TN 4th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 4 – ஆனந்தம் விளையும் பூமியடி

ஆனந்தம் விளையும் பூமியடி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 4 – ஆனந்தம் விளையும் பூமியடி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - anantham vilaiyum boomiyadi

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

நமது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து உமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்க.

  • நமது நாட்டில் அதிக இயற்கை வளம் நிறைந்துள்ளது.
  • நமது நாடு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூழந்து இயற்கை அரணாக விளங்குகிறது (தீபகற்பம்).
  • பலமொழி, இனம், மதம், சாதி போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் இந்திய மக்கள் என்ற பெருமை உண்டு (வேற்றுமையில் ஒற்றுமை)
  • இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும்.

உங்கள் ஊரிலுள்ள சிறப்புவாய்ந்த இடங்களைப் பற்றி, உமது கருத்துகளை எடுத்துக் கூறுக..

  • எமது ஊரில் வற்றாத நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி பாய்ந்து வளம் சேர்க்கிறது.
  • அதிகமாக இலக்கியவாதிகள் நிறைந்த பூமி எங்கள் ஊர்.
  • பாபநாசம், மாஞ்சோலை, மணிமுத்தாறு போன்ற இயற்கை செழிப்புமிக்க ஊர் எங்கள் ஊர்.
  • மூன்று மதத்தினரும் ஓரே இடத்தில் வாழும் ஊர் என் ஊர்.

சிந்திக்கலாமா!

கண்ணைப்போல காக்கவேண்டும் எவ்வாறு?

  • நம் கண்ணைப்போல் காக்கப்பட வேண்டுவது இந்த மண் ஆகும்.
  • மனிதனுக்கு கண் இல்லை என்றால் முகத்தில் அழகிருக்காது.
  • அதுபோல, பூமியல் வளமான மண் இல்லையென்றால் அதன் அழகே கெட்டுவிடும்.
  • மனிதன் வாழவும் அவனை வாழ வைக்கும் தாயாகவும் விளங்குவது இந்த மண். எனவே, இந்த மண்ணை நம் கண்ணைப்போல் காக்க வேண்டும்.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘இன்னல் ‘ – இச்சொல்லின் பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. “கும்மியடி” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி
  4. கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. “ஆனந்தம்” – இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடி – போற்றிடவே

5. கும்மியாட்டத்தைக் குறிக்கும் படம் …………………….

A.  4th standard - anantham vilayadum boomiyadi - Kuttathai kurikum padam B. 4th standard - anantham vilayadum boomiyadi - Kuttathai kurikum padam
C. 4th standard - anantham vilayadum boomiyadi - Kuttathai kurikum padam D. 4th standard - anantham vilayadum boomiyadi - Kuttathai kurikum padam

விடை : D

மொழியோடு விளையாடு

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

4th standard - anantham vilayadum boomiyadi - Kuttathai kurikum padam - Moyyodu vilaiyadu

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

4th standard - anantham vilayadum boomiyadi - padalil idam pecha ulla otha osai sorkal eluthuga

  • தேசமடி
  • கும்மியடி
  • போற்றிடடி
  • வாழ்ந்திடடி
  • பூமியடி
  • போனதடி
  • காத்திடடி

பொருத்துக

1. பாரதம், தேசம் இன்னல்
2. ஆனந்தம், சந்தோஷம் அன்னை
3. நெஞ்சம், உள்ளம் மகிழ்ச்சி
4. துன்பம், துயர் நாடு
5. தாய், அம்மா மனம்
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

அறிந்து கொள்வோம்

4th standard - anantham vilayadum boomiyadi - Arinthu kolvom

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டுப்புற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாகும். இந்த உணர்ச்சிகள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகின்றன.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment