TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 6.2 – கவிதைகள்

6.2 கவிதைகள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 6.2 – கவிதைகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Kavithaigal

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • நம்பாடப் பகுதியிலுள்ள கவிதைகள் ‘நகுலன் கவிதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
  • கவிஞர் நகுலன் (டி.கே. துரைசாமி). கும்பகோணத்தில் பிறந்தவர்;
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்;
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்;
  • தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
  • புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியுள்ளார்.
  • இவர், சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.
  • இவருடைய கவிதைகள் மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக வந்துள்ளன.
  • இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்;
  • பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஆர்ப்பரிக்கும் கடல்
    அதன் அடித்தளம்
    மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது

  1. இரைச்சல்
  2. குறைகுடம் கூத்தாடும்
  3. நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்
  4. புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.

விடை : நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்

குறு வினா

‘மூச்சு நின்று விட்டால்
பேச்சும் அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.

  • “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
  • “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”

சிறு வினா

கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.

1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்
நிரந்தரமில்லாமல் சென்று விடுகிறோம்

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்
உதாசினப்படுத்தப்படும்

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்
திரைமறைவு செய்வதற்கே

4. ஆர்பரிப்பில் அடங்காத மனம்
அமைதியில் அடங்கிவிடும்

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்
மனிதின் வெளிப்பாடே புறச்செயல்கள்

  • நகுலனின் கவிதைகளே இங்கு பேசப்பட்டுள்ளளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
  • எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச்ச சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துகளே இவை.

கற்பவை கற்றபின்…

உங்களுக்குப் பிடித்த புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

1. கடலில் புயல் சின்னம்
மீனவர்க்குக் கவலை
மாணவர்க்கு மகிழ்ச்சி

2. பகல் முழுவதும் கவலை
இரவு முழுவதும் கனவுகள்
மனிதன்

3. மண்ணின் மெளனத்தைக்
கலைத்தது
மழைச்சாரலின் சத்தம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

2. டி.கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்டவர்

  1. நகுலன்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : நகுலன்

3. கண்ணாடியாகும் கண்கள் நூலினை எழுதியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. நகுலன்

விடை : நகுலன்

சிறு வினா

1. நகுலன் இயற்றியுள்ள புதினங்கள் யாவை?

மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி

2. நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?

பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

3. நகுலன் (டி.கே. துரைசாமி) – பற்றிய குறிப்பு வரைக

  • நகுலன் (டி.கே. துரைசாமி) கும்பகோணத்தில் பிறந்தவர்.
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழந்தார்.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
  • தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
  • புதுக்கவிதைகள் மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியவர்.
  • மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
  • பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment