TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 7.6 – ஆகுபெயர்

7.6 ஆகுபெயர்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 7.6 – ஆகுபெயர்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - aagupeyar

9th Std Tamil Text Book – Download

மதீப்பிடு

பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் – விளக்குக.

பண்பாகுபெயர்

பண்புப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.

சான்று :- மஞ்சள் பூசினாள்

மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

தொழிலாகு பெயர்

தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

சான்று :- வற்றல் தின்றான்

வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

கூடுதல் வினாக்கள்

1. ஆகுபெயர் என்றால் என்ன?

ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயரை தொல்காப்பியர் ஏழாகவும், நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

3. இடவாகு பெயர் என்றால் என்ன?

இடப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

4. காலவாகு பெயர் என்றால் என்ன? 

காலப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.

5. எண்ணலளவை ஆகுபெயர் என்றால் என்ன? 

எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.

6. நீட்டலளவை ஆகுபெயர் என்றால் என்ன? 

நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.

கற்பவை கற்றபின்…

I. ஆகுபெயரைக் கண்டறிக.

அ. தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள் – தொழிலாகு பெயர்
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் – கருத்தாவாகு பெயர்

ஆ.மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது – இடவாகு பெயர்
நாடும் வீடும் நமது இரு கண்கள் – சினையாகு பெயர்

இ. கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் – தொழிலாகு பெயர்
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் – பொருளாகு பெயர்

ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – எண்ணலளவையாகு பெயர்
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். – காரியவாகு பெயர்

உ. ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது – தொழிலாகு பெயர்
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா? – இடவாகு பெயர்

ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.

அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.

  • மதுரையில் இரவு வணிகம் உண்டு

ஆ. இந்தியா  வீரர்கள் எளிதில் வென்றனர்.

  • இந்தியா எளிதில் வென்றது.

இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.

  • நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது

ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது

  • நீரின்றி உலகு இயங்காது

சிந்தனை வினா

1. தற்காலப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

தற்காலப் பேச்சு வழக்கில் ஆகுபெயர்

  • பால் வந்ததா? – என்பது பால் விற்பனை செய்யும் பால்காரருக்கு ஆகி வந்தது.
  • பேருந்து நிறுத்தத்தில் 12 போயிருச்சா? எனக் கேட்பது 12 எண்ணுள்ள பேருந்து ஆகி வந்தது.

தற்காலப் எழுத்து வழக்கில் ஆகுபெயர்

  • “ஈரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் இரு நாள் தெய்வ நூல் பயிலரங்கம்” என்ற செய்தித்தாள் செய்தியில் தெய்வநூல் என்பது திருக்குறள் நூலுக்கு ஆகி வந்தது.

2. பட்டப் பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

பட்டப்பெயர்கள் ஆகுபெயராகும்

சான்று

  • மகாகவி பாடினார் (பாரதி பட்டப்பெயராக ஆகி வந்தது)
  • ரோஜாவின் ராஜா (நேரு பட்டப்பெயராக ஆகி வந்தது)

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க

எல்லார்க்கும் பெய்யும் மழை

ஏந்திக்கொள்கிறார்கள் சிலர்
வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர்
வேறு வழியின்றி
ஒதுங்கிக்கொள்கிறார்கள் சிலர்
ஒத்துக்கொள்ளாதெனப்
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள்
சாக்கடையில் விழுந்து
சங்கமமாகின்றன சில
ஆனாலும்
எப்போதும்போல
இன்னமும்
எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை!

காலை

ஒவ்வொரு முறையும்
காவிரி ஆற்றைக்
கடந்து செல்கையில்
நீந்திக் களித்த நாட்கள்
நினைவுக்கு வந்தன!
குளித்து மகிழ்ந்த ஆற்றை
குழந்தையிடம் காட்டிய போது
அவள் கேட்டாள். . .
“எப்படி அம்மா. . .
மணலில் நீந்திக்
குளித்தாய்?”

மொழிபெயர்க்க.

Conversation between two friends meeting by chance at a mall.

Aruna : Hi Vanmathi! It’s great to see you after a long time.

Vanmathi : It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?

Aruna : Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?

Vanmathi : I came with my father. He has gone to buy tickets for a 3D movie.

Aruna : Which movie?

Vanmathi : Welcome to the jungle.

Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.

இரண்டு தோழிகள் வணிக வளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்

அருணா வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைப் பார்க்கிறேன் மகிழ்ச்சி
வான்மதி எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்!  உன்னைப் பாரத்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.
அருணா நான் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ?
வான்மதி நான் என் தந்தையுடன் வந்தேன். இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கச் சென்றிருக்கிறார்.
அருணா என்ன படம்?
வான்மதி காட்டுக்குள் வரவேற்பு
அருணா ஓ…. நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கப் போகிறேன்.

பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்

  • நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.

2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)

  • திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று

பிழை நீக்குக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லைன்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.

விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் . மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத் திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது!

“தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறைக்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள்.

வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதை ப்பற்றிச் சிந்தித்தாள். “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி  உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள்.

அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள்.

1. டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள்

டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்)

2. பாலை இறக்கினாள்

பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்)

3. தலைக்கு இருநூறு

ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்)

4. சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும்.

ஐந்து கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்)

5. தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும்.

முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்)

6. துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர்

நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்)

7. சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும்

சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்)

கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.

“எனது பயணம்” என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

தொடக்கம்

எனது பயண அனுபவம் பற்றிய சுவையான செய்திகளைத் தருகின்றேன்.

ஆயத்தம்

சென்னை செல்வதற்காக எங்கள் பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்திற்குத் தேவையான பொருட்கள், நொறுக்குத் தீனி மற்றும் உணவுகள் ஆகியவற்றை எடுத்து ஆயத்தம் ஆனோம்.

தொடர் வண்டி பயணம்

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து நெல்லை அதிவிரைவு வண்டியில் கிளம்பினோம். வண்டி நகர்த்தும் சில்லென்ற காற்று வீசத் தொடங்கியது. சன்னலின் ஓரத்தில் இருக்கை இருந்தால் மனம் கற்பனைக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களை எல்லாம் வண்டி கடந்து எல்லாம் வண்டி கடந்து வந்தது. மரங்களும், மலைகளும் வேகமாக ஓடின.

தொடர் வண்டி பயணம்

சென்னையில் இறங்கி வள்ளூவர் கோட்டம் சென்றோம். வள்ளுவர் வடித்த திருக்குறள் காட்சி கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது. பிறகு மெரினா கடற்கரை சென்றோம். நூல்களின் குவியல்ககளை கண்டு வியந்தோம். மாமல்லபுரம் சென்றோம். சிற்பங்களின் கலையழகில் மூழ்கினோம். தலைவர்களின் சமாதிகளை கண்டு கழித்தோம். எங்கள் உறவினர் வீட்டிற்கு சென்று இரவில் அங்கு தங்கிவிட்டு மறுநாள் கிண்டி சென்று காமராஜர் நினைவு மண்படம், அடையாறு ஆலமரம் ஆகிறவற்றை கண்டு கழித்தோம்.

திரும்புதல்

மீண்டும் தொடர் வண்டி மூலம் இரவு தொடர் வண்டியில் பயணம் செய்து மறுநாள் காலை திருநெல்வேலியை அடைந்தோம்.

நயம் பாராட்டுக.

வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
வளைந்துசெல் கால்களால் ஆறே!
அயலுள ஓடைத் தாமரை கொட்டி
ஆம்பலின் இதழ்களை விரித்தாய்
கயலிடைச் செங்கண் கருவரால் வாளை
கரைவளர் தென்னையில் பாயப்
பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்
பெருங்குளம் நிறைந்து விட்டாயே!

– வாணிதாசன்

திரண்ட கருத்து

வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளிகளில் புகுந்தாய் மணி போன்ற கதிர்களை விளைய்ச் செய்தாய், அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச் செய்தாய், சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலந்தில் ஒரு வானம் இருப்பதுபோல் தோன்றச் செய்கிறாய்.

மோனை நயம்

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • யலிடை – விளைவித்தாய்
  • யலிடை – ருவரால்

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • லிடை – அலுள
  • லிடை – பெரிடை

சுவை நயம்

இப்பாடலைப் படிக்கப் படிக்க, மனத்தில் மகிழ்வு உண்டாவதால் “உவகைச் சுவை” அமைந்துள்ளது.

அணி நயம்

செய்யுளின் அழகுச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகிழந்து போகும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்ந்துள்ளது.

மொழியை விளையாடு

புதிர் அவிழ்க்க.

நான்கெழுத்துக்காரன்;
முதல் இரண்டும்
அம்மாவில்
“மா“வைத் தொலைத்து நிற்கும்;
அடுத்த எழுத்தைச் சேர்த்தால்
வில்லின் துணைவன்;

கடை இரண்டும்
கணக்கில் ’இது’ என்பர்.!
முழுதாய்ப் பார்த்தால்
மேகத்திடை தெரிவான்!
அவன் யார்?

விடை :  அம்புலி

பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)

மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போலைப் பேரின்பம் அடையச் செய்கிறது.

சொற்களை உருவாக்குக.

9th Standard - aagupeyar - Sorkalai uruvakku

  • கால்
  • புத்தி
  • அதிகம்
  • வலை
  • கவலை
  • புல்
  • கல்
  • புதன்
  • கத்தி
  • தில்லை
  • காலை
  • அகல்
  • கறி
  • அறிவன்
  • காவல்
  • புத்தகம்
  • அவல்
  • தறி
  • கலை
  • அலை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

9th Standard - aagupeyar - Katchiyai Kandu kavinuru eluthuga கலைகள் சிறந்த நாடு
அது எம் தமிழ்நாடு
சண்டைகள் இல்லா
சமாதானப் புறாவானது
அது எம் தமிழ்நாடு
மதத்தின் குறியீடு
இல்லாத கோபுரச் சின்னம் கொண்டது
அது எம் தமிழ்நாடு
உலகம் போற்றும்
உன்னத தைத்திங்கள் தந்தது
அது எம் தமிழ்நாடு

அகராதியில் காண்க.

1. ஈகை

  • கொடை
  • கற்பகமரம்
  • காடை
  • பொன்
  • முகில்
  • வண்மை

2. குறும்பு

  • அரணிருக்கை
  • சிறுமை
  • பொல்லாங்கு
  • குறும்புத்தனம்

3. கோன்

  • அரசன்
  • இடையன்
  • தலைவன்
  • எப்பொருட்கும் இறைவன்

4. புகல்

  • உடல்
  • உபாயம்
  • குதிர்
  • சொல்
  • தஞ்சம்
  • சரண்

5. மாெய்ம்பு

  • தோள்வலி
  • பலம்

நிற்க அதற்குத்தக

சமூகத்திற்கு எனது பணிகள்

  • குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவேன்.
  • தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
  • மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியிறுத்துவேன்.
  • மழையைத் தரும் மரங்களை பாதுகாப்பேன்.
  • நாட்டின் கண்களான பெண்கள் உரிமையை பாதுகாக்க போராடுவேன்.

கலைச்சொல் அறிவோம்

  • செவ்வியல் இலக்கியம் – Classical Literature
  • கரும்புச் சாறு – Sugarcane Juice
  • பண்டமாற்று முறை – Commodity Exchange
  • காய்கறி வடிசாறு – Vegetable Soup
  • இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment