TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 8.3 – தொலைந்து போனவர்கள்

8.3 தொலைந்து போனவர்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 8.3 – தொலைந்து போனவர்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Tholainthu Ponavargal

11th Std Tamil Text Book – Download

இலக்கணக்குறிப்பு

  • கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • உரைத்தாய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
  • உடை அணிந்தேன் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. வென்றேன் = வெல் (ன்) + ற் + ஏன்

  • வெல் – பகுதி
  • “ல்” “ன்” எனத் திரிந்தது விகாரம்
  • ற் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

2. நிற்கின்றாய் =  நில் (ற்) + கின்று + ஆய் 

  • நில் – பகுதி
  • “ல்” “ன்” எனத் திரிந்தது விகாரம்
  • கின்று – எதிர்கால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

3. பெற்றேன் =  பெறு (பெற்று) + ஏன்

  • பெறு- பகுதி (பெற்று என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது)
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

4. அணிந்தேன் = அணி + த் (ந்) + த் + ஏன்

  • அணி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
    காகிதம் தின்பது கல்வியில்லை இவ்வடிகளில் பயின்று வருவது _________

  1. அடி எதுகை, அடி மோனை
  2. சீர் மோனை, அடி எதுகை
  3. அடி மோனை, அடி இயைபு
  4. சீர் மோனை, அடி மோனை

விடை : சீர் மோனை, அடி மோனை

2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகு

  1. நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகின்றேன்.
  2. இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
  3. இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
  4. இதழ்களில் பேசுகின்றேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.

விடை : இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.

குறு வினா

“கற்றேன் என்பாய் கற்றாயா?” என்று அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?

நடக்காததை நடந்ததாகக் கருதிக் கொண்டு மாயையில் சிக்குண்ட மக்களிடம் கேட்கிறார்.

சிறு வினா

அப்துல்ரகுமானின் கவிதையிலிருந்து வினா – விடை ஏற்ற அடிகளைத் தருக

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை

பெற்றோர் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

என்பன வினா – விடை வடித்திற்கு ஏற்ற அடிகளாகும்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • பெற்றேன், குளித்தேன், அணிந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • நிற்கின்றாய், பேசுகிறாள் – முன்னிலை ஒருமை வினைமுற்று
  • காகிதம் தின்பது – இரண்டாம் வேற்றுமைத்தொகை

புணர்ச்சி விதிகள்

1. கல்வியில்லை =  கல்வி + இல்லை

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “கல்வி + ய் + இல்லை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கல்வியில்லை” என்றாயிற்று.

2. பேகாவில்லை = போக + இல்லை

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “போக + வ் + இல்லை” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பேகாவில்லை” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தவர் _______ 

  1. தாகூர்
  2. இன்குலாப்
  3. மௌலானா ரூமி
  4. அப்துல் ரகுமான்

விடை : மௌலானா ரூமி

2. மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி __________ பிரிவைத் தழுவினார்.

  1. புத்த
  2. சூஃபி
  3. சமண
  4. சைவ

விடை : சூஃபி

3. புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர் __________

  1. ரூமி
  2. தாகூர்
  3. இன்குலாப்
  4. அப்துல் ரகுமான்

விடை : மௌலானா ரூமி

குறு வினா

1. கவிக்கோ அப்துல் ரகுமான் எவ்வகை வடிவங்களில் கவிதை எழுதியுள்ளார்?

அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று பல வடிவங்களில் கதை எழுதியுள்ளார்.

2. கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளுள் நான்கினைக் கூறுக.

பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை

3. அப்துல் ரகுமான் பெற்றுள்ள விருதுகள் யாவை?

தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

3. “தொலைந்து போனவர்கள்” இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பினை கூறுக

“தொலைந்து போனவர்கள்” இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு ‘சுட்டுவிடல்’ ஆகும்.

4. கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து நீ அறிவன யாவை?

  • கவிக்கோ அப்துல் ரகுமான், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் வானம்பாடிக் கவிஞர்கள் ஒருவர்.
  • புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை எனப் பல வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும் கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.
  • பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment