TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 8 – அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 8 – அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - arivootum tholaikatchi seithigal

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல, அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்துவீர்கள்?

தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான திரைப்படம், திரையிசை பாடல்கள், தொடர் நாடகங்கள், விளம்பரம் போன்றவற்றை மட்டும் காண்பதில்லை.

நம் அறிவை வளர்க்கக்கூடிய கல்வி, வேளாண்மை, விளையாட்டு, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமையல் போன்றவற்றைப் பற்றிய அறிவையும் தொலைக்காட்சியின் மூலம் நாம் பெறலாம்.

வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் செய்திகள் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொலைக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றது.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. விமானம் பறப்பது பற்றிய செய்தியை  ________________ வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்

  1. கணினி
  2. தொலைக்காட்சி
  3. வானொலி
  4. அலைபேசி

விடை : தொலைக்காட்சி

2. “ஆர்வம்” இச்சொல்லின் பொருள்  ________________

  1. வெறுப்பு
  2. மறுப்பு
  3. மகிழ்ச்சி
  4. விருப்பம்

விடை : விருப்பம்

3. “உயரம்” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________________

  1. குட்டை
  2. நீளம்
  3. நெட்டை
  4. நீண்ட

விடை : குட்டை

4. “தொலைக்காட்சி” இச்சொல்லின் பொருள்  ________________

  1. தொலை + காட்சி
  2. தொல்லை + காட்சி
  3. தொலைக் + காட்சி
  4. தொல் + காட்சி

விடை : தொலை + காட்சி

5. “குறுமை + படம்” இச்சொல்லின் பொருள்  ________________

  1. குறுபடம்
  2. குறுமைபடம்
  3. குறும்படம்
  4. குறுகியபடம்

விடை : குறும்படம்

வினாக்களுக்கு விடையளிக்க

1. பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?

பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் விமானத்தைக் கண்டனர்

2. வானில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?

வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்.

3. இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாக கூறினாள்?

தொலைக்காட்சியில் பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை இளவரசி பார்த்ததாக கூறினாள்

பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புவோம்

3rd Standard - arivootum tholaikatchi seithigal - parvaikalin oligalai arinthu koditta idangalai nirapavum

1. காகம் ___________

  • கரையும்

2. மயில் ___________

  • அகவும்

3. கிளி ___________

  • பேசும்

4. ஆந்தை ___________

  • அலறும்

5. சேவல் ___________

  • கூவும்

பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்

(அவர்கள், அவன், அவள், அவை, அது)

3rd Standard - arivootum tholaikatchi seithigal - Poruthamana sollal niruvanam

ஒளிர்மதி தோட்டத்தில பூ பறிநத்துக்கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். அவன் கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. அவை பார்ப்தற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். அது சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, அவர்கள் மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.

கதையை படித்து வினாக்களுக்கு விடையளிக்க

தவளை ஒன்று மிகவும் உடல் நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவைளை தன் தாயை காப்பாற்ற நினைத்தது. மாலை நேரம் முடிவதற்கள் மலைமேல் ஏறி மூலிகை கொண்டு வரு நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று நினைத்தது குட்டித் தவளை. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித்தவைள் பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின் பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்து கொண்டன். குட்டித்தவளை, தன் கூர் சிந்தனைத் திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்துதன் தாயைக் காப்பாற்றிது.

1. உடல் நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?

தவளை

2. குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?

பாம்புகள்

3. குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?

பருந்து. கீரியார்

4. குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக்குறிக்கும்?

  1. பணிவு
  2. காலந் தவிர்க்காமை
  3. நேர்மை

விடை : காலந் தவிர்க்காமை

அறிந்து கொள்வோம்

3rd Standard - 3rd Standard - arivootum tholaikatchi seithigal - Arinthu Kolvom

சிந்திக்கலாமா

உன் பொருளை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?

நான் என் பொருட்களை பெட்டியில் வைத்து புத்தகப் பைக்குள் வைத்திருப்பேன்; தேவையான நேரத்தில் எடுத்தி பயன்படுத்தி விட்டு மீண்டும் பத்திரமாக பைக்குள் வைத்து விடுவேன்.

சொந்த நடையில் கூறுக

தொலைக்காட்சியின் நன்மைகளைப் பற்றி உம் சொந்த நடையில் கூறுக

சொற்பொழிவு, இசை, நாடகம் போன்றவற்றை நேரில் கண்டுகளிக்கலாம்.

வீட்டில் இருந்து கொண்டே பல வேலைகளின் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

பல நாடுகளின் இயற்கைக் காட்சிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நேரில் பார்ப்பது போன்று கண்டு மகிழலாம்.

வெகு தொலைவில் நடக்கும் விளையாட்டுகளை வீட்டிலிருந்தே கண்டு மகிழலாம்.

குடும்ப நலத்திட்டம், குழந்தை வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை நேரில் காட்டுவதால் மக்களுக்கு நன்றாக விளங்குகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment