TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 6.3 – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 6.3 – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - muthukuarasamy pillatamil

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • பண்டி – வயிறு
  • அசும்பிய – ஒளிவீசுகிற
  • முச்சி – தலையுச்சிக் காெண்டை

இலக்கணக் குறிப்பு

  • குண்டலமும்  குழைகாதும் – எண்ணும்மை
  • ஆடுக – வியங்கோள் வினைமுற்று
  • கட்டிய – பெயரெச்சம்
  • வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

பதிந்து = பதி + த் (ந்) + த் + உ

  • பதி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

நூல் வெளி

  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.
  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • இதில் இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
  • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
  • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
  • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.
  • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
  • இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மாெழிகளில் புலமை மிக்கவர்
  • கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) கழங்கு, அம்மானை, ஊசல்

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு

கிண்கிணி:-

கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

அரைஞான் மணி:-

இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

சிறு வயிறு:-

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

நெற்றிச் சுட்டி:-

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.

குண்டலங்கள்:-

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.

உச்சிக் கொண்டை:-

உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.

ஆடுக:-

வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக

பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.

கற்பவை கற்றபின்

சந்த நயமிக்க குழந்தைப் பாடல்கள் சிலவற்றை தொகுத்து, வகுப்பறையில் பாடி மகிழ்க.

வாசித்து பழகுவோம் குழந்தைகளே!
வார்த்தை தொடரை வாசித்து
பழகி மகிழ்வோம் குழந்தைகளே!
பேசிப் பழகுவோம் குழந்தைகளே!
தூய தமிழில் பேசிப் பழகுவோம் குழந்தைகளே!
எழுதிப் பழகுவோம் குழந்தைகளே!
எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்போம் குழந்தைகளே!
நூலகம் செல்வோம் குழந்தைகளே!
நூல்களை அறிவோம் குழந்தைகளே!

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • செங்கீரை, செம்பொன்னடி, பைம்பொன், சிறுங்கிணி – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

ஆடுக = ஆடு + க

  • ஆடு – பகுதி
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. குமரகுருபரர் எழுதிய நூல் _____________

  1. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  2. ஊரும் பேரும்
  3. தமிழின்பம்
  4. இன்பத்தேன்

விடை : முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

2. செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் _____________ பருவம்

  1. 5-வது
  2. 4-வது
  3. 3-வது
  4. 2-வது

விடை : 4-வது

3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியவர்.

  1. இராமலிங்க அடிகள்
  2. குமரகுருபரர்
  3. தாயுமானவர்
  4. செயங்கொண்டார்

விடை : குமரகுருபரர்

4. குமரகுருபரர் அறிந்திராத மொழி ___________

  1. தமிழ்
  2. இந்துஸ்தானி
  3. வடமொழி
  4. மலையாளம்

விடை : மலையாளம்

5. குமரகுருபரின் காலம் _____________-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்

  1. 14
  2. 15
  3. 16
  4. 17

விடை : 17

6. சிற்றிலக்கியங்களின் வகைகள் _____________

  1. 16
  2. 64
  3. 96
  4. 108

விடை : 96

7. பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் _____________

  1. 8
  2. 10
  3. 12
  4. 7

விடை : 10

8. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் இடையே பொதுவான பருவங்கள் _____________

  1. 8
  2. 10
  3. 12
  4. 7

விடை : 7

9. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக

  1. சிற்றில்
  2. ஊசல்
  3. சிறுதேர்
  4. சிறுபறை

விடை : ஊசல்

10. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக

  1. சிற்றில்
  2. ஊசல்
  3. சிறுதேர்
  4. சிறுபறை

விடை : சிற்றில்

11. காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம் _____________

  1. செங்கீரை
  2. தால்
  3. காப்பு
  4. சிறுபறை

விடை : செங்கீரை

12. கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் _____________

  1. நெற்றியில்
  2. இடையில்
  3. காலில்
  4. காதில்

விடை : காலில்

13. குமரகுருபர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?

  1. சுவாமிமலை முருகன்
  2. வைத்தியநாத முருகன்
  3. திருக்கழுக்குன்ற முருகன்
  4. திருச்செந்தூர் முருகன்

விடை : வைத்தியநாத முருகன்

14. “சிறு பண்டித சரிந்தாடப்”  என்பதில் “பண்டி” என்பதன் பொருள் _____________

  1. பெருக்கம்
  2. சுருக்கம்
  3. வயிறு
  4. தலை

விடை : தலை

பொருத்துக

1. அரை நாண் அ. கால் தலையில் அணிவது
2. சுட்டி ஆ. காதில் அணிவது
3. குண்டலம், குழை இ. நெற்றியில் அணிவது
4. சூழி ஈ. இடையில் அணிவது
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்

2. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

3. பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்

4. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பாெதுவான பருவங்கள் எத்தனை? அவை யாவை?

ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பாெதுவான பருவங்கள் ஏழு. அவை

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

5. செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக

  • செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
  • இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

6. பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்கள் யாவை?அவை எவ்விடங்களில் அணியப்படும் என்பதையும் பட்டியலிடுக

அணிகலன்கள் அணியப்படும் இடம்
சிலம்பு, கிணகிணி கால்
சுட்டி நெற்றி
அரை நாண் இடை (இடுப்பு)
குண்டலம், குழை காது
சூழி தலை

7. பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவராக் கருதப்படுவோர் யார்?

இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.

8. குமரகுருபரர் சுட்டி குறித்து கூறுவது யாது?

பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிமான சுட்டி பதிந்தாடட்டும்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment