TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 6.4 – கம்பராமாயணம்

6.4 கம்பராமாயணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 6.4 – கம்பராமாயணம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - kambaramayanam

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • கம்பர் இராமனது வரலாற்றை தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  • “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிக்கு உரியவர்
  • சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ் பெற்றவர்
  • சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன கம்பர் இயற்றிய நூல்கள் ஆகும்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

  1. நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  2. ஊரில் விளைச்சல் இல்லாததால்
  3. அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  4. அங்கு வறுமை இல்லாததால்

விடை : அங்கு வறுமை இல்லாததால்

குறு வினா

உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.

வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

சிறு வினா

‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

நிலம் தொழில் / உணவுப்பயிர் இன்றைய வளர்ச்சி
குறிஞ்சி மலை நெல், திணை நெல், தேன், கிழங்கு ஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருதம் செந்நெல், வெண்ணெல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
நெய்தல் உப்பு, மீன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நெடு வினா

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…

இவ்வுரையைத் தொடர்க!

“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,
கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”

தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,

சோலையை நாட்டிய மேடையாகவும்

மயிலை நடன மாதராகவும்

குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்

தாமரை மலரை விளக்காகவும்

மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்

வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்

பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து

தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.

இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.

படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.

“காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”

எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.

கம்பன் கவிதை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குிறான். தம்மை உச்சிக்கு கொண்டு சேர்க்கிறான்.

உதாரணமாக

” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயன
மறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.

கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம், ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு எற்ப,

கம்பர் கங்கை காண் படலத்தில்

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோ
வேழ நெடும் படை……….”

எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஒசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.

“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழவெ லாம்
இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”

மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்து பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிய முடிகிறது.

கற்பவை கற்றபின்

கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக

கதைமாந்தர் – குகன்

தன் மனைவி சீதையுடன், தம்பி இலக்குவனுடன் இராமன் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத்தலைவன் குகன் இராமனைச் சந்தித்தான்.

போர் குணமிக்க குகனானவன் ஆயிரம் படகுகளுக்குத் தலைவன்; கங்கையாற்றுத் தோணித் துறைக்கு தொன்றுதொட்டு உரிமை உடையவன். பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்; மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்; துடி என்னும் பறையை உடையவன்; வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்; தோல் செருப்பு அணிந்த பெருங்கால்களை உடையவன்;  கரிய நிறத்தவன். கரிய மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போல் மிகுதியான படைபலம் உடையவன்.

இத்தகைய குகன் கங்கைக் கரையின் பக்கத்திலுள்ள சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழ்பவன். அவன் முனிவர் தவச்சாலையில் உள்ள இராமனைக் காண தேனும் மீனும் கொண்டு சென்றான். (அரசன், குரு, தெய்வம் ஆகியோரைக் காணச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லலாகாது என்பது தமிழ் மரபு)

இராமனைக் கண்டது இருள் போன்ற நீண்ட முடியுடைய தலை மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினார். பின் எழுந்து வாயை கையால் பொத்தி, உடலை வளைத்து அடக்கமாய் நின்றான். இராமன் அவனைத் தன் அருகில் அமருமாறு கூறியும் மரியாதை நிமித்தமாக அவன் அமரவில்லை

குகனின் அன்பு மற்றும் மரியாதைக் கண்ட இராமன் குகனிடம், உள்ளத்து அன்பு முதிர்வினால் நீ கொண்டு வந்த இந்தப் பொருட்கள் எத்தன்மையதாய் இருந்தாலும் அமுதத்தை விட சிறந்தனவே. அன்பு கலந்ததனால் தூயனவே. நான் இதை ஏற்றுக் கொண்டதே விரும்பி உண்டதற்குச் சமம் என்றான்.

மேலும் குகனிடம், முன்னர் நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தாேம்; விரிந்த அன்பினால் உன்னோடு ஐவரானோம் என்றான் இராமன்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • தண்டலை, வெய்யோன், நெடுந்திரை, நெடும்படை, புதுமணல் – பண்புத்தொகைகள்
  • சண்பகக்காடு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • கிடந்து, கடந்து, விழிந்து – வினையெச்சங்கள்
  • நோக்க – பெயரெச்சம்
  • மறிகடல், வரிசோதி – வினைத்தொகைகள்
  • எழுந்திராய்! எழுந்திராய்!, உறங்குவாய்! உறங்குவாய்! – அடுக்குத்தொடர்
  • காலதூதர் – உருவகம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. கிடந்து = கிட + த்(ந்) + த் + உ

  • கிட – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. விழித்து = விழி+ த் + த் + உ

  • விழி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

3. பிடித்த = பிடி + த் + த் + அ

  • பிடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

4. உறங்குகின்ற = உறங்கு + கின்று + அ

  • உறங்கு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

5. உறங்குவாய் = உறங்கு + வ் + ஆய்

  • உறங்கு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

1. பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிட்டள்ள ஆறு ____________

  1. சரயு ஆறு
  2. கங்கை ஆறு
  3. நர்மதை ஆறு
  4. யமுனை ஆறு

விடை : சரயு ஆறு

2. கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் ____________

  1. இராமகாதை
  2. இராமாயணம்
  3. கம்பராமாயணம்
  4. இராமாவதாரம்

விடை : இராமாவதாரம்

3. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு ____________

  1. அயாத்தியா காண்டம் – கங்கைப்படலம், கங்கைகாண் படலம்
  2. பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
  3. சுந்தரகாண்டம் – குகப்படலம்
  4. யுத்த காண்டம்  – கும்பகருணன் வதைப்படலம்

விடை : சுந்தரகாண்டம் – குகப்படலம்

4. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர் ____________

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கண்ணதாசன்
  4. கம்பதாசன்

விடை : பாரதியார்

5. கம்பர் பிறந்த ஊர் ____________

  1. திருவெண்காடு
  2. திருவழுந்தூர்
  3. திருவழுந்தூர் 
  4. திருவாரூர்

விடை : திருவழுந்தூர்

6. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள் ____________

  1. 9
  2. 7
  3. 4
  4. 6

விடை : 6

7. கம்பர் பிறந்த நாடு ____________

  1. பாண்டிய நாடு
  2. பல்லவ நாடு
  3. சோழ நாடு
  4. சேர நாடு

விடை : சோழ நாடு

7. சடையப்ப வள்ளலின் ஊர் ____________

  1. திருவெண்ணெய்நல்லூர்
  2. திருநெல்வேலி
  3. தென்காசி
  4. மதுரை

விடை : திருெவண்ணெய்நல்லூர்

8. “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்ற புகழப்பட்டவர் ____________

  1. செயங்கொண்டர்
  2. ஒட்டக்கூத்தர்
  3. புகழேந்தி
  4. கம்பர்

விடை : கம்பர்

9. கம்பர் இயற்றிய நூல்களில் பொருந்தாதது

  1. சரசுவதி அந்தாரி
  2. பதிற்றுப் பந்தாதி
  3. திருக்கை வழக்கம்
  4. ஏரெழுபது

விடை : பதிற்றுப் பந்தாதி

10. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் ____________

  1. ஒளைவயார்
  2. கம்பர்
  3. ஒட்டக்கூத்தர்
  4. புகழேந்தி

விடை : கம்பர்

11. உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் ____________ படலம் __________

  1. யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
  2. பாலகாண்டம், நாட்டுப்படலம்
  3. பாலகாண்டம், ஆற்றுப்படலம்
  4. அயோத்தியாகாண்டம், கங்கைப்படலம்

விடை : யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்

12. “தாகுது சோலைதோறுஞ்” – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் __________

  1. யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
  2. பாலகாண்டம், நாட்டுப்படலம்
  3. பாலகாண்டம், ஆற்றுப்படலம்
  4. அயோத்தியாகாண்டம், கங்கைப்படலம்

விடை : பாலகாண்டம், ஆற்றுப்படலம்

13. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாக பால காண்டத்த்தில் குறிப்பிடப்படுவது __________

  1. சரயு
  2. கங்கை
  3. யமுனை
  4. பிரம்மபுத்திரா

விடை : சரயு

பொருத்துக

1. தாதுகு சோலை அ. நாட்டுப்படலம்
2. தண்டலை மயில்களாட ஆ. ஆற்றுப்படலம்
3. வெய்யோன் ஒளி இ. கங்கை காண் படலம்
4. ஆழ நெடுந்திரை ஈ. கங்கைப்படலம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

சிறு வினா

1. கம்பனின் பெருமையை சுட்டும் தொடர்கள் யாவை?

  • கல்வியில் பெரியவர் கம்பர்
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

2. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

  • சரசுவதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • ஏரெழுபது
  • சிலை எழுபது

3. கம்பராமாயணம் குறிப்பு வரைக

  • இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
  • கம்பர் தான் எழுதிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்
  • ஆறு காண்டங்களை உடையது
  • சந்த நயம் மிக்கது

4. சரயு ஆறு எவ்விடங்களிலெல்லாம் பரவிப் பாய்ந்தகாக கம்பர் குறிப்பிட்டுள்ளார்?

  • மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்
  • அரும்புகள் மலரும் பொய்கைககள்
  • புதுமணல் தடாகங்கள்
  • நெல் வயல்கள்

5. கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை? ஏன்?

  • வறுமை இல்லாததால் அங்கே கொடைகள் இல்லை
  • நேருக்கு  நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை
  • பொய்மொழி இல்லாததால் மெய்மை தனித்து விளங்கவில்லை
  • கேள்விச்செல்வம் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை

6. இராமனின் வடிவை எவற்றிற்கெல்லம் உவமையாக்கியுள்ளார் கம்பர்?

  • மை
  • நீலக்கடல்
  • கார்மேகம்
  • பச்சை நிற மரகதம்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment