TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.2 – துன்பம் வெல்லும் கல்வி

1.2 துன்பம் வெல்லும் கல்வி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 1.2 – துன்பம் வெல்லும் கல்வி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Thunbam Vellum Kalvi

6th Std Tamil Text Book – Download

பெயர் கல்யாண சுந்தரம்
பெற்றோர் அருணாசலம் – விசாலாட்சி
ஊர் செங்கபடுத்தான் கிராமம் (தஞ்சை மாவட்டம் – பட்டுகோட்டை)
காலம் 13.04.1930 – 18.10.1959
சிறப்பு பெயர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டையார்

சொல்லும் பொருளும்

  • தூற்றும் படி – இகழும் படி
  • மூத்தோர் – பெரியோர்
  • மேதைகள் – அறிஞர்கள்
  • மாற்றார் – மற்றவர்
  • நெறி – வழி
  • வற்றாமல் – அழியாமல்

பாடலின் பொருள் 

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக் கூடாது . கற்ற தன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்ப டி வளரக் கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும்.

நூல் வெளி

  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.

  1. போற்றும்படி
  2. தூற்றும்படி
  3. பார்க்கும்படி
  4. வியக்கும்படி

விடை : தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.

  1. இளையோர்
  2. ஊரார்
  3. மூத்தோர்
  4. வழிப்போக்கர்

விடை : மூத்தோர்

3. கைப்பொருள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கையில் + பொருள்
  2. கைப் + பொருள்
  3. கை + பொருள்
  4. கைப்பு + பொருள்

விடை : கை+பொருள்

4. “மானம் + இல்லா” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. மானம்இல்லா
  2. மானமில்லா
  3. மானமல்லா
  4. மானம்மில்லா

விடை : மானமில்லா

சொற்றொடரில் எழுதுக

1. மனமாற்றம்

  • மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம்  அடைய வேண்டும்.

2. ஏட்டுக்கல்வி

  • மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்

3. நல்லவர்கள்

  • இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது

4. சோம்பல்

  • சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி

குறு வினா

1. நாம் யாருடன் சேரக்கூடாது?

நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது

2. எதை நம்பி வாழக்கூடாது?

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது

3. நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.
  • பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.
  • பெற்ற தாயின்  புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்.

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்.

சிந்தனை வினா

நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?

நான் படித்துச் சிறந்த பேச்சாளராக விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா போல சுவையாக நயம்பட பேச பயிற்சி எடுப்பேன். சுப்பிரமணிய சிவா, வ.உ.சி.  சத்தியமூர்த்தி போன்றோர் தன் சொல்வன்மையால் தடம் பதித்தவர்கள். இவர்களையெல்லாம் என் வழிகாட்டிகளாய்க் கொண்டு சிறந்த பேச்சாளராய் மாற ஆசைப்படுகிறேன். நாட்டையும் நாட்டு மக்களையும் நன்னெறிப்படுத்தவும், விபிப்படையவும் என் பேச்சை பயன்படுத்துவேன்.

கூடுதல் வினாக்கள் 

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்

  1. செல்வம்
  2. உறவினர்
  3. கல்வி
  4. வீரம்

விடை : கல்வி

2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________

  1. வழி
  2. வீரம்
  3. கல்வி
  4. கலை

விடை : வழி

3. மானமில்லா _______________  சேரக்கூடாது

  1. கோழையுடன்
  2. தோழனுடன்
  3. உறவினருடன்
  4. பகைவருடன்

விடை : கோழையுடன்

4. _______________  என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  1. புரட்சி கவிஞர்
  2. பாவேந்தர்
  3. உவமைக் கவிஞர்
  4. மக்கள் கவிஞர்

விடை : மக்கள் கவிஞர்

5. “குணமிருந்தால்” என்னும் சொல்லினை பிரித்தெழுதக் கிடைப்பது _____________

  1. குண + இருந்தால்
  2. குணம் + இருந்தால்
  3. குண + மிருந்தால்
  4. குணமி + ருந்தால்

விடை : மக்கள் கவிஞர்

6. “கை + பொருள்” என்னும் சொல்லினை சேர்த்தெழுதக் கிடைப்பது _____________

  1. கைபொருள்
  2. கைப்பொருள்
  3. கை பொருள்
  4. கையில்பொருள்

விடை : கைப்பொருள்

குறு வினா

1. பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்?

பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்

2. எதை மீறக் கூடாது?

பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது..

3. எவ்வாறு வாழ்தல் வேண்டும்?

பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாதவாறு வாழ வேண்டும்.

4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி குறிப்பு வரைக

  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment