TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.5 – சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.5 – சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Sangakala kalvettum en ninaivugalum

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ஐராவதம் மகாதேவன் எழுதிய இக்கட்டுரை ‘கல்வெட்டு’ இதழில் வெளிவந்தது.
  • இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார்.
  • தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
  • சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
  • அவருடைய ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்பட்டுள்ளன.
  • ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது.
  • பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப் பணி.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? – விளக்குக.

முன்னுரை:-

இலக்கியங்கள் அவை உருவான காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள்.

இப்பகுதியல் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

எழுத்து வடிவம்:-

கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் சங்ககால எழுத்து வடிவமான “தமிழ்” பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

புகளூர் கல்வெட்டு:-

சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளில் காண முடிகிறது.

ஆறுநாட்டான் குன்று:-

ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்;

“யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகன் (இ)ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்”

என்று பொறிக்கப்பட்டுள்ளன.  “கோ அதல் செல் இரும்பொறை” என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்குதிகள் “செல்வக் கடுங்கோ வாழி அதன்” என்றும் 7-ம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதை காண முடிகிறது. இவர் மகன் பெயர் “பெருங்கடுங்கோ” பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன் “இங்கடுங்கோ” என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத் துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையல் உள்ளது. “பிரிட்டன்” “கொற்றன்” என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:-

சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய “பெருங்கடுங்கோ” இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் “நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்” (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறிய முடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்ற தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6, 7, 8வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று மகாதேவன் ஆய்வு மூலம் அறிய முடிகிறது.

முடிவுரை:-

புகளூர் கல்வெட்டு மூலம் சேர மன்னர்களின் வாழ்க்கை, பாலை, மருதம் பாடியவர்கள் பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.

கற்பவை கற்றபின்…

உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.

ஆசிரியர் இன்ற நாள் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன்.
மாணவர்கள் எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா?
ஆசிரியர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றி கூற இருக்கிறேன்.
மாணவர்கள் அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா?
ஆசிரியர் அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.
மாணவர்கள் மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா?
ஆசிரியர் ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர் குறிப்பு காணப்படுகிறது
மாணவர்கள் அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை ஐயா?
ஆசிரியர் காலம் 12-ம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே!
மாணவர்கள் அக்கல்வெட்டு பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறு முடியுமா ஐயா?
ஆசிரியர் அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப்பாதையில் செல்கிறது
மாணவர்கள் நன்றி ஐயா!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சங்ககாலக் கட்வெட்டுகளும் என் நினைவுகளும்” என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்

  1. எழுத்து
  2. கல்வெட்டு
  3. தென்றல்
  4. கணையாழி

விடை : கணையாழி

2. ஐராவதம் மகாதேவன் எழுதிய நூல்

  1. கல்வெட்டு ஆராய்ச்சி
  2. தமிழ்கல்வெட்டியல்
  3. எர்லி தமிழ் எபிகிராபி
  4. கல்வெட்டியில்

விடை : ஐராவதம் மகாதேவன்

3. செங்காயபன் ஓர் 

  1. பெளத்தத்துறவி
  2. சமணத்துறவி
  3. அமைச்சர்
  4. புலவர்

விடை : சமணத்துறவி

4. புகளூர் கல்வெட்டு எந்நூற்றாண்டைச் சார்ந்தது?

  1. முதலாம்
  2. இரண்டாம்
  3. நான்காம்
  4. ஐந்தாம்

விடை : இரண்டாம்

5. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்

  1. ஐராவதம் மகாதேவன்
  2. தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
  3. வி. கிருஷ்ணமூர்த்தி
  4. கே.வி. சுப்பிரமணியார்

விடை : கே.வி. சுப்பிரமணியார்

சிறு வினா

ஐராவதம் மகாதேவன் பெற்றுள்ள விருதுகள் யாவை?

  • ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970)
  • இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992)
  • தாமரைத்திரு விருது (2009)

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment