TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.5 – எச்சம்

3.5 எச்சம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.5 – எச்சம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Echam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ________ எனப்படும்.

  1. முற்று
  2. எச்சம்
  3. முற்றெச்சம்
  4. வினையெச்சம்

விடை : எச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ________

  1. படித்து
  2. எழுதி
  3. வந்து
  4. பார்த்த

விடை : பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் ________ வெளிப்படையாகக் காட்டாது.

  1. காலத்தை
  2. வினையை
  3. பண்பினை
  4. பெயரை

விடை : காலத்தை

பொருத்துக

1. நடந்து அ. முற்றெச்சம்
2. பேசிய ஆ. குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன். உண்டான் இ. பெயரெச்சம்
4. பெரிய ஈ. வினையெச்சம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

பெயரெச்சம்

  • நல்ல
  • எறிந்த
  • வீழ்ந்த
  • மாட்டிய
  • அழைத்த
வினையெச்சம்

  • படுத்து
  • பாய்ந்து
  • கடந்து
  • பிடித்து
  • பார்த்து

சிறு வினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்

2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.

  • ‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.
  • இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக

வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்

தெரிநிலை வினையெச்சம்

எழுதி வந்தான்

இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்

மெல்ல வந்தான்

இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

கூடுதல் வினாக்கள்

1. பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.

பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.

பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்

சான்று :-

  • பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
  • பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
  • பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

2. பெயரெச்சத்தின் வகைகளை எழுதுக

பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்

மொழியை ஆள்வோம்!

கேட்க.

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

உணவே மருந்து

வணக்கம்!

“உணவே மருந்து” என்ற தலைப்பில் சில நிமிடம் பேசுகின்றேன்.

உயிர் உடலோடு கூடிய நிலையில் எப்போதும் புறச் சூழலோடு பேராடி வருகிறது. அதில் வெற்றியடைவதே உடல் நலமாகும்; தோல்வி அடைந்தால் நோயில் முடியும். அந்நோயைத் தீர்த்து இன்மளிப்பதே மருந்து.

தமிகத்து உணவு, தொன்று தொட்டு மருத்துவ முறையில் சமைக்கப் படுகிறது. வெப்ப நாடான நமது நாட்டுச் சமைலுக்கு புழுங்கலரியே எற்றது. அன்றாடச் சமையலில் கூட்டுவனவற்றுள் மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்தமல்லி பித்தத்தை போக்கும். சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும். மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும். பூண்டு வளியகற்றி வயிற்றுப் பொருமலை நீக்கி பசியை மிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கி குருதியை தூய்மைப்படுத்தும்.  பெருங்காயம் வளியை வெளியேற்றும். இஞ்சி பித்தத்தை ஒடுக்கி காய்ச்சலை கண்டிக்கும். தேங்காய் நீர்க்கோவையை நீக்கும். கறிவேப்பிலை, மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத் தெளிவையும் உண்டாக்கும். சிரகம், பூண்டு கலந்த மிளகு நீர் சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும். உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் கீரை நல்லது.

இறுதியாக ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டும். வயிறு புடைக்க  உண்ணுதல் நோய்கு இடமளிக்கும். உடல் நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் நெடுநாள் நலமாக வாழலாம் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

சொல்லக்கேட்டு எழுதுக.

நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.

பொருத்துக

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல அ. ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல ஆ. பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல இ. தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல ஈ. எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல உ. எளிதில் மனத்தில் பதிதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ , 4 – ஆ, 5 – அ

அறிந்து பயன்படுத்துவோம்.

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும்.

ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா)

1. மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக.

திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை

பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

  • குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல

  • வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

  • பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.

4. உடலும் உயிரும் போல

  • உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.

5. கிணற்றுத் தவளை போல

  • கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. 

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை

உடல்நலம் போனால் உயிர்ப்பறவை போய்விடும். அதனால் தான் “உடம்பார் அழியின் உயிரால் அழிவர்” என்பார் திருமூலர். இவ்வுலகில் நீண்ட நாள் வாழ உடல் நலம் பேணல் வேண்டும்.

நோய் வரக் காரணங்கள்

மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு முறை மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்க வழக்க மாற்றம், உடற்பயிறிச்சியின்மை உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன.

நோய் தீர்க்கும் வழிமுறைகள்

நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நமது தவறான வாழ்க்கை முறைதான் காரணம் என்பதே ஆராய்ச்சியின் முடிவாகும். எனவே நமது வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமாக இத்தகைய நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும்.

வருமுன் காத்தல்

நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் நம்மை நலமாக வாழ வைக்கும். எளிமையாகக் கிடைக்கக் கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவும் மருந்தும்

ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கனிமங்கள் நூண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டும். சோறு காய்கறியும் அரை வயிறு; பால், மோர், நீர் கால் வயிறு; கால் வயிறு வெற்றிடமாக இருத்தல் வேண்டும். உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போது தான் வாயிலுள்ள உமிழ்நீர் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது; குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். உணவின் சத்துக்கள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்களை முக்கால் வேக்காட்டில் உண்ணல் வேண்டும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.

உடற்பயிற்சியின் தேவை

“ஒடி விளையாடு”, “மாலை முழுவதும் விளையாட்டு” என்பன உடலினை உறுதி செய்ய பாரதி கூறும் வழிமுறைகள். உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

முடிவுரை

இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடல். அதனைக் காப்பதே முதற்கடமை. சுவரை வைத்த சித்திரம் வரைய வேண்டும். உடலை வைத்துதான் உயிரைப் பேண வேண்டும்.

“உடலைப் பேணுவோம். உயிரைக் காப்போம்”
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

மொழியோடு விளையாடு

கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எடுத்து எழுதுக

8th Standard - Echam - padam saarntha sorkalai eluthuga

  • உரல்
  • சுக்கு
  • சீரகம்
  • மல்லி
  • புதினா
  • பூண்டு
  • வெற்றிலை
  • வெந்தையம்
  • எண்ணெய்
  • கருஞ்சிரகம்
  • கிராம்பு
  • உலக்கை
  • மிளகு
  • பட்டை
  • பூ
  • கடுகு
  • ஏலக்காய்
  • அண்ணாச்சி
  • கொத்தமல்லி
  • வத்தல்
  • சோம்பு
  • கசகசா

வட்டத்திலுள்ள பழமொழிகளை கண்டுபிடித்து எழுதுக

8th Standard - Echam - palamoligal kandupidithu eluthuga

  • முயற்சி திருவினையாக்கும்
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
  • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
  • அறிவே ஆற்றல்
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • வருமுன் காப்போம்
  • சுத்தம் சோறு போடும்
  • பருவத்தே பயிர் செய்
  • பசித்து புசி

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
  2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

  • நோய் – Disease
  • நுண்ணுயிர் முறி – Antibiotic
  • சிறுதானியங்கள் – Millets
  • பட்டயக் கணக்கர் – Auditor
  • பக்கவிளைவு – Side Effect
  • மூலிகை – Herbs
  • மரபணு – Gene
  • ஒவ்வாமை – Allergy

இணையத்தில் காண்க

நாம் நாள்தோறும் உண்ணும் காய்கறிகளின் மருத்துவப் பயன்கள் பற்றித் தகவல்களைத் தேடித் திரட்டுக.

காய்கறிகள் மருத்துவ பயன்கள்
சுரைக்காய் உடல் சூட்டை தனித்தல், மலச்சிக்கலை போக்குதல், சிறுநீர் வெளியேற்றல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், மூல நோயைப் போக்குதல்
வெங்காயம் சளியை போக்குதல், இருமல் போக்குதல், இரத்தம்  சுத்தமாக்குதல், உடல் சூட்டைத் தணித்தல்.
வாழை கல்லடைப்பு நீக்குதல், மூலநோய் நீக்குதல், குடல்புண் ஆற்றதல்
வெண்டை மூளை வளர்ச்சிக்கு உதவுதல், ஞாபக சக்தி கொடுத்தல்
பூசணி நீர் வெளியேற்றுதல், மலச்சிக்கலைத் தீர்த்தல், பசியை ஏற்படுத்துதல்.
தக்ககாளி கல்லடைப்பு நீக்குதல், செரிமானம் அளித்தல், குடல்புண் ஆற்றுதல்.
கேரட் கண்பார்வையைக் கூட்டல், எலும்புக்கு பலன் கொடுத்தல்.
பீட்ருட் இரத்தம் அதிகரித்தல், கண்பார்வையை கூட்டல், உடல் பருமனை குறைத்தல்
செளசெள சிறுநீர் வெளியேற்றல், எலும்பு வலுவடைதல்
முட்டைக்கோஸ் இதயத்துடிப்பு மற்றும் இரத்தத்தைச் சீராக்கல்.
காலிஃப்ளவர் உடல் நச்சுக்களை வெளியேற்றல், தசைக்கு வளர்ச்சியளித்தல், நினைவாற்றல் அதிகரித்தல், எலும்புக்கு உறுதி அளித்தல்.
பாகற்காய் சர்க்கரையைக் குறைத்தல், கல்லீரலைப் பலப்படுத்துதல், இளநரை தடுத்தல், கொழுப்பை நீக்கல் புற்றுநோயைத் தடுத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல்
கத்தரிக்காய் எலும்புக்கு உறுதி கொடுத்தல், இரும்புச்சத்தை அளித்தல்
எலுமிச்சை கண்பார்வை அளித்தல், சர்க்கையை குறைத்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், எலும்புக்கு உறுதி கொடுத்தல், உடல் பருமனை குறைத்தல், இரத்தத்தைச் சுத்திகரித்தல்.
பீன்ஸ் உடல் வளர்ச்சிக்கு உதவுதல், இருபும்சத்தை அளித்தல்.
கொத்தவரங்காய் எலும்புக்கு உறுதி கொடுத்தல், இரும்புசத்தை அளித்தல்
இஞ்சி செரிமானம் அளித்தல், குடல்புண் ஆற்றுதல், உடல் பருமனைக் குறைத்தல், அசதியைப் போக்குதல்
மிளகாய் இரத்தை சுத்திகரித்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், ஜீரண சக்தி அளித்தல்.
அவரை இரும்புச்சத்து அளித்தல், கண்பார்வை அளித்தல்
உருளை மலச்சிக்கலைப் போக்கல், மாவு சத்தளித்தல்
பீர்க்கங்காய் குடல் புண் ஆற்றல், கண்பார்வை அளித்தல்
புடலை மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி அளித்தல்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment