TN 5th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.1 – எதனாலே, எதனாலே?

1.1 எதனாலே, எதனாலே?

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.1 – எதனாலே, எதனாலே?.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - Ethanale Ethanale

5th Std Tamil Text Book – Download

5th Standard - Ethanale Ethanale

பாடல் பொருள்

ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரண காரியங்களுடன் விளக்க முற்படுகிறது.

  • வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.
  • விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.
  • ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.
  • கோடைக் காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.
  • மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன. காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.
  • பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.
  • மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.
  • மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.
  • பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

மதிப்பிடு

பொருத்துக

1. விண்மீன் அ. உதிரும்
2. ரோஜாப்பூ ஆ. பறக்கும்
3. மேகம் இ. ஒளிரும்
4. இலை ஈ. சிவக்கும்
5. பறவை உ. கறுத்திருக்கும்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. வானவில் எப்படி தோன்றுகிறது?

வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.

2. கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?

பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

சிந்தனை வினா

நாம் வாழும் பூமி, சுழன்று கொண்டேயிருக்கிறது. ஆனால், அதில் வாழும் நாம் சுழல்வதில்லை. ஏன்? விடை காண்போமா?

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசை கொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டு இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட விட்டத்துக்குள் குறிப்பிட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது. நம் சூரியக் குடும்பம்.

சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கின்றன.

நாம் வாழும் பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1,674 கி.மீ. எனும் வேகத்தில் சுழல்கிறது. பூமியோடு சேர்ந்த நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழல் கொண்டுதான் இருக்கிறோம். நிலையாக நின்று கொண்டே அதன் வேகத்தில் சுழல்கிறோம்.

ஒரு பொருள் வேகமாக சுழலும் போது, அதன் மையப்பகுதி நிலைத்த தன்மை விளங்கும். அதன் அடிப்படையில் பூமி வேகமாக சுழலுவதல் அதன் மையத்தில் நாம் இருப்பதால் நிலையாக இருக்கிறோம்.

அறிந்து கொள்வோமா?

மோட்டார் வண்டி உருவான கதை

தந்தையுடன் சிறுவன் ஒருவன் தெருவில் சென்று கொண்டிருந்தான். எதிரில், ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியை மாடும் இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை. அதைப் பார்த்த சிறுவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அப்பாவிடம் அதைப் பற்றிக் கூறினான். அதுமட்டுமின்றி, அந்த வண்டியோட்டியிடமும் சென்று வண்டியைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டான். அந்த வண்டியின் பெயர் ரோடு – என்ஜின் எனவும் அது, நீராவியால் ஓடுகிறது எனவும் அறிந்துகொண்டான். அன்றே அந்தச் சிறுவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. மனிதர்களை ஓட்டிச் செல்லக்கூடிய வண்டிகளைச் செய்து, அவை மிக வேகமாக ஓடுமாறு செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

பெரியவனானதும் ஓர் இயந்திரத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். பகலில் அங்கு வேலை செய்வான். இரவில், வேகமாக ஓடும் வண்டியை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுவான். பல நாள் செய்த முயற்சி ஒரு நாள் வெற்றி பெற்றது. ஆம். மோட்டார் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மோட்டார் வண்டியைக் கண்டுபிடிக்க அயராது முயற்சி செய்து வெற்றி கண்ட அந்தச் சிறுவன்தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்ட் என்பவர். தாமேசொந்தமாக மோட்டார் தொழிற்சாலையொன்றை நிறுவி, ஆயிரக்கணக்கான மோட்டார்களை உருவாக்கினார். ‘மோட்டார் மன்னன்‘ என்று உலகமே அவரைப் புகழ்ந்தது. அவருடைய தொழிற்சாலையில் உருவான மோட்டார் கார்கள் உலகப் புகழ் பெற்றன.

இளம்வயதிலிருந்தே புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என எண்ணும் எண்ணத்தை நாம் வளர்த்துக்கொண்டால், முடியாததனையும் முடித்துக் காட்டலாம். விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்மை மென்மேலும் உயர்த்தும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்வு செய்க

1. சூரியஒளி நீர் துளிகளில் பட்டு எதிரொளிப்பதால் ___________ தோன்றுகிறது.

  1. மழை
  2. வானவில்
  3. இடி
  4. மின்னல்

விடை : வானவில்

2. வீண்மீன்கள் ___________ அணுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.

  1. நைட்ரஜன்
  2. ஆக்ஸிஜன்
  3. ஹைட்ரஜன்
  4. கார்பன்

விடை : ஹைட்ரஜன்

3. ரோஜா பூவில் ___________ என்ற நிறமி இருப்பதால் சிவந்த நிறத்தில் காணப்படுகிறது.

  1. அல்டராமெரைன்
  2. கருப்பு
  3. ஆந்தோசைனின்
  4. வெள்ளை

விடை : ஆந்தோசைனின்

4. பூமியின் மீது சந்திரன் ___________ விசை இருப்பதால் கடலில் அலைகள் தோன்றுகின்றன..

  1. ஈர்ப்பு
  2. சுழற்சி
  3. மின்னிறக்கம்
  4. வளிமண்டலம்

விடை : ஈர்ப்பு

வினாக்களுக்கு விடையளிக்க.

1. ரோஜாப்பூ சிவப்பு நிறத்தில் காணப்படுவதன் காரணம் யாது?

ரோஜாப்பூவில் ‘ஆந்தோசைனின்’ என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.

2. விண்மீன்கள் எவ்வாறு ஒளி வீசுகின்றன?

விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ஒளி வீசுகின்றன.

3. கோடைக் காலங்களில் எதற்காக இலைகள் உதிர்கின்றன?

கோடைக் காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன.

4. மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுவதற்கான காரணம் யாது?

மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எரிவதைப் போல் மின்னுகின்றன. காரணம், லூசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.

5. பறவைகள், பறக்கக் காரணம் யாது?

பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன. அவை, பறப்பதற்கு உதவுகின்றன.

6. மின்னல் எதனால் மின்னுகிறது?

மின்னல் மின்னிறக்கத்தால் மின்னுகிறது.

7. மேகம் கறுப்பாகத் தோன்றுவது ஏன்?

மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால், சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment