TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 8.6 – யாப்பிலக்கணம்

8.6 யாப்பிலக்கணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 8.6 – மகனுக்கு எழுதிய கடிதம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Yappuilakkanam

9th Std Tamil Text Book – Download

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது

  1. நாள்
  2. மலர்
  3. காசு
  4. பிறப்பு

விடை : பிறப்பு

குறு வினா

அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும்?

  • எழுத்துக்களால் ஆனது அசை
  • நேரசை, நிரையசை என இரு வகைப்படும்

கூடுதல் வினாக்கள் 

குறு வினா

1. யாப்பின் உறுப்புகளை எழுதுக

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

2. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்து வகையைக் குறிப்பிடுக?

குறில், நெடில், ஒற்று

3. நேரசை, நிரையசை விளக்குக

நேரசை

  • தனிக்குறில் – ப
  • தனிக்குறில், ஒற்று – பல்
  • தனிநெடில் – பா
  • தனிநெடில், ஒற்று – பால்

நிரையசை

  • இருகுறில் – அணி
  • இருகுறில், ஒற்று – அணில்
  • குறில், நெடில் – விழா
  • குறில், நெடில், ஒற்று – விழார்

4. ஈரசைச்சீர்களின் வேறுபெயர்கள் யாவை?

இயற்சீர், உரிச்சீர்

5. ஓரசைச்சீருக்குரிய வாய்ப்பாடுக்ள யாவை?

  • நேர் – நாள்
  • நிரை – மலர்
  • நேர்பு – காசு
  • நிரைபு – பிறப்பு

6. ஈரசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?

  • நேர் நேர் – தேமா
  • நிரை நேர் – புளிமா
  • நேர் நிரை – கூவிளம்
  • நிரை நிரை – கருவிளம்

சிறு வினா

1. மூவசைச்சீர்களின் வாய்ப்பாடுகள் யாவை?

  • நேர் நேர் நேர் – தேமாங்காய்
  • நிரை நேர் நேர் – புளிமாங்காய்
  • நேர் நிரை நேர் – கூவிளங்காய்
  • நிரை நிரை நேர் – கருவிளங்காய்
  • நேர் நேர் நிரை – தேமாங்கனி
  • நிரை நேர் நிரை – புளிமாங்கனி
  • நேர் நிரை நிரை – கூவிளங்கனி
  • நிரை நிரை நிரை – கருவிளங்கனி

2. அடி என்றால் என்ன? விளக்குக

இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது அடியாகும்

  • குறளடி – இரு சீர்களை கொண்டது
  • சிந்தலடி – மூன்று சீர்களை கொண்டது
  • அளவடி – நான்கு சீர்களை கொண்டது
  • நெடிலடி- ஐந்து சீர்களை கொண்டது
  • கழிநெடிலடி – ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்டது

 கற்பவை கற்றபின்… 

1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்ப்பாடு காண்க

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து

சீர் அசை வாய்ப்பாடு
பிறர்/நா/ணத்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
தக்/கது/ நேர் நிரை கூவிளம்
தான்/நா/ணா/ நேர் நேர் நேர் தேமாங்காய்
னா/யின்/ நேர் நேர் தேமா
அறம்/நாண/த்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
தக்/க நேர் நேர் தேமா
துடைத்/து நிரைபு பிறப்பு

2. பாடல்களில் பயின்வரும் தாெடை நயங்களை எடுத்து எழுதுக

காெண்டல் காேபுரம் அண்டையில் கூடும்
காெடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யாேன் பாென்னெயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே

மாேனை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்

  • காெண்டல் – காெடிகள்
  • ண்ட – னக
  • ண்டர் – ழகர்
  • ர் – ரே

எதுகை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்

  • காெண்டல் – கண்
  • ண்டையில் – தண்டலை
  • விண்ட – வண்டலிட்டு
  • க – அம்

இயைபு:-

செய்யுளின்  அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ இயைந்து வருவது ஒன்றி வருவது இயைபு ஆகும்

  • கூடும் – மூடும்
  • பாடும் – ஆடும்
  • டும் – வெடும்

வினாக்கள்

1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர் – நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க

  • சாந்தா – சாந் / தா – நேர் நேர்
  • ஸ்ரீநிதி – ஸ்ரீ / நிதி – நேர் நிரை
  • டேவிட் – டே / விட் – நேர் நேர்

2. மூவசை சீரில் அமைந்த பெயர்கள் நான்கினை குறிப்பிடுக

  • மீ / னாம் / பிகை
  • ஆ / னந் / தி
  • ஐ / யப் / பன்
  • தமிழ் / மா / றன்

3. தம்பொருள் என்புதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் – இக்குறட்பாவில் பயின்றுவரும் மோனை, எதுகை ஆகியவற்றை கண்டறிக

மாேனை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்

  • ம்பொருள் – ம்தம்

எதுகை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்

  • ம்பொருள் – தம்தம்

4. தளையின் வகைகளை எழுதுக.

தளை ஏழு வகைப்படும்

நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

1) இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது,
மெய்ம்மையெனும் இந்த ரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லை எவரும்;
அவரவர் இயல்பின்படி சொல்லிச் சென்றார்கள் ஒவ்வொருவரும்,
எதனுடைய குணத்தையும் விளக்க முடியாது எவராலும்.

2) நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே,
நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே;
தாழ்ச்சியும் உயர்ச்சியும் நாமே, நிறைவும் குறைவும் நாமே,
ரசம் போன கண்ணாடி, சகலமும் தெரியும் ஜாம்ஷீத்தின் மாயக்கிண்ணம்,
இரண்டும் நாமே.

– உமர் கய்யாம்

ஜாம்ஷீத் மாயக்கிண்ணம் – ஜாம்ஷீத் பாரசீகப் புராணங்களில் வரும் புகழ்பெற்ற அரசர். இவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜாம்ஷீத் மாயக்கிண்ணம் முக்காலத்தையும் காட்டக்கூடியதாக நம்பப்பட்டத

மாெழிபெயர்க்க.

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody justfinished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

விடை:-

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். அவர்கள் ஒரு ஏரியை அடைந்தார்கள். யாரோ ஒருவர் துணி துவைத்தபடியால் ஏரி கலங்கி சேறுடன் காணப்பட்டது. புத்தர் தனது சீடர்களிடம் மரத்தின் அருகே சிறிது ஓய்வு எடுக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து சீடர்கள் தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதை கவனித்தனர். அழுக்குகள் ஒதுங்கி விட்டன. உங்கள் மனமும் அப்படித்தான். அது தொந்தரவு செய்யும்போது, அப்படியே இருக்கட்டும். சிறிது நேரம் கொடுங்கள். அது கரைந்து, மறைந்து அழிந்து போய்விடும். நாங்கள் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கையின் சிறந்த முடிவுகளை நாங்கள் தீர்மானிக்கலாம் மற்றும் எடுக்கலாம். ” அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

சொற்றொடர்களை அடைப்புகுறிக்குள் உள்ளவாறு மாற்றுக

1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக  முரளி கூறினார் (நேர்கூற்றாக மாற்றுக)

  • “நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்

2. “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிேறாம்” என்று ஆசிரியர் கூறினார் (அயற்கூற்றாக மாற்றுக)

  • “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள்  ஹோட்டலில் சாப்பிடப்பட்டான் (பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக)

  • காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்)

4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ( ஒலி மரபுப் பிழைகளை திருத்துக)

  • அகவும் மயிலும், அலறும்ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்

5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளை திருத்துக)

  • கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஓடின

அஞ்சலட்டையில் எழுதுக.

வார இதழ் ஒன்றில் படித்த கவிதையை/ கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில் கடிதம் எழுதுக.

9th Standard - Yappuilakkanam - Anjal Attaiil eluthuga

நயம் பாராட்டுக.

திங்கள்முடி சூடுமலை
தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை
தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு
அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதியமலை என்மலையே

குமரகுருபரர்

திரண்ட கருத்து

நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை, எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடம் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.

அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அரள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே

மோனை நயம்

செய்யுளின் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்

எ.கா.

  • ங்கு – மிம் முனி
  • ங்கயற்கண்ணி – ருள் சுரந்து

எதுகைத்தொடை

செய்யுளின் அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்

எ.கா.

  • திங்கள் – தங்கு
  • ங்கயற் – பொங்கருவி

சந்த நயம்

“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பல் ஓசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

அணி நயம்

பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்த பொழிவதென” என்னும் அடியில் உவமை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

பொருத்தமான வாய்ப்பாடுகளை கூறுக

1. பகலவன் – காசு / கருவிளம் / கூவிளங்கனி

விடை : கருவிளம்

2. மலர்ச்சி – கூவிளம் / புளிமா / கருவிளம் –

விடை : புளிமா

3. தாவோவியம் – தேமாங்கனி / தேமா – பிறப்பு

விடை : தேமாங்கனி

4. வெற்றிடம் – நாள் / கூவிளம் / புளிமா

விடை : கூவிளம்

5. பூங்குட்டி – கருவிளங்கனி / மலர் / தேமாங்காய்

விடை : தேமாங்காய்

அகராதியில் காண்க

1. வயம்

  • வலிமை
  • வெற்றி
  • வேட்கை

2. ஓதம்

  • வெள்ளம்
  • கடல் அலை
  • ஒலி

3. பொலிதல்

  • செழித்தல்
  • பெருகுதல்
  • மிகுதல்

4. துலக்கல் 

  • விளக்கம்
  • ஒளி
  • மெருகு
  • தெளிவு

5. நடலை

  • வஞ்சனை
  • துன்பம்
  • பொய்மை

வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

1. ___________ நிலவுடன் ___________ அழகாகக் காட்சியளிக்கிறது.

விடை : வளர்பிறை, விரிவானம்

2. ___________ங்கொடிகளும் ___________ங்களும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

விடை : தளிர் பூ, விளைநில

3. ___________கள் அனைத்தும் ___________ யில் முழுகிக்கிடக்கின்றன.

விடை : நீள்வீதி, மூடுபனி

4. மெல்ல வீசும் ___________றும் ___________ புகழ்பாடுகின்றது.

விடை : குளிர்காற்று, வளர்தமிழ்

5. தொலைவில் கலங்___________த்தின் ஒளி ___________ சுவரை ஒளிரச் செய்கிறது.

விடை : கரைவிளக்க, உயர்மதில்

பொருத்துக

1. நேர் நேர் நிரை அ. கூவிளங்காய்
2. நிரை நிரை நேர் ஆ. கூவிளம்
3. நேர் நிரை இ. தேமாங்காய்
4. நிரை நிரை ஈ. தேமாங்கனி
5. நேர் நேர் நேர் உ. கருவிளம்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

9th Standard - Yappuilakkanam - Katchiyai Kandu kavinuru eluthuga நான் தலை குனிந்து
எழுதுவது எல்லாம்
நாளைய உலகம்
தலை நிமிரத்தான்

இப்படிக்கு
பேனா

கலைச்சாெல் அறிவாேம்

ஒரு நல்ல தோழியாக / தோழராக நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது..

  • எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது.
  • விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல்.
  • நண்பர்களுக்கு புரியாத பாடங்களை சொல்லி கொடுத்தல்.

கலைச்சாெல் அறிவாேம்

  • எழுத்துரு – Font
  • மெய்யியல் (தத்துவம்) – Philosophy
  • அசை – Syllable
  • இயைபுத் தொடை – Rhyme
  • எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters

அறிவை விரிவு செய்

  • பெரியாரின் சிந்தனைகள் – வே. ஆனைமுத்து
  • அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு. சாம்பசிவன்)
  • தங்கைக்கு – மு. வரதராசன்
  • தம்பிக்கு – அறிஞர் அண்ணா

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment