TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.3 – தமிழர் மருத்துவம்

3.3 தமிழர் மருத்துவம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.3 – தமிழர் மருத்துவம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Tamil maruthuvam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _______ பயன்படுத்தினர்.

  1. தாவரங்களை
  2. விலங்குகளை
  3. உலோகங்களை
  4. மருந்துகளை

விடை : தாவரங்களை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _______ நீட்சியாகவே உள்ளது.

  1. மருந்தின்
  2. உடற்பயிற்சியின்
  3. உணவின்
  4. வாழ்வின்

விடை : உணவின்

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _______

  1. தலைவலி
  2. காய்ச்சல்
  3. புற்றுநோய்
  4. இரத்தக்கொதிப்பு

விடை : இரத்தக்கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் _______ செலவிடும் நேரமாகும்.

  1. சுவைக்காக
  2. சிக்கனத்திற்காக
  3. நல்வாழ்வுக்காக
  4. உணவுக்காக

விடை : நல்வாழ்வுக்காக

குறு வினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும்

நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு தான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

  • 45 நிமிடத்தில் 3கி.மீ. நடைப்பயணம்
  • 15 நிமிடம் யோக, தியானம், மூச்சுப்பயிற்சி
  • 7 மணி நேர தூக்கம்
  • 3லிட்டர் தண்ணீர் அருந்துதல்

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

மூலிகை, தாவர இலை, உலோகங்கள், பாஷானங்கள், தாதுப்பொருள்கள் ஆகியன தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுகின்றனவாகும்

சிறு வினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்

தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணம், மன அழுத்தம், எது கேளிக்கை? எது குதூகலம்? எது படிப்பு? எது சிந்தனை? என்ற புரிதல் இல்லாமை ஆகியவற்றைக் கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம்

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்து விட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்து விட்டோம். இதுவே இன்றைக்கு பல நோய்கள் பெருக மிக முக்கிய காரணம் ஆகும்.

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

  • நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.
  • எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
  • இரவுத்தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
  • உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடு வினா

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
  • வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப் பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.
  • அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
  • ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
  • ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.
  • அதனால் உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு
  • இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
  • மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான
    சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
  • அதாவது “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளின் படி நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கிறது.

சிந்தனை வினா

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைத் கையாளலாம்?

இயற்கையோடு இணைந்து உண்ணல்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு, மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்களுமே அவர்களது உடல் நலத்தையும் உள நலத்தையும் தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய சஞ்சீவி மருந்தாகப் கருதப்படுகிறது.

உண்ணும்  முறை

எளிதல் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை, பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது. நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்.

பயிற்சிகள்

தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணிநேர தூக்கம் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

தவிர்க்க வேண்டியன

நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனை குறைவாக சேர்த்தல் நன்று. உப்பு நிறைந்த பொருள்களான ஊறுகாய், அப்பளம், வடகம், கருவாடு, வறுத்த முந்திரிப் பருப்பு, வறுத்த உருளைச் சீவல், வாழைக்காய்ச் சீவல், புளித்த மோர் முதலியனவற்றை முழுவதுமாகத் தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, பனிக்கூழ், இனிப்புக்கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும்.

சமச்சீர் உணவு

“உணவே மருந்து மருந்தே உணவு” என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நூண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

கற்பவை கற்றபின்

நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.

  • பல மருந்துகளின் பெயர்களை மருத்துவ நூல்களில் படிக்கின்றோம். ஆனால் அந்த மருந்துகளைப் பார்த்ததே இல்லை. மற்றவர்களுக்கும் தெரிவது இல்லை. அதைத் தெரிந்து கொண்டால் அந்த மருந்துகளின் பயன்பாட்டை நாங்கள் பயன்படுத்த வழி உண்டு. அதற்கு மருத்துவராக விளங்கும் நீங்கள் வழிவகை செய்ய முடியுமா?
  • வேதிக்கலப்பு இல்லாத உணவு இன்று குறைவு. அப்படி இருக்கும்போது நோய்கள் விரைவாக வந்து விடுகின்றன. இதிலிருந்து மீண்டும் வர தாங்கள் கூறும் அறிவுரை யாது?
  • பழைய மருத்துவ தாவரங்கள் மீட்டுருவாக்கம் செய் வழிவகை உள்ளதா?
  • நவீன மருத்துவத்தைத் தவிர்த்து நாட்டு மருத்துவத்திற்கு நுழைய அரசு மருத்துவமனையில் பழைய மருத்துவ முறைக்கு வழி உள்ளதா?
  • தமிழர் மருத்துவத்தைப் பெரும்பாலான தமிழர்களே ஏற்றுக் கொள்ளாத போது, தமிழர் மருத்துவத்தை உலக அளவில் பறைசாற்றுவது எப்படி?

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள் _______ மக்கள்

  1. தமிழ்
  2. கேரள
  3. தெலுங்கு
  4. கர்நாடக

விடை : தமிழ்

2. _______ மக்கள் உடற்கூறு பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலும் சிறந்த விளங்கினர்.

  1. கேரள
  2. தெலுங்கு
  3. தமிழ்
  4. கர்நாடக

விடை : தமிழ்

3. தமிழ் மருத்துவம் _______ என்று அழைக்கப்படுகிறது.

  1. ஹோமியோபதி
  2. அலோபதி
  3. அக்குபஞ்சர்
  4. சித்தமருத்துவம்

விடை : சித்தமருத்துவம்

4. உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்குவது _______ கலை

  1. நாட்டியம்
  2. ஓவியம்
  3. யோகனம்
  4. உடற்பயிற்சி

விடை : சித்தமருத்துவம்

5. தமிழர் _______ சாங்கியம், ஆசிவகம் ஆகும்

  1. மெய்யியல்
  2. தத்துவங்கள்
  3. வரலாறு
  4. அறிவியல்

விடை : மெய்யியல்

6.  _______ மற்றும் _______ காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுககள் நம் மருத்துவத்தில் இருந்தன.

  1. இந்து, முஸ்லிம்
  2. சைவம், வைணவம்
  3. இந்து, சமணம்
  4. சமணம், பெளத்தம்

விடை : சமணம், பெளத்தம்

7.  _______களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்பத்தியது.

  1. ஆங்கிலேயர்கள்
  2. பாரசீகர்கள்
  3. ஆரியர்கள்
  4. முகலாயர்கள்

விடை : மெய்யியல்

7. தினமும் _______ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 3

8. வேர்பாரு! தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் _______

  1. தமிழர்கள்
  2. சித்தர்கள்
  3. சைவர்கள்
  4. முன்னோர்கள்

விடை : சித்தர்கள்

9. நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் _______ களையும் பயன்படுத்தினர்

  1. உலோகங்கள்
  2. அலோகங்கள்
  3. சாயங்கள்
  4. வேதியியல்

விடை : உலோகங்கள்

10. தாதுப் பொருள்களையும், உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை _______ மருத்துவத்தில் இருக்கிறது

  1. நவீன
  2. மூலிகை
  3. சித்த
  4. சீன

விடை : சித்த

11. நோய்நாடி நோய் முதல்நாடி” என்று கூறியவர் _______

  1. கம்பர்
  2. வள்ளுவர்
  3. ஒளவையார்
  4. திருமூலர்

விடை : வள்ளுவர்

பிரித்தெழுதுக

  • மருந்தென = மருந்து + என
  • உடற்கூறுகள் = உடல் + கூறுகள்
  • தங்களுக்கென = தங்களுக்கு + என
  • வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்
  • பழந்தமிழர் = பழமை + தமிழர்
  • கண்டறிந்து = கண்டு + அறிந்து
  • அறிந்திருப்பர் = அறிந்து + இருப்பர்
  • மருந்தில்லா = மருந்து + இல்லா
  • இவற்றுக்கெல்லாம் = இவற்றுக்கு + எல்லாம்
  • கண்டறிந்து =  கண்டு + அறிந்து
  • வாழ்வியலுடன் =  வாழ்வியல் + உடன்
  • துரிதமாக =  துரிதம் + ஆக
  • மாறிப்போனது = மாறி + போனது
  • ஒளிந்திருக்கும் = ஒளிந்து + இருக்கும்

சேர்த்தெழுதுக

  • இரத்தம் + கொதிப்பு = இரத்தக்கொதிப்பு
  • உடல் + பயிற்சி =  உடற்பயிற்சி
  • அவசியம் + ஆயிற்று = அவசியமாயிற்று
  • நாள் + பட்ட = நாட்பட்ட
  • மீண்டு + எழுந்து = மீண்டெழுந்து
  • என்று + எல்லாம் = என்றெல்லாம்
  • பட்டியல் + இட்டு =  பட்டியலிட்டு
  • சுற்று + சூழல் = சுற்றுச்சூழல்
  • மட்டும் + அன்றி = மட்டுமன்றி
  • மற்று + ஒரு =  மற்றொரு
  • உணவுக்கு + ஆக =  உணவுக்காக
  • நுண் + அறிவு = நுண்ணறிவு
  • சரி + அன்று =  சரியன்று
  • சமையல் + அறை =  சமயலறை
  • விழிந்து + எழுங்கள் =  விழித்தெழுங்கள்

குறு வினா

1. பாட்பகுதியில் வள்ளுவர் மருந்து பற்றிய குறளாக குறிப்பிடுவது எது?

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

2. மனிதன் தொடக்க காலத்தில எவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்?

வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்

3. எவை மனிதனை நலமாக வாழவைக்கும்?

சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் மனிதனை நலமாக வாழவைக்கும்.

4. பாரம்பரிய மருத்துவ முறையில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறந்திருந்தனர்?

  • தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றி அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலும் சிறந்து விளங்கினர்.
  • உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தங்களுக்கெனப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உருவாக்கிப் பின்பற்றி வந்தனர்.

5. பழந்தமிழரின் மருத்துவம் பற்றிய குறிப்புகள் எவற்றில் கிடைக்கின்றன?

பழந்தமிழர்கள் மருத்துவத்தை அறிந்தது மட்டுமின்றி மருத்துவத்தில் சிறந்ததும் விளஙகினார்கள் என்பதற்கான குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன.

6. பழந்தமிழர்கள் அறிந்திருந்த மருத்துவ முறைகள் யாவை?

மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் யோகம் முதலிய கலைளையும் அறிந்திருந்தார்கள்.

7. தமிழர் எவ்வுண்மையை விளக்கினர்?

நோயை இயற்கையில் கிடைக்கும் பெருட்கள், அப்பொருளின் தன்மை அதன் சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை தெளிவாக விளக்கினர்.

8. இன்று நோய்கள் பெருகுவதற்கான மூன்று காரணங்கள் யாவை?

  • மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான் முதன்மைக் காரணம்.
  • மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம்

9. நடை முறையில் உள்ள மருத்துவ முறைகள் சிலவற்றை கூறு

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment