TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 4 – திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 4 – திருக்குறள் கதைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Thirukkural Kathaigal

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

உமக்குப் பிடித்த திருக்குறள் கதையை உமது சொந்த நடையில் கூறுக.

எனக்கு பிடித்த திருக்குறள் கதை “காலத்தே பயிர் செய்” என்பதாகும்.

மலைச்சாமி என்ற ஏழை விவசாயி, இலந்தைக்குட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கென்று சொந்தநிலம் ஏதும் கிடையாது என்பதனால் மாதையன் என்ற செல்வந்தனின் நிலத்தைக் குத்தகைக்குக் எடுத்து விவசாயம் செய்து வந்தான்.

மாதையன் விவசாயின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே குறிக்கோளாய் இருந்தான். இருந்த போதிலும் மலைச்சாமி நேர்மையானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வந்தனிடம் ஏமாறவில்லை.

ஒருமுறை செல்வந்தன் விவசாயியிடம் குத்தகைக்கு ஈடாக “மண்ணுக்கு மேலே விளைபவை எனக்கு, மண்ணுக்குக் கீழே விளைபவை உனக்கு” என்று கட்டளையிட்டான். புத்திக் கூர்மையுடன் விவசாயி நிலக்கடலை பயிரிட்டதால் விவசாயிக்கே இலாபம் கிட்டியது. ஏமாற்றமடைந்த செல்வந்தன் அடுத்தமுறை விவசாயியை ஏமாற்ற எண்ணி நிபந்தனையை மாற்றினான். இம்முறை “மண்ணுக்குக் கீழே விளைபவை எனக்கு, மண்ணுக்கு மேலே விளைபவை உனக்கு” என்றான். ஆராய்ந்த விவசாயி இம்முறை நெல் பயிரிட்டான். இம்முறையும் விவசாயிக்கே இலாபம், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் செல்வந்தன்.

அதனால் எவ்விடத்து எதை, எப்படி, எக்காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.

குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்                     – காலமறிதல், குறள் 484

விளக்கம்

செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “ஞாலம்” இச்சொல்லுடன் பொருந்தாத சொல் __________

  1. உலகம்
  2. வையகம்
  3. புவி
  4. மலை

விடை : மலை

2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது __________

  1. அறம்
  2. தீமை
  3. கொடை
  4. ஈகை

விடை : தீமை

3. ‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல் __________

  1. முகம்
  2. எலும்பு
  3. கை
  4. கால்

விடை : எலும்பு

4. ‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________

  1. நல்லசெயல்
  2. நல்செயல்
  3. நற்செயல்
  4. நல்லச்செயல்

விடை : நற்செயல்

5. ‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. இனிமை + சொல்
  2. இன் + சொல்
  3. இன்மை + சொல்
  4. இனிமை + செல்

விடை : இனிமை + சொல்

குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

  • ஞாம் – காம்
  • ன்பி – அன்பி
  • ணிவுடையன் – அணியல்ல
  • ற்றை – மற்று

முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக

1. இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
    பிற மற்றுப் அணியல்ல

விடை :

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

2. தகவிலர் தக்கார் அவரவர் என்பது
    படும் எச்சத்தாற் காணப்

விடை :

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்

பாடி மகிழ்வோம்

கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.

கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட

இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment