TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.5 – யாப்பு இலக்கணம்

2.5 யாப்பு இலக்கணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.5 – யாப்பு இலக்கணம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Yappu illakanam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. அசை ………………. வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : இரண்டு

2. விடும் என்பது …………….. சீர்.

  1. நேரசை
  2. நிரையசை
  3. மூவசை
  4. நாலசை

விடை : நிரையசை

3. அடி ……………… வகைப்படும்.

  1. இரண்டு
  2. நான்கு
  3. எட்டு
  4. ஐந்து

விடை : ஐந்து

4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ……………….

  1. எதுகை
  2. இயைபு
  3. அந்தாதி
  4. மோனை

விடை : மோனை

பொருத்துக.

1. வெண்பா அ. துள்ளல் ஓசை
2. ஆசிரியப்பா ஆ. செப்பலோசை
3. கலிப்பா இ. தூங்கலோசை
4. வஞ்சிப்பா ஈ. அகவலோசை
விடை :- 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

சிறு வினா

1. இருவகை அசைகளையும் விளக்குக.

நேரசை:-

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.

(எ.கா.) ந, நம், நா, நாம்.

நிரையசை:-

இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

(எ.கா.) கட, கடல், கடா, கடாம்

2. தளை என்பது யாது?

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.

3. அந்தாதி என்றால் என்ன?

ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை ஆகும்

4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வெண்பா. ஆசிரியப்பா. கலிப்பா. வஞ்சிப்பா. என பா நான்கு வகைப்படும்.

கற்பவை கற்றபின்

1. எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.

எழுத்து இலக்கணத்தின்படி

  • எழுத்து இரண்டு வகைப்படும். அது முதலெழுத்து, சார்பெழுத்து
  • உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18
  • முதலெழுத்துக்களைச் சார்ந்து தோன்றும் எழுத்தக்கள் சார்பு எழுத்துகள் ஆகும்.
  • சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும் அவை உயிர்மெய், ஆய்தம் உயிரெளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரகுறுக்கம், ஆய்தகுறுக்கும், குற்றியலுகரம், குற்றியலிகரம்

யாப்பு இலக்கணத்தின்படி

எழுத்து மூன்று வகைப்படும். அவை குறில், நெடில், ஒற்று

குறில் எழுத்து

  • உயிர்க் குறில்
  • உயிர்மெய் குறில்

நெடில் எழுத்து

  • உயிர் நெடில்
  • உயிர்மெய் நெடில்

ஒற்றுஎழுத்து

  • மெய்யெழுத்து
  • ஆய்த எழுத்து

2. வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களைத் திரட்டுக

  • நாலடியார்
  • நாண்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது
  • கார் நாற்பது
  • ஐந்திணை ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமொழி ஐம்பது
  • திணைமாலை நூற்றைம்பது
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • ஆசாரக்கோவை
  • பழமொழிநானூறு
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • கைந்நிலை

கூடுதல் வினாக்கள்

சரியான விடையை தேர்ந்தெடு

1. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ____________

  1. எழுத்து இலக்கணம்
  2. யாப்பு இலக்கணம்
  3. சொல் இலக்கணம்
  4. பொருள் இலக்கணம்

விடை : யாப்பு இலக்கணம்

2. ____________ எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை

  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. இறுதி

விடை : முதல்

3. ____________எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை

  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. இறுதி

விடை : இரண்டாம்

4. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது ____________

  1. முதல்
  2. இரண்டாம்
  3. மூன்றாம்
  4. இறுதி

விடை : இறுதி

5. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது _________

  1. மோனை
  2. இயைபு
  3. சீர்
  4. எதுகை

விடை : சீர்

பொருத்துக

1. எழுத்து அ. ஏழு
2. அசை ஆ. ஐந்து
3. சீர் இ. மூன்று
4. தளை ஈ. நான்கு
5. அடி உ. எட்டு
6. தொடை ஊ. இரண்டு
விடை : 1 – இ, 2 -ஊ, 3 – ஈ, 4 – அ, 5 – ஆ, 6 – உ

சிறு வினா

1. அடி என்றால் என்ன?

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்

2. தொடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.

குறு வினா

1. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் யாவை?

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகும்

2. எழுத்துகளின் வகைகளை கூறு?

  • குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
  • நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
  • ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து

3. சீர்களின் வகைகளை கூறு?

ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்

4. பா வகைகள் – விளக்கம் தருக

வெண்பா:-

வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.

ஆசிரியப்பா:-

ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.

கலிப்பா:-

கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

வஞ்சிப்பா:-

வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

மொழியை ஆள்வோம்!

கேட்க.

அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் கதைகளைப் பெரியோர்களிடம் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

மக்கள் பணியே மகத்தான பணி!

சான்றோர் சபைக்கு முதற்கண் வணக்கம். மக்கள் பணியே மகத்தான பணி என்பதைப் பற்றி பேச வந்துள்ளேன். மக்களக்குச் செய்யும் பணி இறைவனுக்குச் செய்யும் பணியாகும். இறைவனுக்குக் கொடுப்பதாக எண்ணி உண்டியலில் ஆயிரமாயிரமாய் லட்சம் லட்சமாய் போடுவது தங்கங்களைக் கொண்டு கொட்டுவது எவ்வளவு வேதனையான செயல். இது யாருக்கு பயன்படப் போகிறது. ஒரு வேளை உண்ண உணவும் உடுத்த உடையும் இல்லாத எத்தனையோ ஏழை மக்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள். உண்டியலில் கொட்டும் பணத்தை இல்லாத ஏழைகளுக்குக் கொஞ்சம் கொடுங்கள். ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் வாழ்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏழைகளுக்குப் பணம் கொடுக்க முடியாதவர்கள் தயங்க தேவையில்லை. மனம் இருந்தால் போதும் எத்தனையே பணிகளை மக்களுக்குக்காகச் செய்யலாம். மக்கள் பணி மகத்தான பணி என்று சொல்லி நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!

சொல்லக் கேட்டு எழுதுக.

ஒரு நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும். அவன் அறம் அல்லாதவற்றை நீக்கி, அறத்தை நிலைநிறுத்த வேண்டும். தான் குற்றம் செய்யுமிடத்து நாணி, தன் தகுதியை நிலைநிறுத்த வேண்டும். குற்றம் கண்டவிடத்துத் தானே நேரில் சென்று ஆராய்ந்து, நெறிமுறை தவறாது நீதி வழங்குதல் வேண்டும். இவ்வாறு விளங்கும் தலைவனை மக்கள், துன்பம் போக்கும் இறை என்றும், இருளை அகற்றும் ஒளி என்றும் கொண்டாடுவர் என்று அயோத்திதாசர் கூறுகிறார்.

ஒரே தொடராக்குக.

1. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

  • முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

2. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.

  • மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.

3. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

  • எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

4. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

5. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

  • அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.

6. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

  • குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வினாக்களுக்கு விடை எழுதுக.

விபத்தில்லா வாகனப் பயணம்

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  • ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
  • சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
  • சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
  • தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழி விட வேண்டும்.
  • எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
  • மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

வினாக்கள்

1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

  • தீயணைப்பு வாகனம்
  • அவசர சிகிச்சை ஊர்தி

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.

கடிதம் எழுதுக.

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவுமுறை கடிதம்

7/507, வடக்குத்தெரு
வெங்கடேஸ்வரபுரம்,
தென்காசி

நாள் : 18.10.2022

அன்புள்ள அத்தைக்கு,

அண்ணன் மகன் ராம் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய விரும்புகிறேன். எங்கள் ஆசிரியர் கவிஞர் மு.மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் என்ற நூல் பற்றிக் கூறினார். அந்நூலில் அவர் சொன்ன சில கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நூல் முழுமையும் நான் வாசித்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஈரோட்டில் அந்நூல் கிடைக்கவில்லை. எனவே, கோவையிலுள்ள புத்தக அங்காடிகளில் கிடைக்கும். அந்நூலை வாங்கி எனக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு அன்புள்ள
அ.சங்கர லிங்கம்

உறைமேல் முகவரி

பெறுநர்

15, முத்தமிழ் நகர்
தண்டையார்பேட்டை
சென்னை – 15

மொழியோடு விளையாடு

படத்தைப் பார்த்து எழுதுக

8th Standard - Padathai Parthu eluthu 8th Standard - Padathai Parthu eluthu
ரெழுத்துச் சொல் பூ
இரண்டு எழுத்துச் சொல் பால் வாழை
மூன்று எழுத்துச் சொல் கன்று பழம்
நான்கு எழுத்துச் சொல் புல்வெளி வாழை இலை
ஐந்து எழுத்துச் சொல் தாய்ப்பசு கன்றுகள்

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. அறக்கருத்துகளைப் படித்து, வாழ்வில் பின்பற்றுவேன்.
  2. அறவாழ்வு வாழ்ந்த சான்றோர்களைப்பற்றி அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

  • தொண்டு – Charity
  • நேர்மை – Integrity
  • ஞானி – Saint
  • பகுத்தறிவு – Rational
  • தத்துவம் – Philosophy
  • சீர்திருத்தம் – Reform

இணையத்தில் காண்க

சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த சான்றோர்களின் பெயர்ப்பட்டியலை இணையத்தில் தேடித் தொகுக்க.

  • தந்தை பெரியார்
  • அண்ணல் அம்பேத்கர்
  • காமராஜர்
  • காந்தியடிகள்
  • முத்துலெட்சுமி அம்மையார்
  • அயோத்திதாசர்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • மூவலூர் ராமாமிர்தம்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment