TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 5.4 – வீட்டிற்கோர் புத்தகசாலை

5.4 வீட்டிற்கோர் புத்தகசாலை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 5.4 – வீட்டிற்கோர் புத்தகசாலை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - veetrikor puthagasalai

9th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின்  வானொலி உரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.
  • சிறந்த எழுத்தாளர்
  • அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா‘ என்று அழைக்கப்ட்டார்.
  • இவர் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்ப ஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர்.
  • தம் திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர்
  • 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
  • ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.
  • முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார்.
  • சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

1. நீங்கள் விரும்பி படித்த நூல்கள் யாவை?

திருக்குறள், மணிமேகலை, தமிழ்விடு தூது புறநானூறு

2. அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளும் உனக்கு பிடித்தமானவற்றை எழுதுக.

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

நெடு வினா

நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

முன்னுரை:-

வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும் என்ற கருத்தை நம் ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தவர் பேரறிஞர் அண்ணா நூலகம், நூல்கள் குறித்து அண்ணாவின் வானொலி வெளிப்படுகின்ற கருத்துக்களைக் காண்போம்.

நூலகம்:-

  • வீடுகளில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல பொருட்களும், சிறு கடை அளவுக்கு உடைகளும், சிறு வைத்தியசாலை அளவுக்கு மருந்துகள் இருக்கும். ஆனால் புத்தகசாலை மட்டும் இருக்காது.
  • வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். மக்கள் மனத்திேல உலக அறிவு புக வழிவகை செய்ய வேண்டும்.
  • அவர்கள் உலகம் மற்றும் நாட்டை அறி ஏடுகள் வேண்டும். அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
  • கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் விஷேசங்களுக்குச் செல்லும்போது புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சிறு புத்தகச் சாலையை எளிதில் அமைக்கலாம்.

நூல்கள்:-

  • பூகோளம், சரித்திரம் தொடர்பான ஏடுகள் இருக்க வேண்டும்.
  • நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • சங்க இலக்கிய சாராம்சத்தைச் சாதாண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ஏடுகள் இருக்க வேண்டும்.
  • விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தரும் நூல்கள் இருக்க வேண்டும்
  • விடுதலைக்கு உழைத்தோர், மக்கள் மனமாசு துடைத்தோட, தொலை தேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள் விவேகிகள் ஆகியோர் வாழக்கைக்குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.

முடிவுரை:-

வீட்டிற்கோர் புத்தகசாலை

கற்பவை கற்றபின்

1. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்! – அறிஞர் அண்ணா

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே

இவை போன்ற பொன்மொழிகளை எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.

  • புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும் – டாக்டர் அப்துல் கலாம்
  • நாட்டிலுள்ள அறிஞர்களின் உள்ளங்களை எடுத்துக்காட்டும் கண்ணாடி புத்தகங்கள் – ரெட்வர்டு கிப்ரான்
  • நூல்நிலையம் ஆடம்பரம் அன்று அவசியம் – பெர்னாட்ஷா

2. சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடுவதன் காரணத்தை அறிக.

  • இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநான் (சீர்காழி. இரா.அரங்கநாதன்) 09.08.1892-ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
  • இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர். நூலகவியலின் ஐந்துவிதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்கழுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
  • நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு பலகலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்குகாக அமைக்கப்பட்ட “இந்திய நூலகவியல் பள்ளியில்” பணியாற்றினார்.
  • வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூல்களில் உறுப்பினராகவும், உயர் பதவிகளையும் பெற்றிருந்தார்.
  • ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
  • 27.09.1972-ல் பெங்களூரில் இறுதி நிலை அடைந்த சீர்காழி இரா.அரங்நாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்த நாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடுவதற்கான காரணங்கள் ஆகும்.

3. நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதை தெரிந்து கொள்க.

  • அகர வரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
  • நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர் யார்?

ஆபிரகாம் லிங்கன்

2. சிரிப்பு, சிந்தனை இரண்டும் மனிதனை எதனிடமிருந்து வேறுபடுத்துகிறது?

சிரிப்பு, சிந்தனை இரண்டும் மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துகிறது

3. தேடிப் பெற வேண்டுபவை யாவை?

  • நல்ல நண்பனைப் போன்ற நூல்
  • நல்ல நூலைப் போன்ற நண்பன்

4. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் – சிறு குறிப்பு வரைக

  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
  • இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.

5. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது

கன்னிமரா நூலகமம் (சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது)

6. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

7. லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகம் எங்கு அமைந்துள்ளது?

உலகின் மிகப் பெரிய நூலகமான லைப்ரரி ஆப் காங்கிரஸ் அமெரிக்காவில் உள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment