TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 8.2 – ஒவ்வொரு புல்லையும்

8.2 ஒவ்வொரு புல்லையும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 8.2 – ஒவ்வொரு புல்லையும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Ovvoru Pullaiyum

11th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

கூவும் குயிலும், கரையும் காகமும் – தொடரில் இடம் பெற்ற மரபு __________

  1. பெயர்மரபு
  2. வினைமரபு
  3. ஒலிமரபு
  4. இவை மூன்றும்

விடை : வினைமரபு

குறு வினா

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்” – தொடைநயங்களை எடுத்தெழுதுக

மோனை

முதலெழுத்து ஒன்றுபோல் வருவது மோனை

  • நீளும் – நீளாத, தொடரும் – தோழமை

எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவது எதுகை

  • நீளும் – நீளாத, தொரும் – பரும்

இயைபு

இறுதி எழுத்து ஒன்றுபோல் வருவது இயைபு

  • தொடரும் – படரும்
  • நீளும் – நீளாத, தொரும் – பரும்

முரண்

எதிர்ச்சொல் பயின்று வருவது முரண்

  • நீளும் x நீளாத

சிறு வினா

இன்குலாப் “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு ஆனால் நீளாத கைகளிலும், நெஞ்சைப் படரவிடவேண்டும்
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது. அது எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால் உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
  • சமத்துவப்புனல் – உருவகம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. கடந்து = கட + த் (ந்) + த் + உ

  • கட – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. அழைப்பேன் = அழை + ப் + ப் + ஏன்

  • அழை – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு =  பறவைகள் + ஒடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பறவைகளோடு” என்றாயிற்று.

2. சுவரில்லாத = சுவர் + இல்லாத

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “சுவரில்லாத” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சாகுல் அமீது என இயற்பெயர் கொண்டவர் __________

  1. இன்குலாப்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. ரசூல்கம்சதேவ்

விடை : இன்குலாப்

2. இன்குலாப் பிறந்த ஊர் ………………. 

  1. சென்னை
  2. கீழக்கரை
  3. தூத்துக்குடி
  4. சிவகங்கை

விடை : கீழக்கரை

குறு வினா

யாருடைய என்ன தொடர் இன்குலாபின் நீட்சிக் குரலாக ஒலிக்கிறது?

மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment