TN 4th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 7 – திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 7 – திருக்குறள் கதைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - thirukkural kathaigal

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

நாவைக் காக்காவிட்டால் ஏற்படும் துன்பம் குறித்துப் பேசுக.

பேச்சைக் குறைத்து, கேட்பதை அதிகரிக்க வேண்டும். “தெரிந்ததைப் பேசு, தெளிவாகப் பேசாமல் இருந்தால் நல்லது” என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத்தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தம் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறிவிடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அறிவும் ஏற்படும். கோபத்தை அடக்கி காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால் அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கபடுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும் கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு.

மனித சமுகம் நாவை காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர்.

சிந்திக்கலாமா!

அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?

பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். பச்சை விளக்கு ஒளிரும் போது சாலையில் பிற திசையிலிருந்து வண்டிகள் வராது. ஆகையால் பானு கூறியதே சரியானது. சாலைவிதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்தால், இருவருக்கம் நல்ல வேலை கிடைத்தது.

சில நாட்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உனரந்து தமது கருத்தினை மாற்றிக் கொண்டார்.

குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

விளக்கம்

ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘பொறை‘ என்பதன் பொருள் ___________

  1. முழுமை
  2. வளமை
  3. பொறுமை
  4. பெருமை

விடை : பொறுமை

2. “நிறையுடைமை” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. நிறை + யுடைமை
  2. நிறை + உடைமை
  3. நிறைய + உடைமை
  4. நிறையும் + உடைமை

விடை : நிறை + உடைமை

3. ‘மெய் + பொருள்‘ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________

  1. மெய்பொருள்
  2. மெய்யானபொருள்
  3. மெய்ப்பொருள்
  4. மெய்யாய்ப்பொருள்

விடை : மெய்ப்பொருள்

4. “வெகுளாமை” – இச்சொல்லின் பொருள் ______________

  1. அன்பு இல்லாமை
  2. பொறாமை கொள்ளாமை
  3. சினம் கொள்ளாமை
  4. பொறுமை இல்லாமை

விடை : சினம் கொள்ளாமை

5. போற்றி ஒழுகப்படும் பண்பு _____________

  1. சினம்
  2. பொறையுடைமை
  3. அடக்கமில்லாமை
  4. அறிவில்லாமை

விடை : பொறையுடைமை

வினாவிற்கு விடையளிக்க

1. பொறையுடைமை எப்போது போற்றப்படும்?

நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். அப்போது பொறையுடைமை போற்றப்படும்.

2. மெய்ப்பொருள் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறக் காரணம் என்ன?

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறுகிறார்.

3. நாவைக் காக்காவிடில் ஏற்படும் துன்பம் என்ன?

நாவைக் காக்காவிடில் சொற்குற்றத்தில் அகப்பட்டு துன்பம் அடைவர்.

4. சினம் எப்போது ஒருவரை அழிக்கும்?

ஒருவன் தன்னைத் தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.

5. நீங்கள் படித்த திருக்குறள் கதைகளுள் உங்களுக்குப் பிடித்த கதை எது? ஏன்?

எனக்கு பிடித்த கதை மெய்ப்பொருள் காண்போம்

இக்கதை மூலம் ஒருவர் சொல்லும் பொருளை ஆராய்ந்து அதன் உண்மையா பொருளை காண்பதே அறிவாகும் என புரிந்து கொள்ள முடிகிறது.

பொருத்துக

1. பொறை அ. சொல் குற்றம்
2. மெய்ப் பொருள் ஆ. துன்பப்படுவர்
3. காவாக்கால் இ. பொறுமை
4. சோகாப்பர் ஈ. காக்கா விட்டால்
5. சொல்லிழுக்கு உ. உண்மைப் பொருள்
விடை : 1 – இ, 2 -உ, 3 -ஈ, 4 – அ, 5 – ஆ

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக.

1. ஆய்வகம் _____________ இருந்தது. (மேல் தளத்தில் / மேல் தலத்தில்)

விடை : மேல் தளத்தில்

2. வழியில் _____________ ஒன்று வந்தது. (குருக்குப்பாதை / குறுக்குப்பாதை)

விடை : குறுக்குப்பாதை

3. உனக்குக் காரணம் _____________ (புறியவில்லையா / புரியவில்லையா)

விடை : புரியவில்லையா

4. எடிசன் மின் _____________ உருவாக்கினார். (விளக்கு / விலக்கு)

விடை : விளக்கு

5. குற்றம் ____________ யாரிடம்தான் இல்லை. (குரை / குறை)

விடை : குறை

சொல்லக் கேட்டு எழுதுக.

  • மெய்ப்பொருள்
  • சோகாப்பர்
  • பொறையுடைமை
  • நிறையுடைமை

மொழியோடு விளையாடு

பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.

யாது யாவை எப்படி
எங்கு எது யார்
என்ன யாருடைய

1. உன்னுடைய ஊரின் பெயர் _____________?

விடை : என்ன

2. உனக்குப் பிடித்த வண்ணம் _____________?

விடை : எது

3. நீ பள்ளிக்கு _____________ வருகிறாய்?

விடை : எப்படி

4. உன்னுடைய நண்பன் _____________?

விடை : யார்

5. கோடை விடுமுறைக்கு _____________ சென்றாய்?

விடை : எங்கு

6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் _____________?

விடை : யாது

7. குறில் எழுத்துகள் _____________?

விடை : யாவை

8. சாருமதி _____________ வீட்டிற்குச் சென்றாள்?

விடை : யாருடைய

நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?

4th Standard - Thirukkural Kathaigal - namaku thevaiyana panpugal

  • அன்பு
  • ஒழுக்கம்
  • அறிவு
  • செய்ந்நன்றி
  • அடக்கம்
  • ஈகை
  • வாய்மை

கலையும் கைவண்ணமும்

சூரியகாந்திக்கு வண்ணமிடுவோமா?

இதழ்களுக்கு மஞ்சள் தூள், விதைகளுக்கு உலர்ந்த தேயிலைத்தூள்… பயன்படுத்தி அழகாக்குக.

4th Standard - Thirukkural Kathaigal - Kalaiyum Kaivannamum

அறிந்து கொள்வோம்

4th Standard - Thirukkural Kathaigal - Arinthu kolvom

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
  • திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை

சில பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment