TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.5 – அணி இலக்கணம்

3.5 அணி இலக்கணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.5 – அணி இலக்கணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - ani ilakkanam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பிறிதுமொழிதல் அணியில் …………… மட்டும் இடம்பெறும்.

  1. உவமை
  2. உவமேயம்
  3. தொடை
  4. சந்தம்

விடை : உவமை

2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ……………….. அணி.

  1. ஒற்றுமை
  2. வேற்றுமை
  3. சிலேடை
  4. இரட்டுற மொழிதல்

விடை : வேற்றுமை

3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது ……………… அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. இரட்டுறமொழிதல்
  3. இயல்பு நவிற்சி
  4. உயர்வு நவிற்சி

விடை : இரட்டுறமொழிதல்

4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ………………….. அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. வேற்றுமை
  3. உவமை
  4. சிலேடை

விடை : சிலேடை

சிறு வினா

1. பிறிது மொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

உவமையை மட்டும் கூறி, பொருளை பெற வைப்பது பிறிது மொழிதல் அணி எனப்படும்.

எ.கா. :-

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து

தேர் கடலில் ஓடாது, கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறு எதுவும் தமக்குரிய இடத்தில் இருப்பதே நல்லது என்ற பொருளை பெற வைத்தால் இது பிறிது மொழிதல் அணி ஆயிற்று.

2. வேற்றுமை அணி என்றால் என்ன?

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.

சான்று:-

தாமரை

விளக்கம்:-

தாமரை – ஒருவகை மான், தாவும் மான்

கற்பவை கற்றபின்

திருக்குறளில் அணிகள் இடம் பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

  • பயின்று வரும் அணி : பிறிது மொழிதல் அணி

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

  • பயின்று வரும் அணி : உவமை அணி

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று

  • பயின்று வரும் அணி : உவமை அணி

எல்லா விளக்கும் விளக்கல் சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

  • பயின்று வரும் அணி : சொற்பொருள் பின்வருநிலையணி

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழு கலான்

  • பயின்று வரும் அணி :  வஞ்சப்புகழச்சி அணி

கூடுதல் வினாக்கள்

1. வேற்றுமை அணி சான்றுடன் விளக்குக

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

சான்று:-

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம்:-

தீயும் நாவும் சுடம் தன்மையில் ஒப்புமையாகக் கூறப்பட்ட பொருள்கள்

அவற்றுள் “ஆறாதே நாவினால் சுட்ட வடு” என வேறுபடுத்தி கூறியிருப்பதால் இது வேற்றுமை அணி ஆகும்.

2. இரட்டுறமொழிதல் அணி சான்றுடன் விளக்குக

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.

சான்று:-

குளத்திலும் காட்டிலும் தாமரை உள்ளது

விளக்கம்:-

குளத்திலும் காட்டிலும் தாமரை மலர் உள்ளது

குளத்திலும் காட்டிலும் தாவும் மான் உள்ளது

இவ்வாறு இரு பொருள்ட வருவதால் இரட்டுற மொழிதல் அணி ஆயிற்று

 

மொழியை ஆள்வோம்!

கேட்க.

தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகளைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

நம்பிக்கையே உயர்வு

அனைவருக்கும் இனிய வணக்கம். நம்பிக்கையே உயர்வு என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். கை இல்லாதவன் கூட நம்பிக்கையோடு இருந்தால், இந்த உலகை ஆளலாம். தன்னம்பிக்கை கொண்ட ஒரு சிலரின் வரலாறு தான் நாளைய சரித்திரம் என்று விவேகானந்தர் கூட கூறியுள்ளார். தன்னம்பிக்கை கொண்ட 100 இளைஞர்களை கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஆம்! தன்னம்பிக்கைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. விதை நம்பிக்கைதான் விருட்சம் ஆனது. மேகத்தின் நம்பிக்கைதான் மழையானது. ஆபிரகாம் லிங்கன் பலமுறை தோல்வி அடைந்த போதும் நம்பிக்கையை விடாமல் தேர்தலைச் சந்தித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் அவருடைய நம்பிக்கைக்கு வெற்றி கிடைத்தது. அதிபராக உயர்ந்தார்.

நம்பிக்கையே ஒருவரை உயர்வடையச் செய்யும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி! வணக்கம்!

நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்

வணக்கம். நல்வாழ்விற்கு தேவையான நற்பண்புகள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன்.

அன்பு, தியானம், பொறுமை, சினம் கொள்ளாமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒருமைப்பாட்டு உணர்வு, உண்மை பேசுதல், விடாமுயற்சி முதலிய நற்பண்புகள் ஒவ்வொர மனிதனிடமும் இருக்க வேண்டும். அதுதான் நல்வாழ்வைத் தரும்.

உண்மை காந்தியடிகளை உயர்த்தியது. அப்துல் கலாமின் குணம் அவரைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியது. எனவே நாம் ஒவ்வொருவரும் நல்ல பண்புகளை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். நற்பண்புகள் வழியே நாம் நடந்தால் நம் வாழ்வு நல்வாழ்வாக மாறும். இல்லை என்றால் நம் வாழ்வு சோதனைக்கு உள்ளாகும்.

எனவே நற்பண்புகள் கொண்ட நல்வாழ்வு வாழ்வோம் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!

சொல்லக் கேட்டு எழுதுக.

அம்பேத்கர் தமது வாழ்க்கையில் ‘புதிய திருப்பம்’ காண வழி ஒன்றைக் கண்டறிந்தார். அது ‘படிப்பு, படிப்பு, படிப்பே’ ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார். எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டும் கடன் வாங்கியும் புத்தகங்களை வாங்கித் தந்தார். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர் இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்தபிறகு அமெரிக்கா சென்ற அவர் தம் பழைய நண்பர்களையும் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைக் கொண்டுவந்தார்.

அறிந்து பயன்படுத்துவோம்

தான், தாம் என்னும் சொற்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)

தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.

மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.

(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)

(எ.கா.)

மாடுகள் தமது தலையை ஆட்டின.

கன்று தனது தலையை ஆட்டியது.

பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி ……………………. (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.

  • தனது

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ………………… (தனது/தமது) உழைப்பை நல்கினார்.

  • தனது

3. உயர்ந்தோர் ……………………….. (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

  • தம்மைத்தாமே

4. இவை …………………… (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

  • தாம்

5. குழந்தைகள் ……………… (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

  • தம்மால்

பிழைகளைத் திருத்தி எழுதுக.

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

விடை:-

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

கட்டுரை எழுதுக.

உழைப்பே உயர்வு

முன்னுரை

ஒருவரை வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக் காண்போம்.

உழைப்பின் பயன்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாடுடன் செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற்ற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட உழைப்பாலும் முயற்சியாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும் வலுப் பெறுகிறது.

உழைப்பின் சிறப்பு

உழைப்பு உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே என்றும் நிலைத்து நிற்கும். விலங்குகளும், பறவைகளும் தமக்குத் தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக் கொள்கிறேன். உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும்.

உழைப்பால் உயர்ந்தவர்கள்

தாமஸ் ஆல்லா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி.நாயுடு, டாக்டர் அப்துல்கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை

உழைப்பின் உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வாழ்வில் கடின உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

மொழியோடு விளையாடு

இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.

1. குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்?

விடை : பெருங்காயத்தால்

2. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?

விடை : நூல்

3. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?

விடை : போர்

4. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?

விடை : மாலை

5. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?

விடை : திங்கள்

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

1. வாழ்வுக்கு வெற்றிதரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன்.
2. சமுதாய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

  • குறிக்கோள் – Objective
  • பல்கலைக்கழகம் – University
  • நம்பிக்கை – Confidence
  • ஒப்பந்தம் – Agreement
  • முனைவர் பட்டம் – Doctorate
  • அரசியலமைப்பு – Constitution
  • இரட்டை வாக்குரிமை – Double voting
  • வட்ட மேசை மாநாடு – Round Table Conference

இணையத்தில் காண்க

இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் குறித்து இணையத்தில் தேடி எழுதுக

  • பாராளுமன்ற முறை.
  • தனித்தன்மையுடன் நெகிழ்வற்ற மற்றும் நெகிழ்ச்சியுடைமை கொண்ட அரசியலமைப்பு
  • அரசை நெறிமுறைப்படுத்தும் கொள்கைகள்
  • சக்தி வாய்ந்த மைய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி
  • அனைவருக்கும் வாக்குரிமை
  • சுதந்தரமான நீதித்துறை.
  • சமயச்சார்பற்ற அரசு.
  • ஒற்றைக் குடியுரிமை.
  • அடிப்படை உரிமைகள் கடமைகள்.
  • நீதித்துறையின் ஆய்வு அதிகாரம்.
  • உலகிலேயே எழுதப்பெற்ற மிகவும் நீளமான அரசியலமைப்பு

ஆகிய சிறப்புகள் கொண்டத நம் அரசியல் அமைப்பு ஆகும்.

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment