TN 7th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.3 – திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.3 – திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - thikellam pugalurum thirunelveli

7th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. திருநெல்வேலி _________ மன்னர்களோடு தொடர்பு உடையது.

  1. சேர
  2. சோழ
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை : பாண்டிய

2. இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

  1. இமய
  2. கொல்லி
  3. பொதிகை
  4. விந்திய

விடை : பொதிகை

3. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

  1. காவிரி
  2. வைகை
  3. தென்பெண்ணை
  4. தாமிரபரணி

விடை : தாமிரபரணி

பொருத்துக.

1. தண்பொருநை அ. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை ஆ. குற்றாலம்
3. கொற்கை இ. தாமிரபரணி
4. திரிகூடமலை ஈ. முத்துக் குளித்தல்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக.

  • தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
  • இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
  • கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது

சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.

  • திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது உழவுத்தொழில்.
  • தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
  • குளத்து பாசனமும், கினற்றும் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது
  • மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

  • அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்
  • சங்கப்புலவரான மாறோக்கத்து, நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக்கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்
  • அயல் நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி

3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக

  • நெல்லையில் உள்ள தெருக்கள் அதன் பழமைக்குச் சான்றாக உள்ளது.
  • காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது
  • மேல வீதியை அடுத்து கூழைக்கடைத்தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும்  கடைத்தெரு ஆகும்
  • முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை

சிந்தனை வினா

மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
  • அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
  • சாதி மத பேதமின்றி மத நல்லிணகத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
  • சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.

  • திருநெல்வேலி
  • திருப்பூர்
  • வேலூர்
  • கோவை
  • மதுரை
  • திருச்சி
  • சேலம்
  • தூத்துக்குடி
  • தஞ்சாவூர்
  • திண்டுக்கல்
  • தஞ்சாவூர்
  • ஈரோடு

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “பாளையங்கோட்டை” அழைக்கப்படும் விதம் ……………..

  1. வட இந்தியாவின் ஆக்ஸ்போர்டு
  2. கிழக்கு இந்தியாவின் ஆக்ஸ்போர்டு
  3. மேற்கு இந்தியாவின் ஆக்ஸ்போர்டு
  4. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

விடை : தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

2. திருநெல்வேலியை முற்காலத்தில் ____________ என அழைத்தனர்

  1. வேணுவனம்
  2. நெல்வேலி
  3. திருவேலி
  4. வேவனம்

விடை : வேணுவனம்

3. “வேணுவனம்” என்பதன் பொருள் ……………..

  1. மூங்கில்நாடு
  2. மூங்கில் மரம்
  3. மூங்கில்காடு
  4. மூங்கில்

விடை : மூங்கில்காடு

4. “தன்பொருநை நதி” என அழைக்கப்படும் நதி __________

  1. காவிரி ஆறு
  2. கங்கை ஆறு
  3. தாமிரபரணி
  4. நொய்யல் ஆறு

விடை : தாமிரபரணி

5. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் __________ முதலிடம் வகிக்கின்றது

  1. திருநெல்வேலி
  2. மதுரை
  3. தென்காசி
  4. விருதுநகர்

விடை : திருநெல்வேலி

5. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் __________ என்னும் துறைமுகம் இருந்தது.

  1. பூம்புகார்
  2. கொற்கை
  3. காவிரிபூம்பட்டினம்
  4. காசிமேடு

விடை : கொற்கை

6. திருநெல்வேலியினை வளம் செழிக்க செய்யும் ஆறு _____________

  1. காவிரி ஆறு
  2. தாமிரபரணி
  3. கங்கை ஆறு
  4. நொய்யல் ஆறு

விடை : தாமிரபரணி

7. வணிகம் நடைபெறும் பகுதியை  _____________ என வழங்குதல் மரபு

  1. சேரன்மகாதேவி
  2. செங்கோட்டை
  3. பாளையங்கோட்டை
  4. பேட்டை

விடை : பேட்டை

8. காவற்புரை என்பது __________

  1. அகச்சாலை
  2. புறச்சாலை
  3. சிறைச்சாலை
  4. தெருச்சாலை

விடை : சிறைச்சாலை

8. அகத்தியர் __________யில் வாழ்ந்தார் என்பர்

  1. இமயமலை
  2. கிழக்குதொடர்ச்சி மலை
  3. பொதிகை மலை
  4. ஆண்டிஸ் மலை

விடை : பொதிகை மலை

குறு வினா

1. திருநெல்வேலி என பெயர் வரக் காரணம் யாது?

திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி  போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர்  பெற்றது.

2. புலவர்கள் திருநெல்வேலியின் சிறப்பை எவ்வாறு போற்றுகின்றனர்?

  • “திக்கெல்லாம்  புகழுறும் திருநெல்வேலி” – திருஞானசம்பந்தர்
  • “தன்பொருநைப் புனல் நாடு” – சேக்கிழார்

3. பாளையங்கோட்டை தென்னிந்தியாவின்  ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படக் காரணம் யாது?

பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்

4. திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்கு செழுமை செய்தவர்களை எழுதுக?

  • மாறோக்கத்து நப்பசலையார்
  • நம்மாழ்வார்
  • பெரியாழ்வார்
  • குமரகுருபரர்
  • திரிகூடராசப்பக் கவிராயர்
  • கவிராசப் பண்டிதர்

5. தமிழன்பால் ஈர்க்கப்ட்ட அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?

  • ஜி.யு. போப்
  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்

6. கூழைக்கடைத் தெரு – பெயர்க்காரணம் கூறுக

மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment