TN 4th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2 – பனைமரச் சிறப்பு

பனைமரச் சிறப்பு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 2 – பனைமரச் சிறப்பு We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - Panaimara Sirappu

4th Std Tamil Text Book – Download

தமிழ் சின்னங்கள்

அறிந்து கொள்வோம்

4th Standard - Panaimara Sirappu - Tamilaga Chinnangal

சிந்திக்கலாமா!

மரம் வளர்ப்பதனால் நம் பெறும் பயன்களை குறித்து கலந்துரையாடுக.

முத்து பாரதி! மரம் வளர்ப்பதனால் நமக்கு என்னென்ன பயன்கள் உள்ளன?
பாரதி முத்து! மரம் வளர்ப்பதனால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன.
முத்து  அப்படியா! எங்கே? சொல்லு பார்ப்போம்.
பாரதி நமக்கு உயிர் காற்றைக் கொடுப்பதே மரங்கள் தான். மரங்கள் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு நமக்கு தேவையான உயிர் காற்றை கொடுக்கிறது.
முத்து மரங்களினால் வேறு என்ன பயன் உள்ளது?
பாரதி மரங்கள் நமக்குக் கனிகள், காய்கள், இலைகள், தண்டகள், வேர்கள் பூக்கள் என்று பலவற்றைத் தருகின்றன.
முத்து மரங்கள் மண் அரிப்பை எவ்வாறு தடுக்கிறது?
பாரதி மழைக்காலங்களில் அதிக நீர் பெருக்கெடுத்து ஓடும்போது நீருடன் மண்ணும் சேர்ந்து அரித்துக் கொண்டு ஓடும் அந்த சமயங்களில் மரங்களின் வேர்கள் மண்ணரிப்பை தடுத்து நிறுத்துகிறது.
முத்து நன்றாகச் சொல்கிறாய். இன்னும் கூடுதலாக சொல்லேன்.
பாரதி மரங்கள் நமக்கு வாசனை பொருட்கள், மூலிகைப் பொருட்கள், தளவாடப் பொருள்கள், எரிபொருட்கள் என பலவகையான பொருட்களை தருகின்றன.
முத்து மரம் வளர்த்தால் மழை வருமா?
பாரதி ஆம்! மரம் வளர்ப்பதால் தான் மழை வரும். மரங்கள் நீராவி சுழற்சிக்கு அதிக பயனை நல்குவதால், மரம் வளர்த்தால் மழை கிடைப்பது உறுதியே.
முத்து மரம் வளர்ப்பதனால் மனிதர்களுக்கு மட்டும் தான் பயனா?
பாரதி இல்லை, மரம் வளர்ப்பதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன, சிறு உயிரினங்கள் என்று எல்லாவற்றிற்கும் பயன் கிடைக்கின்றன.
முத்து நன்றி பாரதி! உன் மூலம் மரம் வளர்ப்பதனால் ஏற்ழுடம் பயனைப் பற்றி அறிந்து கொண்டேன். இன்று முதல் அதிக மரங்களை வளர்க்கப் போகிறேன்
பாரதி உன்னுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். இருவரும் சேர்ந்தே வளர்ப்போம்.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “வல்லமை” என்ற சொல்லின் பொருள் ____________________

  1. வலிமை
  2. எளிமை
  3. இனிமை
  4. புதுமை

விடை : வலிமை

2. “உயர” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________

  1. மேலே
  2. நிறைய
  3. தாழ
  4. அதிகம்

விடை : தாழ

3. “விழுந்து” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________________

  1. நடந்து
  2. பறந்து
  3. எழுந்து
  4. நின்று

விடை : எழுந்து

4. “கரையோரம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது __________

  1. கரை + ஓரம்
  2. கரை + யோரம்
  3. கரைய + ஓரம்
  4. கர + ஓரம்

விடை : கரை + ஓரம்

5. “அங்கெல்லாம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _________________

  1. அங் + கெல்லாம்
  2. அங்கு + எல்லாம்
  3. அங்கு + கெல்லாம்
  4. அங்கெ + ல்லாம்

விடை : அங்கு + எல்லாம்

6. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக 

  1. சாலையோரம் = சாலை + ஓரம்
  2. குருத்தோலை = குருத்து + ஓலை

வினாக்களுக்கு விடையளி

1. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை? 

நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கற்கண்டு, கருப்பட்டி

2. சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?

பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள்

3. பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

“மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை” இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். பனைமரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையினி சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். பனங்கொட்டைகளை சேகரித்து ஆறு, குளம், குட்டை பேன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.

4. பனைமரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.

  • பனைமரம் நீண்டு வளரக்கூடியது.
  • இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம்.
  • இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது. அதனால் தான் பனைக்குக் ”கற்பகத்தரு” என்ற பெயரும் உண்டு.
  • நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன.
  • பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன.
  • பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது.
  • மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
  • பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
  • பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
  • பறவைகளுக்கு வழிடமாகவும் விளங்குகிறது.

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக

4th Standard - Panaimara Sirappu - ungal vettil ulla marathalanna Porugaliai pattiyal iduga

  • கட்டில்
  • கதவு
  • கோழிக்கூடு
  • ஊஞ்சல்
  • மேசை
  • சன்னல்
  • மண்வெட்டி
  • அரிவாள்மனை
  • நாற்காலி
  • ஏணி
  • சுத்தியல்
  • மரப்பாவை

சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக

4th Standard - Panaimara Sirappu -sorkaluku uriya padangalai poruthuga

1. ஆ அ. கை
2. கை ஆ. காடு
3. பூ இ. பசு
4. நா ஈ. ஈ
5. ஈ உ. ரோஜா
6. கா ஊ. நாக்கு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – ஊ, 5 – ஈ, 6 – இ

ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக

4th Standard - Panaimara Sirappu - Oru Porul Tharum Sorkalai Vattamiduga

1. நிலவு – மதி,  ஆதவன்,  திங்கள்,  கதிரவன்,  சந்திரன்,  பரிதி.

  • மதி,
  • திங்கள்
  • சந்திரன்

2. அம்மா – சேய்,  அன்னை,  குழந்தை,  தாய்,  மழலை,  மாதா.

  • அன்னை
  • தாய்
  • மாதா

3. மகுடம் – அரசன்,  மணிமுடி,  தலை,  கிரீடம்,  அணிகலன்,  அரசி.

  • மணிமுடி
  • கிரீடம்
  • அணிகலன்

4. திரள் – கூட்டம்,  கடைவீதி,  நெருக்கம்,  மக்கள்,  கும்பல்,  நெரிசல்.

  • கூட்டம்
  • நெருக்கம்
  • கும்பல்

இலக்கணம் – பால்

4th Standard - Panaimara Sirappu - Ilakkanam Pal

வினாக்களுக்கு விடையளி

1. பால் என்றால் என்ன?

திணையின் உட்பிரிவே பால் ஆகும், பால் என்ற சொல்லிற்குப் பகுப்பு என்பது பொருள்.

2. பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பால் ஐந்து வகைப்படும்

  • ஆண்பால்
  • பெண்பால்
  • பலர்பால்
  • ஒன்றன்பால்
  • பலவின்பால்

3. ஆண்பால் என்றால் என்ன?

ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.

4. பெண்பால் என்றால் என்ன?

ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.

5. பலர்பால் என்றால் என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மனிதர்களைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

6. ஒன்றன்பால் என்றால் என்ன?

அஃறிணையில் ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்

7. பலவின்பால் என்றால் என்ன?

அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் எவை இருந்தாலும் அவை பலவின்பால் ஆகும்.

கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக

அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை, மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை, அண்ணன், மரங்கள், செடி, மலர், பூக்கள்

ஆண்பால் பெண்பால் பலர்பால்
படித்தான் அவள் சென்றனர்
எழுதினான் நாட்டிய மங்கை ஓடினர்
குயவன் தங்கை விளையாடினர்
ஆசிரியர் பெற்றோர்
அண்ணன்
ஒன்றன்பால் பலவின்பால்
வந்தது பறந்தன
வகுப்பறை மேய்ந்தன
வீடு கற்கள்
செடி மரங்கள்
மலர் பூக்கள்

பொருத்துக

4th Standard - Panaimara Sirappu - Poruthuga

1.  அவன் ஆடினாள்
2. அவள் ஓடியது
3. அவர்கள் வரைந்தான்
4. அது பாடினார்கள்
5. அவைகள் பறந்தன
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – உ

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. தமிழக அரசின் மாநில பழம் ……………..

  1. கொய்யா பழம்
  2. பப்பாளி பழம்
  3. மாம்பழம்
  4. ஆப்பிள் பழம்

விடை : மாம்பழம்

2. பனைமரம் ……………. உறுப்புகளை உடைய மரம்

  1. ஆறு
  2. எட்டு
  3. பத்து
  4. பன்னிரண்டு

விடை : பன்னிரண்டு

3. கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுவது ………………. ஆகும்.

  1. மட்டை
  2. ஓலை
  3. சில்லாட்டை
  4. நடுமரம்

விடை : ஓலை

4. கற்கண்டாக பயன்படுவது …………………. 

  1. பனஞ்சாறு
  2. நுங்கு
  3. பாளை பீலி
  4. பனங்காய்

விடை : பனஞ்சாறு

5. பண்டைய இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவியது ……………

  1. ஓலைச்சுவடி
  2. ஓவியம்
  3. கல்வெட்டு
  4. செப்பேடு

விடை : ஓலைச்சுவடி

6. தமிழ்ச்சமுகத்தின் உயிர் சாட்டியாக விளங்கும் மரம் ………..

  1. மா ரம்
  2. பலா மரம்
  3. பனைமரம்
  4. புன்னைமரம்

விடை : பனைமரம்

7. தமிழக அரசின் மாநில சின்னம் ……………..

  1. திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
  2. தஞ்சை பெரிய கோவில் கோபுரம்
  3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கோபுரம்
  4. தென்காசி கைலாசநார் கோவில் கோபுரம்

விடை : திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்

8. தமிழக அரசின் மாநிலப் பாடல் ……………..

  1. செந்தமிழ் நாடெனும்
  2. ஜன கன மன
  3. நீராரும் கடலுடுத்த
  4. சிந்து நதியின்

விடை : நீராரும் கடலுடுத்த

9. தமிழக அரசின் மாநில நடனம் ……………..

  1. குச்சுப்புடி
  2. பரத நாட்டியம்
  3. கதகளி
  4. தாண்டியா ஆட்டம்

விடை : பரத நாட்டியம்

10. தமிழக அரசின் மாநில விலங்கு ……………..

  1. வரையாடு
  2. சிங்கம்
  3. கரடி
  4. புலி

விடை : வரையாடு

11. தமிழக அரசின் மாநிலப் பறவை ……………..

  1. கிளி
  2. காகம்
  3. கொக்கு
  4. மரகதப்புறா

விடை : மரகதப்புறா

12. தமிழக அரசின் மாநில மலர் ……………..

  1. செம்பருத்தி
  2. செங்காந்தள்
  3. தாமரை
  4. ரோஜா

விடை : செங்காந்தள்

13. தமிழக அரசின் மாநில மரம் ……………..

  1. மா
  2. பலா
  3. வாழை
  4. பனை

விடை : பனை

14. தமிழக அரசின் மாநில விளையாட்டு ……………..

  1. மட்டைப்பந்து
  2. கோலி
  3. ஹாக்கி
  4. கபடி

விடை : கபடி

வினாக்களுக்கு விடையளி

1. பனைமரத்தின் பன்னிரண்டு உறுப்புகள் யாவை?

இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம்.

2. பனை ஓலை எதற்கெல்லாம் பயன்படுகிறது

பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன.

3. பனங்சாற்றின் பயன்கள் யாவை?

பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன் தருகிறது.

4. ஓலைச்சுவடிகள் எதற்கு பயன்படுகிறது?

நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவியது.

5. பனை மரத்தின் வேரின் பயன் யாது?

பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.

6. பனை மரத்தைச் சார்ந்து இருக்கும் பறவைகள் யாவை?

பனை மரத்தைச் சார்ந்து இருக்கும் பறவைகள் பனங்காடை, பனை உழவரான் ஆகியவை ஆகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment