TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 4.3 – உயிர்வகை

4.3 உயிர்வகை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 4.3 – உயிர்வகை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - uyir vagai

9th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் தொல்காப்பியர்
படைப்பு தொல்காப்பியம்
சிறப்பு தமிழில் கிடைத்த இலக்கண நூலாசிரியர், அகத்தியர் மாணவர்

மனப்பாடப் பாடல்

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றாேடு கணணே
ஐந்தறி வதுவே அவற்றாேடு செவியே
ஆறறி வதுமவ அவற்றாேடு மனனே
நெரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*

நூ.எ 1516

இலக்கணக்குறிப்பு

  • உணந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர்

  • நெறிப்படுத்து – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர் பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
  • இதன் இயற்றியவர் தொல்காப்பியர்
  • தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.
  • இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
  • 27 இயல்களை உடையது
  • எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
  • பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
  • குறிப்பாக பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அறிவியல் அறிஞர்களும் வியந்து போற்றுகின்றன.
  • தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. காணல்

விடை : தொடுவுணர்வு

குறு வினா

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

  • மூவறிவு – கரையான், எறும்பு
  • நான்கறிவு – நண்டு, தும்பி
  • ஐந்தறிவு – பறவை, விலங்கு

சிறு வினா

அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?.

  • புல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)
  • சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு + நுகர்தல்)
  • கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல்)
  • நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல்)
  • பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல்)
  • மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிவு)

கற்பவை கற்றபின்

அ. தட்டான் பூச்சி தாழப்பிறந்தால் தப்பாமல் மழை வரும்

அ. வானில் பறக்குது குதிரை, பறக்க பறக்க வால் குறையும் குதிரை – அது என்ன

விடை : விமானம்

இவை போன்ற அறிவியல் செய்திகள் கொண்ட பழமொழிகள். விடுகதைகளைப் படித்தும் கேட்டும், அவற்றின் அறிவியல் அடிப்படையை வகுப்பறையில் கலந்துரையாடுக

அறிவியல் சார்ந்த பழமொழிகள் விடுகதைகள்

விடுகதைகள்

1. செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன். கையிலும் வைக்கலாம், பையிலும் வைக்கலாம். நானின்றி இன்று மனித உயிர்கள் இல்லை நான் யார்?

விடை : அலைபேசி

2. காற்று புக முடியாத இடத்திலும் நான் புகுவேன். எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள தன்மையை செய்தியாகப் புகைப்படமாக அனுப்புவேன். ஆராய உகந்தவன் நான் யார்?

விடை : செயற்கைக்கோள்

பழமொழிகள்

  • அறிவை மேம்படுத்துவது அறிவியல்
  • அறிவியல் இல்லா ஆன்மீகம் முடமாகும்

2. ‘விமான நிலையத்தில்’ நான் கற்பனைக் கதை

விமான நிலையத்தின் நான் நின்று கொண்டு இருந்தேன். எண் அண்ணனின் வருகை விமானம் தாமதமானது. அங்கிருந்து நாற்காலியில் அமர்ந்தேன். புரியாத மொழியில் ஒருவர் விவரம் கேட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்தார். அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. காரணம் அவருடைய ஆடைகள் மலையில் வாழ்பவர். நான் இவரிடம் சென்று பேசினேன். எனக்கு மொழி புரியவில்லை என்றாலும் இவரின் செய்கை என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்த கொண்டேன். அவருக்கு உதவி செய்தேன். உரிய வழிகளைக் கூறினேன். அவர் மனம் மகிழ்ந்தார். அதற்குள் என் அண்ணன் வந்தான். புரியாத மொழி பேசிய அவரிடம் திடீரென அண்ணன் காலில் விழுந்தான். பிறகு விவரம் தெரிந்தது. இவர் ஒரு வெளிநாட்டு எளிமையான தலைவர் என்று நெகிழ்ந்து போனேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் __________

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. தொல்காப்பியம்
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. புல், மரம் __________

  1. ஓரறிவு உயிர்கள்
  2. ஈரறிவு உயிர்கள்
  3. மூவறிவு உயிர்கள்
  4. நான்கறிவு உயிர்கள்

விடை : ஓரறிவு உயிர்கள்

3. ஈரறிவு உயிர்கள் __________

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : சிப்பி, நத்தை

4. கரையான், எறும்பு ஆகியன __________

  1. ஈரறிவு உயிர்கள்
  2. ஓரறிவு உயிர்கள்
  3. நான்கறிவு உயிர்கள்
  4. மூவறிவு உயிர்கள்

விடை : மூவறிவு உயிர்கள்

5. நான்கறிவு உயிர்கள் __________

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : நண்டு, தும்பி

6. பறவை, விலங்கு ஆகியன __________

  1. ஈரறிவு உயிர்கள்
  2. ஓரறிவு உயிர்கள்
  3. ஐந்தறிவு உயிர்கள்
  4. நான்கறிவு உயிர்கள்

விடை : மூவறிவு உயிர்கள்

7. மனித உயிர் ……………..

  1. ஓரறிவு உயிர்
  2. ஆறறிவு உயிர்
  3. மூவறிவு உயிர்
  4. நான்கறிவு உயிர்

விடை : ஆறறிவு உயிர்

8. மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றாேடு கணணே – இவ்வடிகளில் அவற்றோடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. கானல்

விடை : நுகர்தல்

குறு வினா

1. ஈரறிவு உயிர்கள் யாவை?

சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள்

2. நான்கறிவு உயிர்கள் யாவை?

நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள்

3. ஐந்தறிவு உயிர்கள் யாவை?

பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள்

4. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் மற்றும் அதன் ஆசிரியர் யார்?

  • தமிழில் கிடைத்த முதல் இலக்கண தொல்காப்பியம்
  • அதன் ஆசிரியர் தொல்காப்பியர்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment