TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1.1 – எங்கள் தமிழ்

1.1 எங்கள் தமிழ்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 1.1 – எங்கள் தமிழ்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Engal tamil

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் நாமக்கல் வெ.இராமலிங்கனார்
இயற்பெயர் இராமலிங்கனார்
சிறப்புப்பெயர் நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர்
சிறப்பு தமிழறிஞர், கவிஞர், விடுதலைபோராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்
படைப்புகள் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி

சொல்லும் பொருளும்

  • ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
  • குறி – குறிக்கோள்
  • விரதம் – நோன்பு
  • பொழிகிற – தருகின்ற
  • நெறி – வழி
  • பொருள் – செல்வம், நற்செயல்
  • அருள் – இரக்கம்
  • அச்சம் – பயம்
  • அறம் – நற்செயல்
  • போக்கி – நீக்கி

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி

  • இப்பாடலின் ஆசிரியரை (வெ. இராமலிங்கனார்) நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.

  1. வழி
  2. குறிக்கோள்
  3. கொள்கை
  4. அறம்

விடை : வழி

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. குரல் + யாகும்
  2. குரல் + ஆகும்
  3. குர + லாகும்
  4. குர + ஆகும்

விடை : குரல் + ஆகும்

3. “வான் + ஒலி” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வான்ஒலி
  2. வானொலி
  3. வாவொலி
  4. வானெலி

விடை : வானொலி

நயம் அறிக

1. ‘எங்கள் தமிழ்’ பாடலிலுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • ருள்நெறி – துவே
  • ல்லா – ன்றும்
  • ன்புறவே – சைந்திடும்
  • கொல்லா – கொள்கை
  • ன்பும் – ச்சம்

2. ‘எங்கள் தமிழ்’ பாடலிலுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • ருள் – பொருள்
  • ன்புறவே – அன்பறமே
  • யாரையும் – தாரையும்
  • லாகும் – குலாகும்
  • புழாது – இழாது
  • ன்பும் – இன்பம்

3. ‘எங்கள் தமிழ்’ பாடலிலுள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

  • தரலாகும் – குரலாகும்
  • புகழாது – இகழாது
  • ஊக்கிவிடும் – போக்கிவிடும்
  • வானொலியாம்– தேன்மொழியாம்

குறு வினா

1. தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

  • தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்.
  • தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.

சிறு வினா

‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும். அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
  • தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார். தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

சிந்தனை வினா

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையாது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ் எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பொருத்துக

1. விரதம் அ. வழி
2. நெறி ஆ. நோன்பு
3. குறி இ. தருகின்ற
4. பொழிகிற ஈ. குறிக்கோள்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. “காந்தியக்கவிஞர்” என்றழைக்கப்படுபவர் ______________

  1. புரட்சிக்கவி
  2. பாவேந்தர்
  3. நாமக்கல் கவிஞர்
  4. உவமைக்கவிஞர்

விடை : நாமக்கல் கவிஞர்

3. நாமக்கல் கவிஞர் படைப்புகளுள் ஒன்று ______________

  1. பாஞ்சாலி சபதம்
  2. பாண்டியன்பரிசு
  3. என்கதை
  4. ஊரும் பேரும்

விடை : என்கதை

4. “அருள்நெறிஅறிவைத் தரலாகும்
அதுவே தமிழின் குரலாகும்” – என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. வெ. இராமலிங்கனார்
  3. பாரதிதாசன்
  4. கவிமணி

விடை : வெ. இராமலிங்கனார்

5. “பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதாரையும் இகழாது” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

  1. பொருள் – போற்றா
  2. யாரையும் – தாரையும்
  3. பொருள் – பெற
  4. புகழாது – இகழாது

விடை : புகழாது – இகழாது

6. “கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக” – இவ்வடிகளில் “குறி” என்னும் பொருள் தரும் சொல்

  1. குறிக்கோள்
  2. கொல்லா
  3. குறி
  4. நெறி

விடை : குறிக்கோள்

7. “கத்தியின்றி இரத்த மின்றி
    யுத்தமொன்று வருகுது” – இப்பாடலின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. நாமக்கல் கவிஞர்
  3. பாரதிதாசன்
  4. கவிமணி

விடை : நாமக்கல் கவிஞர்

குறு வினா

1. உலக மொழிகளில் தொன்மையான மொழி எது?

உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி

2. தமிழ் மொழியின் சிறப்புகள் சிலவற்றை கூறுக.

  • மென்மையும், இனிமையும், வளமையும் உடையது.
  • வாழ்வுக்குத் தேவையான அன்பையும், அறத்தையும் கூறுவது.
  • காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்கிறது.

3. நாமக்கல் கவிஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நாமக்கல் கவிஞர் காந்தியத்தைப் பின்பற்றியதால் காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

4. வெ. இராமலிங்கனாரின் படைப்புகள் யாவை?

  • மலைக்கள்ளன்
  • சங்கொலி
  • என்கதை
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment