றுக்குப் போய் வந்தேன்.

5. போலியின் வகைகளை கூறுக?

போலி மூன்று வகைப்படும்.

  • முதற்போலி
  • இடைபோலி
  • கடைப்போலி

6. முற்றுப்போலி என்றால் என்ன?

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

எ.கா. : அஞ்சு

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

  • எழுவாய் – வீரர்கள்
  • பயனிலை – நாட்டைக்
  • செயப்படுபொருள் – காத்தனர்

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

  • எழுவாய் – பொதுமக்கள்
  • பயனிலை – அந்நியத்துணிகளைத்
  • செயப்படுபொருள் – தீயிட்டு எரித்தனர்

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

  • எழுவாய் – கொற்கைத் துறைமுகத்திலே
  • பயனிலை – பாண்டியனுடைய மீனக்கொடி
  • செயப்படுபொருள் – பறந்தது

4. திருக்குறளை எழுதியவர் யார்?

  • எழுவாய் – திருக்குறளை
  • பயனிலை – எழுதியவர்
  • செயப்படுபொருள் – யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

  • எழுவாய் – கபிலர்
  • பயனிலை – குறிஞ்சிப்பாட்டை
  • செயப்படுபொருள் – எழுதிய புலவர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

  1. கம்பர் இராமாயணத்தை எழுதினார்
  2. ராமு கவிதை எழுதினான்
  3. கீதா ஓவியம் வரைந்தாள்
  4. ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
  5. வீரர்கள் நாட்டைக் காத்தனர்

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் = ______________

  • வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார் = ______________

  • மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்

2. பாட்டு பொருள் எழுது = ______________

  • பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர் = ______________

  • செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி = ______________

  • முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி

5. சுவர் சாந்து பூசினாள் = ______________

  • சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

7th Standard Tamil Guide - valaku - Puthiya Sorgalai Eluthuga

  • கண் + அழகு = கண்ணழகு
  • மண் + அழகு = மண்ணழகு
  • விண் + அழகு = விண்ணழகு
  • பண் + அழகு = பண்ணழழு
  • கண் + உண்டு= கண்ணுண்டு
  • மண் + உண்டு= மண்ணுண்டு
  • விண் + உண்டு = விண்ணுண்டு
  • பண் + உண்டு = பண்ணுண்டு

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

  • நூலகம்
  • எழிலகம்
  • தலைமையகம்
  • மருந்தகம்
  • அலுவலகம்
  • செயலகம்

தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் ____________ பால்களைக் கொண்டது.

  • ௩ (3)

2. எனது வயது ____________

  • கஉ (12)

3. நான் படிக்கும் வகுப்பு ____________

  • எ (7)

4.  தமிழ் இலக்கணம் ____________   வகைப்படும்.

  • ரு (5)

5. திருக்குறளில் ____________  அதிகாரங்கள் உள்ளன.

  • க௩௩ (133)

6. இந்தியா ____________ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

  • க௯௪எ (1947)

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

7th Standard Tamil Guide - valaku - Thalaivarin peyargalaii Eluthuga

1. மூதறிஞர் ____________

  • இராஜாஜி

2. வீரமங்கை ____________

  • வேலுநாச்சியார்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் ____________

  • கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன் ____________

  • சின்னமலை

5. கொடிகாத்தவர் ____________

  • திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் ____________

  • கக்கன்

7. தில்லையாடியின் பெருமை ____________

  • வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர் ____________

  • சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன் ____________

  • பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் ____________

  • காமராஜர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி ____________

  • நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி ____________

  • வாஞ்சிநாதன்

நிற்கு அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்.

  • கதைப்பாடல் – Ballad
  • பேச்சாற்றல் – Elocution
  • துணிவு – Courage
  • ஒற்றுமை – Unity
  • தியாகம் – Sacrifice
  • முழக்கம் – Slogan
  • அரசியல் மேதை – Political Genius
  • சமத்துவம் – Equality

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment