TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 7.6 – தொன்மம்

7.6 தொன்மம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 7.6 – தொன்மம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Thonmam

12th Std Tamil Text Book – Download

இலக்கணத் தேர்ச்சி கொள்

1) பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.

  1. கர்ணன் தோற்றான் போ.
  2. வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!
  3. இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு.
  4. இந்தா போறான் தருமன்.

விடை ; வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!

2) தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.

  1. உருவாக்கப்பட்டு இறுகி விட்ட வடிவங்கள்.
  2. பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
  3. நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
  4. விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

விடை ; விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.

3) சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்

  1. கு. அழகிரிசாமி
  2. புதுமைப்பித்தன்
  3. ஜெயமோகன்
  4. எஸ். இராமகிருஷ்ணன்

விடை ; புதுமைப்பித்தன்

4) பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக.

அ) அறம் 1) கர்ணன்
ஆ) வலிமை 2) மனுநீதிச்சோழன்
இ) நீதி 3) பீமன்
ஈ) வள்ளல் 4) தருமன்
  1. 3, 2, 1, 4
  2. 4, 3, 2, 1
  3. 2, 4, 3, 1
  4. 4, 3, 1, 2

விடை ; 4, 3, 2, 1

5) தொன்மம் – விளக்கம் தருக.

  • சமய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
  • உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவகங்களாகவும் நின்றறு சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
  • அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது.
  • சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.

6) பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.

  • நம் அன்றாடப் பேச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.
  • “கிழிந்த கோட்டைத் தாண்டமாட்டான்” – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.
  • “மனுநீதிச் சோழன்” – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றி கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.

7) உன்மனம் ஒரு பாற்கடல்
    அதைக் கடைந்தால்
    அமுதம் மட்டுமல்ல
    ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
    நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?

  • தொன்மங்கள் முரண்பட்டவை
  • ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
  • இப்பாடலில் பாற்கடல், அமுதம், அலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?

  • தொன்மத்தை வெளிப்படுத்தம் முதன்மையான கருவி கதை
  • உலகில் பெரும்பாலன தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.

2. திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.

  • இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்
  • திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு  அழகிரிசாமி “விட்ட குறை”, “வெந்தழலால் வேகாது” என்னும் சிறுகதைகள்
  • ஜெயமோகன் – பத்மவியூகம்) எஸ். ராமகிருஷ்ணன் – அரவான் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.

3. தொன்மங்கள் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?

தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் மேல் வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.

3. தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?

  • தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் வழக்கில் இருக்கும் ஒன்றாகும்.
  • அது காலத்தைக் கடந்து நிற்பது;
  • இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
  • சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்குத் தொன்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • தொன்மங்கள் கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே ஆளப்படுகின்றன.

4. தொன்மம் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?

தொன்மங்கள் முரண்பட்டவை

ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.

உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை நீ அறிவாய் அல்லவா?

இங்குப் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.

5. பெண்ணியம் பற்றித் தொன்மன் கூறுவன யாவை?

தமிழில், கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகியும் பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரையை எரித்த நிகழ்வும் பின்வரும் புதுக்கவிதையில் அமைந்துள்ளவிதத்தை அறியலாம்.

“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”

கற்பவை கற்றபின்…

தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.

  • “தாண்டிக் கெட்டாள் சீதை
    தாண்டாமல் கெட்டாள் கண்ணகி”
  • இரண்டு அடியாவது வாங்கினால்தான்
    திருந்துவாய்” – வள்ளுவர் வாக்கு

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

மா. இராசமாணிக்கனார் (1907-1967)

இவரின் தந்தை அரசுப் பணி யாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம்வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’ என்று முடிவெடுத்து ஒரு தையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த்தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு எழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்.

ஆய்வு நெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று: “அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கும் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்”.

(மா. இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)

வினாக்கள்:-

1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மைப பற்றிக் கூறுக.

2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கபட்டன?

3. பிரித்தறிக; பேருதவி

4. இழந்து – உறுப்பிலக்கணம் தருக

5. காய்தல் – இலக்கணக்குறிப்பு வரைக

விடைகள்:-

1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு

2. 2006 – 2007 ஆம் ஆண்டு

3. பேருதவி =  பெருமை + உதவி

4. இழந்து = இழ + த் (ந்) + த் + உ

  • இழ – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

5. காய்தல் – தொழிற்பெயர்

தமிழாக்கம் தருக.

A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the air hostess. “Madam, what is the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.

Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”. She turned to the black guy and said, “ Sir, a seat awaits you in the first class”. At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his light on everyone. Or the rain that falls on every single shore. No distinction of our race or the color of our face. Nature’s gifts are there for all men rich or poor. (Courtesy: S.S.S. Bal Vikas)

தமிழாக்கம்:-

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். ச்று தூரம் சென்ற பணிப்பெண் ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.

“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைத்தட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவழக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளை வழங்கும்போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.

12th Standard - Thonmam - Villamparathai Nallithal siethiyaga martuga

புத்தகக் கண்காட்சி

– நமது சிறப்பு நிருபர் –

42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினமும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000 வாசகங்கள். 30,00,000 பார்வையாளர்கள் பங்குபெறும் திருவிழா.

நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!

விழா ஏற்பாடு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. ஆற அமர

விடை : ஒரு செயலை செய்யும் முன்ஆற அமர யோசித்து செயலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

2. ஆணி அடித்தாற் போல

விடை : நமது தேசிய கீதம் பாடும் போது மரத்தில் ஆணி அடித்தாற் போல அசையாமல் நிற்க வேண்டும்.

3. அகலக்கால்

விடை : தொழில் தொடங்கு முதன் சிந்தித்து அகலக்கால் வைக்காமல் சிறிய முதலுடன் தொடங்க வேண்டும்.

4. வழிவழியாக

விடை : தமிழர்களின் பண்பாடுவழிவழியாக பல தலைமுறைகளாக வளர்ந்தவை

5. கண்துடைப்பு

விடை : தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின் கண்துடைப்பாக ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுகின்றனர்.

இலக்கிய நயம் பாராட்டுக.

பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்

புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்

இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!

இரவெரிக்கும் பரிதியை – ஏழை
விறகெரிக்க வீசுவேன்

– நா. காமராசன்

ஆசிரியர் குறிப்பு:-

நா.காமராசன் 1942-ல் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். கவிஞர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்வர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத்துறை போன்ற சிறப்பினை உடையவர்.

திரண்ட கருத்து:-

பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவேலாடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறெகரிக்க பயன்படுத்துவேன்.

மோனை:-

குயவனக்கு பானை, செய்யுளுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : புயலை – புதிய, ரவில் – ரவலரோடு – ரவெரிக்கும்

எதுகை:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

சான்று : இவில் – இவலரோடு – இவெரிக்கும்

இயைபு:-

இறுதி எழுத்தே ஒசையோ ஒன்றி வருவது இயைபு

சான்று : கடலகளாக்குவேன் – தென்றலாக்குவேன் – பேசுவேன் – வீசுவேன்

அணி நயம்:-

கண்ணுக்கு மை அழகு, செய்யுளுக்கு அணி அழகு

அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.

கற்பனை நயம்:-

கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனைய விற்பனை செய்யாமல் தம் கவிதையிலே பயன்படுத்தியுள்ளார்.

புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்

தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

விடை : வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.

விடை : முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.

விடை : கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.

4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.

விடை : வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக்குட்டியும் கண்டேன்.

5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.

விடை : ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.

6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

விடை : பனை ஓலையால் கூரை வைத்திருந்தனர்.

பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.

இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

விடை:-

இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு? என்ன நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.

கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.

12th Standard - Thonmam - Vinappathai Nirapuga

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

  • பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
  • வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகல்ல நாங்கள்
  • பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
  • விண்ணில் பயணம் செய்திடுவோம்
  • விந்தைகள் பல புரிந்திடுவோம்
  • ஆடல்கள் மட்டும் ஆடும் பெண்கல்ல
  • விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்களைகள்
  • கணிதம் அறியா மக்குளல்ல நாங்கள்
  • கணினி விற்பன்னர்கள் நாங்கள்
  • நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
  • வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கு வலம் வரும்
  • காவல் தெய்வங்கள் நாங்கள்
  • விமானிகளாகி  விண்ணகத்தில் உலா வருவோம்
  • ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
  • ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
  • தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
  • மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
  • என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.

நிற்க அதற்குத் தக

பொதுச்சொத்துகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

[நம்முடைய வீட்டின்மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப்போலவே பொதுச் சொத்துகளின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக]
பொதுச்சொத்துகள் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள்
அரசுப் பேருந்து
  • அமரும் இருக்கையை இழுத்தல் கூடாது.
  • கண்ணாடி ஜன்னல் மெதுவாக ஏற்றி இறக்கவும்.
  • திண்பண்டம் தின்று விட்டு உதிரிகளைக் கீழே போடக் கூடாது.
வழிபாட்டுத் தலங்கள்
  • கை, கால், சுத்தம் செய்த பின்னர் ஆலயத்திற்குள் நுழைதல்
  • விபூதி, குங்குமம் சுவர்களில் தடவக் கூடாது.
  • விளக்கு வழிபாடு உரிய இடத்தில் விளக்கேற்றவும்.
  • காகிதம், இலை, பழத்தோல் வளாகத்தில் போடக் கூடாது.
பள்ளிக்கூடங்கள்
  • வகுப்பறையில் காகிதங்கள் கிழித்துப் போடக் கூடாது.
  • வகுப்பறையின் உள்ளே உணவு அருந்தக் கூடாது.
  • மேசைகளின் மீதும், சுவர்களின் மீதும் கிறுக்க, எழுதக் கூடாது.
  • கழிவறைகளிலும் தூய்மை பேண வேண்டும்.
மருத்துவமனைகள்
  • பரிசோதனைக்காக வரிசையில் நிற்க வேண்டும்.
  • பரிசோதனை, சிகிச்சையின் போது பேசுவதை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனை உள்ளே எச்சில் மற்றும் அசுத்தம் செய்யக் கூடாது.
  • பார்வையாளராகச் சென்று நோளயாளியாரையும் தொந்தரவு செய்யக் கூடாது.

படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)

  • Debit Card – பற்று அட்டை
  • Demand Draft – கேட்பு வரைவோலை
  • Withdrawal Slip – திரும்பப் பெறல்
  • படிவம் Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
  • Internet Banking – இணையவங்கி முறை Teller – விரைவுக் காசாளர்

அறிவை விரிவு செய்

  • தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்
  • முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா. வேங்கடாசலபதி
  • கல்வெட்டு – (இதழ்)
  • கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்
  • நீர்க்குமிழி – கே.பாலசந்தர்
  • வெள்ளை இருட்டு – இன்குலாப்
  • முள்ளும் மலரும் – உமா சந்திரன்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment