TN 7th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.1 – கலங்கரை விளக்கம்

1.1 கலங்கரை விளக்கம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.1 – கலங்கரை விளக்கம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - kalangarai vilakkam

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  • சங்ககாலப் புலவர்.
  • கடியலூரில் வாழ்ந்தவர்.
  • பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • தேடல் – தூண்
  • சென்னி – உச்சி
  • ஞெகிழி – தீச்சுடர்
  • உரவுநீர் – பெருநீர்பரப்பு
  • அழுவம் – கடல்
  • கரையும் – அழைக்கும்
  • வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

நூல் வெளி

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
  • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. வேயாமாடம் எனப்படுவது ____________

  1. வைக்கோலால் வேயப்படுவது
  2. சாந்தினால் பூசப்படுவது
  3. இலையால் வேயப்படுவது
  4. துணியால் மூடப்படுவது

விடை : சாந்தினால் பூசப்படுவது

2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.

  1. காற்று
  2. வானம்
  3. கடல்
  4. மலை

விடை : கடல்

3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.

  1. மீன்கள்
  2. மரக்கலங்கள்
  3. தூண்கள்
  4. மாடங்கள்

விடை : மரக்கலங்கள்

4. “தூண்” என்னும் பொருள் தரும் சொல் ______.

  1. ஞெகிழி
  2. சென்னி
  3. ஏணி
  4. மதலை

விடை : மதலை

குறுவினா

1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது – கலங்கரை விளக்கின் ஒளி

2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்

சிறுவினா

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கும்.
  • அது ஏணி கொண்டு ஏற முடியாத அளவுக்கு உயரத்தை கொண்டு இருக்கின்றது.
  • வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
  • அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரங்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைப்பது.

சிந்தனை வினா

கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • கடல் ஆய்வு செய்பவர்கள்
  • மீனவர்கள்
  • கப்பற்படை வீரர்கள்
  • கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

கற்பவை கற்றபின்

1. கடற்கரைக்கு சென்ற அங்குள்ள காடசிகளை கண்டு மகிழ்க

கடற்கரை காடசிகள் (மெரினா)

  • உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை மெரினாக் கடற்கரை
  • சென்னைத் துறைமுகத்தை உள்நாட்டு, வெளிநாட்டுக் கப்பல்கள் அணிவகுத்த வருகின்றன.
  • அவை நங்கூரமாய் பாய்ச்சி நிற்கும் அழகு அருமை
  • மீன் பிடிக்கச்சென்று மீண்டு வரும் மீனவர்கள் படகுகள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.
  • காலை நோக்கி வரும் கடல் அலைகளை பிடிக்க முடியாத மாயமான்கள்.
  • கடலைக் கண்டு மகிழ மக்கள் கூட்டம் ஏராளம்.
  • சங்குகளும், சிப்பிகளும் கடற்கரையில் கொட்டிக்கிடக்கின்றது.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. __________யின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. சிறும்பாணாற்றுப்படை
  3. நெடுநெல்வாடை
  4. முல்லைப்பாட்டு

விடை : பெரும்பாணாற்றுப்படை

2. பெரும்பாணாற்றும்படை மற்றும் பட்டினப்பாலை நூல்களின் ஆசிரியர் _________

  1. கடியலூர் உருத்திரங்கண்ணார்
  2. தொண்டைமான் இளந்திரையன்
  3. முடதாமக்கண்ணியார்
  4. நக்கீரர்

விடை : கடியலூர் உருத்திரங்கண்ணனார்

3. உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர் _________

  1. மதுரை
  2. புகார்
  3. கலங்கரை விளக்கம்
  4. கடியலூர்

விடை : கடியலூர்

4. _________ அறியாமல் கலங்குவது மரக்கலங்கள்

  1. ஆற்றின் துறை
  2. ஏரியின் துறை
  3. கடலின் துறை
  4. கால்வாயின் துறை

விடை : கடலின் துறை

5. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் ……………

  1. கலங்கரை விளக்கம்
  2. கடற்கரை
  3. மாடம்
  4. கப்பல்

விடை : கலங்கரை விளக்கம்

6. வானம் ஊன்றிய _________ போன்றது கலங்கரை விளக்கம்

  1. மரம்
  2. மதலை
  3. செடி
  4. கொடி

விடை : மதலை

குறு வினா

1. பெரும்பாணாற்றுப்படை சிறு குறிப்பு வரைக

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  • இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணார்.
  • இந்நூல் ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது.
  • இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

2. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

3. வேயா மாடம் பொருள் கூறுக

வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.

4. பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

  • திருமுருகாற்றுப்படை
  • பெருநாராற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • முல்லைப்பாட்டு
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநெல்வாடை
  • குறிஞ்சிப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • மலைபடுகடாம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment