TN 5th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.4 – பெயர்ச்சொல், வினைச்சொல்.

2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 2.4 – பெயர்ச்சொல், வினைச்சொல்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - peyarsol vinaisol

5th Std Tamil Text Book – Download

பெயர்ச்சொல்

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

எ.கா. : சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்.

வினைச்சொல்

ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

எ.கா. : ஓடினான், விழுந்தது, எழுதினான்.

கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள்.

1. இராமன் பாடம் படித்தான்.

இத்தொடரில்,

  • இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்
  • படித்தான் – வினைச்சொல்

2. மாடு புல் மேய்ந்தது.

இத்தொடரில்,

  • மாடு, புல் – பெயர்ச்சொற்கள்
  • மேய்ந்தது – வினைச்சொல்

ஒன்றன் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்

ஒரு செயலைக் குறிப்பது வினைச்சொல்

கற்பவை கற்றபின்

1. ஒரு சொல்லைப் படித்தவுடன் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா எனப் பகுத்து அடையாளம் காண்க.

  • ஒரு சொல்லைப் படித்தவுடன் அது பெயரா, செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பிறகு ஒரு பெயராக இருந்தால் பெயர்ச்சொல் என்றும், செயல் நிகழ்வாக இருந்தால் வினைச்சொல் என்று அடையாளர் காணலாம்.

2. நாம் பேசும் தொடரில் எது பெயர்ச்சொல், வினைச்சொல் எனக் கூறுக.

  • நீ உண்டாயா? எனக் கேட்கிறோம்.
  • அதில் உள்ள “நீ” என்பது பெயர்ச்சொல்.
  • அதில் உள்ள “உண்டாயா” என்பது வினைச்சொல்

மதிப்பீடு

கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.

( பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ணன், சம்சுதீன், ஜெனிபர், கட்டினார், ஓடியது, முயல் )

பெயர்ச்சொல்

  • வருணன்
  • இசைவாணி
  • முயல்
  • சம்சுதீன்
  • ஜெனிபர்

வினைச்சொல்

  • உண்டான்
  • வரைந்தாள்
  • ஓடியது
  • எழுதினான்
  • பாடினாள்

பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. மயில் தோகையை விரித்து ஆடியது
  2. வாணி கட்டுரை எழுதினாள்
  3. இளம்பிறை உணவு சமைத்தாள்
  4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்
  5. கொத்தனார் வீடு கட்டினார்

பெயர்ச்சொல்

  • மயில்
  • வாணி
  • இளம்பிறை
  • ஆதிரை
  • கொத்தனார்

வினைச்சொல்

  • விரித்து ஆடியது
  • எழுதினாள்
  • சமைத்தாள்
  • நட்டாள்
  • கட்டினார்

கதையில் வரும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுக. 

காட்டில் புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது. மான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது, வேடன் விரித்திருந்த வலையில் புலி சிக்கிக் கொண்டது. வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான். அப்பொழுது புலி வேடனைப் பார்த்து, என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப் போய்விடுகிறேன் என்று கெஞ்சியது. அதற்கு வேடன். ‘அதெல்லாம் முடியாது’ என்று கூறினான்.

உனக்கு இரக்கமே இல்லையா? என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? எனக் கேட்டது புலி. அதற்கு வேடன் நீ ஏன் மானை துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு நீதியா? எனக் கேட்டான். புலி அமைதியாய் இருந்தது.

பெயர்ச்சொல்

  • புலி
  • மான்
  • வேடன்
  • நான்
  • என்னை
  • உனக்கு
  • காட்டில்

வினைச்சொல்

  • துரத்தியது
  • ஓடியது
  • கொண்டது
  • முயன்றான்
  • பார்த்து
  • கெஞ்சியது
  • கூறினான்
  • கேட்டது
  • இருந்தது

மொழியை ஆள்வோம்

சொல்லக்கேட்டு எழுதுக.

  • களர்நிலம்
  • கற்றவர்
  • மறுமை
  • தமிழாசிரியர்
  • நல்வழி
  • உயிர்நாடி
  • தொலைக்காட்சி
  • அறிவுத்தெளிவு
  • வளம் பெறும்
  • வளர்ச்சி

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. முன்னேற்றம்

விடை : வாழ்வில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவை

2. புதுமை

விடை : நம் வாழ்வில் ஏற்படும் அனுபவம் ஒவ்வொன்றும் புதுமை

3. வாழ்க்கை

விடை : மனித வாழ்க்கை எந்திர வாழ்க்கையாக மாறி விட்டது

4. தொலைக்காட்சி

விடை : தொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும்

கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக.

எ.கா: செழித்தால் நாடு காடு செழிக்கும்

விடை : காடு செழித்தால் நாடு செழிக்கும்.

1. கண்கள் நாட்டின் பெண்கள்.

விடை : பெண்கள் நாட்டின் கண்கள்.

2. முதுகெலும்பு நாட்டின் விவசாயமே

விடை : நாட்டின் முதுகெலும்பு விவசாயமே!

3. தரும் உழைப்பே உயர்வு

விடை : உழைப்பே உயர்வு தரும்.

4. போன்றது பொன் காலம்

விடை : காலம் பொன் போன்றது.

5. துளி வெள்ளம் பெரு சிறு

விடை : சிறு துளி பெரு வெள்ளம்

கவிதையை நிறைவு செய்க.

எல்லாம் தரும் கல்வி – வாழ்வில்
ஏற்றம் தரும் கல்வி

கற்றார் நிலை உயர்த்தும் – அறிவில்
ஏற்றம் தரும் கல்வி.

வளம் தரும் கல்வி – என்றும்
நலம் தரும் கல்வி

குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை எழுதுக. பொருத்தமான தலைப்பைத் தருக.

நான்கு வணிகர்கள் – பஞ்சு விற்றல் – எலித்தொல்லையால் பூனை வாங்குதல் – பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாத்தல் – தண்டை – கொலுசு அணிவித்தல் – பூனையின் காலில் புண் ஏற்படுதல் – அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட்ட காலில் எண்ணெய் தோய்ந்த துணியைச் சுற்றிவைத்தல் – பூனை அடுப்பின் அருகில் செல்லல் – எண்ணெய் தோய்ந்த துணியில் தீப்பற்றுதல் – பூனை பஞ்சு மூட்டைகளின் மீது ஓடுதல் – மூட்டையில் தீப்பற்றுதல் – மற்ற மூவரும் வழக்கு தொடுத்தல் – நீதிபதி தீர்ப்பு வழங்கல் – அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் எனக் கேட்டல் – மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது எனக் கூறல் – மற்ற மூவரும் நட்டஈடு கொடுக்கவேண்டும் என வலியுறுத்தல்.

ஒரு ஊரில் நான்கு வணிகர்கள்  வாழ்ந்து வந்தனர். அவர்கள் பஞ்சு விற்றனர். எலித்தொல்லையால் பூனை ஒன்றை வாங்கினர். பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாக்க வேண்டும். பூனையின்  காலிலில் தண்டை மற்றும் கொலுசு அணிவிக்கின்றனர். அதனால் பூனையின் காலில் புண் ஏற்படுகிறது. அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட்ட காலில் எண்ணெய் தோய்ந்த துணியில் கட்டுப் போடுகின்றார். பூனை அடுப்பின் அருகில் சென்றதால் துணியில் தீப்பற்றியது. பூனை பஞ்சு மூட்டைகளின் மீது ஓடியது. இதனால் மூட்டையில் தீப்பற்றி எரிகிறது. மற்ற மூவரும் வழக்கு தொடுக்கின்றன. நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்ககுகிறார். அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் என்றும், மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது எனக் கூறுகிறார் . எனவே மற்ற மூவரும் தான் நட்டஈடு கொடுக்கவேண்டும் என  தீர்ப்பு வழங்குகிறார்.

தலைப்பு : சரியான தீர்ப்பு

மொழியோடு விளையாடு

முதலில் இருந்து படித்தாலும் முடிவில் இருந்து படித்தாலும் பொருள் மாறாமல் உள்ள சொற்றொடர்களைப் படித்து மகிழ்க.

எ.கா:

தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே

மாலை உருவாக்கு

5th Standard - Peyarsol vinaisol - Malai uruvakku

மீன்பிடிப்போம் வாருங்கள்

கொக்குக்கு ஏற்ற மீன்களைப் பிடித்து கூடையில் போடுக (ஒரு பொருள் பல சொல்)

5th Standard - Peyarsol vinaisol - Meen Pidipom

நெருப்பு

  • அனல்
  • தணல்
  • கனல்
  • தீ

கதிரவன்

  • பகலவன்
  • ஆதவன்
  • சூரியன்

சந்திரன்

  • திங்கள்
  • நிலா
  • மதி
  • அம்புலி

சொல் ஏணி அமைப்போம்

சொல்லின் இறுதியில் முடியும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அமையும் மற்றொரு சொல்லை எழுதிச் சொல்லேணி அமைக்க.

5th Standard - Peyarsol vinaisol - soll yeni amaipom

வருணிப்போம்

படத்தைப் பார்த்து வருணனைச் சொல்லுடன் படத்தில் காணும் உயிரினங்களின் பெயரை எழுதுக

5th Standard - Peyarsol vinaisol - Varunipom

எ.கா: வண்ண வண்ண மலர்கள்

தாவி ஓடும் முயல்

  • உயரப்பறக்கும் பறவை
  • வகை வகையாய் பட்டாம்பூச்சி
  • தந்திரம் செய்ய வருதே குள்ள நரி
  • தத்தி ஓடும் புள்ளிமான்
  • பச்சைப் புல்மேயும் கலைமான்

படங்களுக்குரிய சொற்களை எழுதிப் பத்தியை முழுமையாக்குக

5th Standard - Peyarsol vinaisol - padthikuiya sollai eluthi pathiyai eluthuga

அப்துமுல் பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டி வீட்டிற்குத் தன் அம்மாவுடன் பேருந்தில் சென்றான். நடத்துனரிடம் இருந்து பயணச்சீட்டுகளை அம்மா பெற்றுக் கொண்டார். அப்துல் சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். பேருந்து வேகமாச் சென்றது. மரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக பின்னோக்கி ஓடுவது போல் இருந்தைக் கண்டு வியப்படைந்து தன் அம்மாவையும் பார்க்கச் சொன்னான். வெளியில் தூரத்தில் தெரிந்த இயற்கைக்காட்சி கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. மாலையிலிருந்து துள்ளலோடு விழுந்து பாய்கின்ற அருவியின் வேகம் அப்துலின் உள்ளத்தையும் துள்ளிக் குதிக்கச் செய்தது. பச்சைப் பசேலென இருந்த செடிகளும் வயல்களும் பார்ப்பதற்குப் பட்டுக் கம்பளம் விரித்தாற் போன்று மிகவும் அழகாக இருந்தன. வயலின் நடுவே சோளக்கொல்லை பொம்மை நிறுத்தப்பட்டிருந்தது. பார்பதற்று வேடிக்கையாக இருந்தது. சற்றுத்தூரம் சென்றதும் அதிகமாகப் புகை வெளியேற்றும் தொழிற்சாலையைக் கண்டான். அதைப்ப பற்றித் தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கெண்டான். அருகில் புல்வெளியயில் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்துல் இதைப் பார்த்துக் கொண்டு வரும்போது யாரோ ஒருவர்தான். செல்லும் பேருந்தை வேகமாகத் தன் குதியுந்தில் முந்திச் செல்வதைக் கண்டு பதற்றமடைந்தான். தன் அம்மாவிடம் அது பற்றிக் கேட்டபோது அவ்வாறு வாகனத்தை முந்திச் செல்வது தவறு என்று கூறினார். தாங்கள் இறங்க வேண்டிய ஊர் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி மகிழ்ச்சியொடு பாட்டி.

விண்ணப்பம் எழுதுதல்

குடிநீர்வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்

ஆ. இளம்பரிதி,
த/பெ. ஆறுமுகம்,
க.எண்: 24, கிழக்குத் தெரு,
மாமண்டூர்
சின்னசேலம் ஒன்றியம்.

பெறுநர்

ஊராட்சி மன்றத் தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
மாமண்டூர்,
சின்னசேலம் ஒன்றியம்.

ஐயா வணக்கம்,

எங்கள் தெருவில் உள்ள குடிநீர்க் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாள்களாகக் குடிநீர் தெருவில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால், தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர். எனவே, உடைந்துபோன குடிநீர்க் குழாயைச் சரிசெய்து தர வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஆ. இளம்பரிதி.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment