TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.5 – வினைமுற்று

2.5 வினைமுற்று

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.5 – வினைமுற்று.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Vinaimutru

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது” – இத்தொடரிலுள்ள வினைமுற்று __________

  1. மாடு
  2. வயல்
  3. புல்
  4. மேய்ந்தது

விடை : மேய்ந்தது

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று __________

  1. படித்தான்
  2. நடக்கிறான்
  3. உண்பான்
  4. ஓடாது

விடை : படித்தான்

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் __________

  1. செல்க
  2. ஓடு
  3. வாழ்க
  4. வாழிய

விடை : ஓடு

சிறு வினா

1. வினைமுற்று என்றால் என்ன?

ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை தெரிநிலை வினைமுற்று காட்டும்.

3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

க, இய, இயர், அல் என்பன வியங்கோள்  வினைமுற்று ஆகும்

4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
1. முன்னி்லயில் வரும். இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும்
பொதுவாய் வரும்.
2. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
3. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
4. விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ___________ குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்

  1. காலத்தினை
  2. செயலை
  3. திணையை
  4. உவமையினை

விடை :  வினைச்சொல்

3. பொருள் முற்றுப்பெற்ற ________ சொற்களை வினைமுற்று என்பர்

  1. பெயர்ச்
  2. காலச்
  3. சினைச்
  4. வினைச்

விடை : வினைச்

4. ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ________ வரும்

  1. வினைமுற்று
  2. வினையெச்சம்
  3. பெயரெச்சம்
  4. பண்புத்தொகை

விடை : வினைமுற்று

5. ________ – ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை காட்டும்.

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. தெரிநிலை பெயரெச்சம்
  3. தெரிநிலை வினைமுற்று
  4. குறிப்பு வினைமுற்று

விடை : தெரிநிலை வினைமுற்று

6. வினைமுற்று __________ வகைப்படும்

  1. 4
  2. 2
  3. 5
  4. 3

விடை : 2

7. க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்று வரும் வினைமுற்று __________ 

  1. ஏவல் வினைமுற்று
  2. தெரிநிலை வினைமுற்று
  3. குறிப்பு வினைமுற்று
  4. வியங்கோள் வினைமுற்று

விடை : வியங்கோள் வினைமுற்று

சிறு வினா

1. வினைச்சொல் என்றால் என்ன?

ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

2. வினைமுற்று எத்தனை வகைப்படும்?

தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

3. தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

4. திணையின் இரு வகைகளை எழுதுக?

  • உயர்திணை
  • அஃறிணை

6. பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பால் ஐந்து வகைப்படும். அவை

  • ஆண் பால்
  • பெண் பால்
  • பலர் பால்
  • ஒன்றன் பால்
  • பலவின் பால்

7. மூவிடங்களை கூறு?

தன்னிலை, முன்னிலை, படர்க்கை

மொழியை ஆள்வோம்

கேட்க

இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் 6கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

இயற்கையைப் பாதுகாப்போம்.

சொல்லக்கேட்டு எழுதுக. 

இயற்கையை விரும்புவது மட்டுமன்றி, அதைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது. அது நமது கடமை மட்டுமன்று; பொறுப்பும் ஆகும். நாம் விரும்பிக் கண்டு களித்த இயற்கைச் செல்வங்களை, வரும் தலைமுறையினருக்காகச் சேர்த்தும் பாதுகாத்தும் வைக்க வேண்டும். இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் எண்கள் அறிவோம். (விடுபட்ட கட்டங்களை நிரப்புக)

1 2 3 4 5 6 7 8 9 10
  ௪  ௭ ௧0
11 12 13 14 15 16 17 18 19 20
௧௨ ௧௩ ௧  ௪ ௧௫ ௧௬ ௧ ௭ ௧௮ ௧௯ ௧0
21 22 23௩ 24  ௪ 25 26 27 28 29 30
௨௧ ௨௨ ௨௩ ௨  ௪ ௨௫ ௨௬ ௨ ௭ ௨௮ ௨௯ ௨0

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

உலக ஈர நில நாள் பிப்ரவரி – 2
உலக ஓசோன் நாள் செப்டம்பர்  – 16 க௬
உலக இயற்கை நாள் அக்டோபர் – 3
உலக வனவிலங்கு நாள் அக்டோபர் – 6
உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் – 5

அறிந்து பயன்படுத்துவோம்.

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.

செய்தித் தொடர்

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.

(எ.கா.)

கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத்தொடர்

ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்

(எ.கா.)

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர்

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.

(எ.கா.)

  • இளமையில் கல். (ஏவல்)
  • உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்)
  • உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
  • கல்லாமை ஒழிக. (வைதல்)

உணர்ச்சித் தொடர்

உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.

(எ.கா.)

  • அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
  • ஆ! புலி வருகிறது! (அச்சம்)
  • பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
  • ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)

தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.  

  • செய்தி தொடர்

2. கடமையைச் செய். 

  • விழைவுத்  தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!  

  • உணர்ச்சித் தொடர்

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? 

  • வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

1. நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக)

  • நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

2. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)

  • என்னே! காட்டின் அழகு!

3. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக)

  • பூனை காலில் அடிபட்டுவிட்டது

4. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக)

  • அதிகாலையில் துயில் எழு

5. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)

  • முகில்கள் திரண்டால் மழை பெய்யும்

6. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக)

  • காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ?

கடிதம் எழுதுக.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

30 சாந்திநகர்
திருப்பூர் – 2

நாள் : 10.10.2022

இனிய நண்பா,

வணக்கம் நலம் நலம் அறிய ஆவலாய் உள்ளேன்

இவ்வாண்டு உன் பள்ளியின் 50வது ஆண்டு விளையாட்டு விழா 15.10.22 அன்று நடைபெற்றதாய் மடல் எழுதியிருக்கின்றாய். இளைஞர்களுக்கான ஓடப்பந்தயத்தில் நீயும் கலந்து கொண்டதாகவும், முதலிடம் பெற்றள்ளதாகவும் அதில் குறிப்பிட்டள்ளாய். வெற்றி பெற்ற செய்தி அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அன்பு நிறைந்த பாராட்டினை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உன்னை நண்பனாய் அடைந்தமையை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

படிப்பில் நீ காட்டி வருகின்ற ஆர்வமும், விடா முயற்சியும், கடம் உழைப்பும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாய் வர உதவுகின்றன. அதேபோல் விளையாட்டிலும் வெற்றி பெற்றுள்ளமை நீ படிப்பு, விளையாட்டு ஆகிய இரண்டிலம் கெட்டிக்காரன் என்பதைப் பறை சாற்றுகின்றன. மாநில தேசியப் போட்டிகளிலும் தடகளத்தில் முத்தரை பதித்து பெருமை சேர்த்திடவும் வாழ்த்துகிறேன்.

உன் அன்பிற்குரிய நண்பன்
ஆ.ராசா

உறைமேல் முகவரி

பெறுநர்

செல்வன். ந. கண்ணன்
16, பாரதியார் தெரு,
காந்திநகர்,
மதுரை – 16.

 

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக

நட உண் உறங்கு
ஆண்பால் நடக்கிறான் உண்கிறான் உறங்கினான்
பெண்பால் நடக்கிறாள் உண்கிறாள் உறங்கினாள்
பலர்பால் நடக்கிறார் உண்டார் உறங்கினார்
ஒன்றன் பால் நடந்தது உண்டது உறங்கியது
பலவின் பால் நடந்தன உண்டன உறங்கின
தன்மை நடந்தேன உண்கிறேன் உறங்கினேன்
முன்னிலை நடந்தீர் உண்டீர் உறங்குவீர்
படர்க்கை அவன் நடந்தான் அவன் உண்பான் அவன் உறங்கினாள்
இறந்த காலம் நடந்தான் உண்டான் உறங்கினான்
நிகழ் காலம் நடக்கிறான் உண்கிறான் உறங்குகிறான்
எதிர் காலம் நடப்பான் உண்பான் உறங்குவான்

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

  1. நடக்கிறது – நட
  2. போனான் – போ
  3. சென்றனர் – செல்
  4. உறங்கினாள் – உறங்கு
  5. வாழிய – வாழ்
  6. பேசினாள் – பேசு
  7. வருக – வா
  8. தருகின்றனர் – தா
  9. பயின்றாள் – பயில்
  10. கேட்டார் – கேள்

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க உதவுவேன்.
  2. மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன

கலைச்சொல் அறிவோம்.

  • பழங்குடியினர் – Tribes
  • சமவெளி – Plain
  • பள்ளத்தாக்கு – Valley
  • புதர் – Thicket
  • மலைமுகடு – Ridge
  • வெட்டுக்கிளி – Locust
  • சிறுத்தை – Leopard
  • மொட்டு – Bud

இணையத்தில் காண்க

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை இணையத்தில் கண்டு அறிக.

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக) ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனிமனித தனியான் முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக எற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதியில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழந்து வருகின்றனர். பல பழங்குடியின மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழ்கிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா போன்ற நாடுகளுக்கு அரகில் அமைந்துள் பப்புவா நியூ கினியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment