TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 3.3 – அகழாய்வுகள்

3.3 அகழாய்வுகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 3.3 – அகழாய்வுகள்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - agalayvugal

9th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

குறு வினா

தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் ஏன்?

நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி பழம்பெரும் வரலாற்றைப் பறை சாற்றகின்றன. நமது நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும்.

சிறு வினா

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க

  • அறிவியல் மிகவும் வேகமானது. ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து அதுவே சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்து முன்னது காணாமல் போய்விடுகின்றது.
  • கணினியை வைரஸ் அழித்து விடும். ஆனால், மண்ணாலும், கல்லாலும் ஆன பழம் பொருட்களை எந்த வைரஸூம் கூட அழிக்க முடியாது.
  • பழமையே புதுமை என்பதை மனதில் கொண்டு அகழாய்வை மேலும் மேற்கொள்ள வேண்டும்.

நெடு வினா

பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:-

நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.

அரிக்கமேடு அகழாய்வு:-

அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் காணப்பட்ட தொட்டிகளில் சாயம் தோய்க்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு:-

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.

கீழடி அகழாய்வு:-

மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.

இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன.

ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

முடிவுரை:-

தமிழகர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

கற்பவை கற்றபின்

1. இளைஞர்களிடையே பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது குடும்பமா? சமூகமா? – என்னும் தலைப்பில் சொற்போர் நிகழ்த்துக.

குடும்பமே

இனிய காலை வணக்கங்கள் தலைப்பிலேயே தீர்ப்பைக் கொடுத்துவிட்டு சொற்போரா? ஆம்! இளைஞர்களிடையே பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது குடும்பமே? சமூகமா? என்றும் தலைப்பில் குடும்பத்தை முதலில் வைத்து, சமுகத்தை பின் வைத்து இருப்பதை நோக்குங்கள். அன்னையிடம் அன்பு, தந்தையிடம் ஒழுக்கும், குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இவையெல்லாம் தெருவிலா பார்க்க முடியும். குடும்பத்தில் தான் பார்க்க முடியும். காந்தியடிகள், நேரு, கலாம் அய்யா அகிய உயர்ந்தோர் உயர்ந்ததிற்குக் காரணம் அவர்களின் பண்பாடு. அந்த பண்பாட்டிக்குக் காரணம் குடும்பமே!

சமூகமே!

என் நெஞ்சங்களே வணக்கங்கள் பல! எதிர் அணி பேசியது நன்றாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு எத்தனை குடும்பங்கள் நலமாக இருக்கின்றது. நீதிமன்றத்தில் எத்தனை குடும்ப நல வழக்குகள் இவை பண்பாட்டினை வளர்க்கிறதாம். வீட்டுக்கு வெளியே தான் உலகம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் சமுதாயதத் தொண்டு புரிவோரும் தான் இளைஞர் மத்தியில் பண்பாட்டினை வளர்க்கின்றது. காந்தியடிகள், நேரு, காலம் அய்யா ஆகிய உயர்ந்தோர் உயர்ந்ததிற்கு காரணம் அவர்கள் பண்பாடு. அந்த பண்பாட்டிற்கு காரணம் குடும்பம் அன்று. இவர்களின் ஆசிரியர்கள் அதனால் பண்பாட்டை வளர்ப்பது சமுதாயமே என்றுச் சொல்லி நிறைவு செய்கின்றேன்.

2. தொல்லியல் துறை சார்ந்த அலுவலர் ஒருவரிடம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வினாப்பட்டியலை உருவாக்குக.

  • ஐயா, தொல்லியல் துறை என்றால் என்ன?
  • அகழாய்வு எப்படிச் செய்கிறார்கள்?
  • எதற்காக அகழாய்வு செய்ய வேண்டும்?
  • தமிழின் பழமையான எழுத்துக்கள் யாவை?
  • கல்வெட்டுகளை எப்படிப் படியெடுப்பது?

3. உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடத்தைப் பார்வையிட்டுக் குறிப்பு எழுதுக.

விஜயமங்கலம் – குறிப்புகள்

விஜயமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பழமையான கோவில்கள் உள்ளன. அதில் பல கல்வெட்டுகள் உள்ளன. இவையனைத்தும் பண்டைத் தமிழ் கல்வெட்டுகள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. புலவர் ராசு ஐயா அவர்கள் இவ்விடங்களை ஆய்வு செய்து வரலாற்ற செய்திகளை உணர்த்தியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாததன் காரணம் யாது?

இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தலை அகழாய்வு செய்தல் எனப்படுகிறது.

3. பட்டிமண்டபம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் யாவை

சிலப்பதிகாரம், திருவாசகம், மணிமேகலை, கம்பராமாயணம்

4. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில்  கண்டுபிடிக்கப்பட்டது எது?

1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன

5. அறிவியலின் வகைகளை கூறுக

அறிவியலில் இரண்டு வகையுண்டு.

  • வணிக அறிவியல்
  • மக்கள் அறிவியல்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment