TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 2.1 – நீரின்றி அமையாது உலகு

2.1 நீரின்றி அமையாது உலகு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 2.1 – நீரின்றி அமையாது உலகு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Neerindri Amaiyathu Ullgu

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?

  1. அகழி
  2. ஆறு
  3. இலஞ்சி
  4. புலரி

விடை : புலரி

2. பொருத்தமான விடையைத் தேர்க.

அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்

ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்

இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

  1. அ, இ
  2. ஆ, இ
  3. அ, ஆ
  4. அ, ஆ, இ

விடை : அ, இ

குறு வினா

1. “கூவல்” என்று அழைக்கப்படுவது எது?

கூவல் என்று அழைக்கப்படுவது உவர் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை என்பதாகும்.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

ஆறு, குளம், வாய்க்கால், கிணறு

3. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

அகழிநீர், வெறுநிலம், நீளமான மலை, குளிர்ந்த நிழல் தரும் காடு

சிறு வினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

  • அதிகப்படியான் நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி விட்டனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் நிலத்தடி நீரை சிக்கனமாகவே பயன்படுத்த வேண்டும்.
  • மழைநீர் சேமிப்புத் தொட்டி மூலம் நிலத்தடியில் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
  • மிகுதியாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.
  • இப்படிச் செய்வதால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

2. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

பயன்பாட்டுக்குத் தேவையான நீரை வெளியேற்றவும், சேற்றை வெளியேற்றவும் சோழர் காலக் குமிழித் தூம்பு பயன்படுத்தப்பட்டது. சோழர் காலக் குமிழித் தூம்பினைப் பயன்படுத்துவதன் மூலம் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

நெடு வினா

1. நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரி

  • நீர்இன்று அமையாது உலகு என்னும் தம் கருத்தை வள்ளுவர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
  • மனித வாழ்வின் அடித்தளம் நீரே!
  • மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகிறது.
  • மழை உழவுக்கு உதவுகிறது.
  • விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது.
  • நிலமும், மரமும், உயிர்களும் நோயின்றி வாழ நீரே அவசியம்.
  • உடலை குளரிவிப்பதற்கும், சாமியாடிகளுக்கு மஞ்சள் நீர் கொடுப்பதும், திருமணமான பின் கடலாடுதலும், இறப்பு சடங்கிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நீர் கொடுத்து வரேவற்பதற்கும், விவசாய நிலத்திற்கு உழைக்கச் செல்வோர் குடிப்பதும் என அனைத்து செயல்களுக்கும் நீரே அவசியம்.
  • அதனால் தான் வள்ளுவர் “நீர்இன்று அமையாது உலகு” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

கற்பவை கற்றபின்

1. நீரின்று அமையாது உலகு, நீரின்று அமையாது யாக்கை இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்தி வகுப்பில் கலந்துரையாடுக.

நீரின்று அமையாது உலகு, நீரின்று அமையாது என்பது வள்ளுவன் வாய்மொழி. நீரின்றி அமையாது என்பது குடபுலவியனார் வாக்கு. நீரில்லாமல் உலகம் இல்லை. நீரில்லாமல் உடலும் இல்லை. உடலும் உலகமும் இயங்க நீரே அவசியம் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. நீரில்லாம் உலகம் இல்லை. நீங்களும் இல்லை

2. வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கி்றது? இதற்கான நீர் எங்கிருந்து வருகிறது? இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தண்ணீர் போதுமானதாக இருக்கும்? என்பவற்றுக்கான தகவல்களைத் திரட்டி ஒப்படைவு உருவாக்குக.

ஒப்படைவு

  • வீடுகளில் பயன்படுத்தம் தண்ணீர் ஆழ்துளைக்கிணற்றிலிருந்து கிடைக்கிறது.
  • இதற்கான நீர் பூமிக்கடியில் இருந்து வருகின்றது.
  • மழை பொய்த்தாலும், பெய்த மழை நீரை சேமிக்காததாலும் இன்னும் சில காலத்திற்குத் தண்ணீர் போதுமானதாக இருக்குமா என்பது கூட ஐயமே!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ____________ என்று அழைப்பர்

  1. கம்மாய்
  2. கண்மாய்
  3. உறைக்கிணறு
  4. ஊருணி

விடை : கண்மாய்

2. “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” எனக் கூறும் சங்க நூல் ____________

  1. திருக்குறள்
  2. சிலப்பதிகாரம்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : புறநானூறு

3. “குளித்தல்” என்ற சொல் குறித்த புதிய சிந்தனைகளத் தந்தவர் ____________

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. இளங்கோவடிகள்
  4. தொ.பரமசிவன்

விடை : தொ.பரமசிவன்

4. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை ____________

  1. ஜான் பென்னி குவிக்
  2. திருவள்ளுவர்
  3. சர் ஆர்தர் காட்டன்
  4. தொ.பரமசிவன்

விடை : சர் ஆர்தர் காட்டன்

5. “கல்லணை” ____________ என்று அழைக்கப்படுகிறது

  1. கிராண்ட் அணைக்கட்
  2. சிராண்ட் அணைக்கட்
  3. சின்ன அணைக்கட்
  4. பெரிய அணைக்கட்

விடை : கிராண்ட் அணைக்கட்

6. முல்லைப் பெரியார் அணையை கட்டியவர் ____________

  1. சர் ஆர்தர் காட்டன்
  2. காமராஜர்
  3. ஜான் பென்னி குவிக்
  4. தொ.பரமசிவன்

விடை : ஜான் பென்னி குவிக்

7. பாண்டி நாட்டு மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர் ____________

  1. கம்மாய்
  2. கண்மாய்
  3. குண்டு
  4. ஏரி

விடை : கண்மாய்

8. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ____________

  1. கம்மாய்
  2. இலஞ்சி
  3. கூவல்
  4. ஏரி

விடை : கூவல்

9. கல்லணை ____________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

  1. காவிரி
  2. வைகை
  3. நொய்யல்
  4. தாமிரபரணி

விடை : காவிரி

10. ____________ ஆற்றின் இடையே தெளலீஸ்வரம் அணையைக் கட்டியவர்

  1. வைகை
  2. நொய்யல்
  3. காேதாவரி
  4. தாமிரபரணி

விடை : காேதாவரி

11. கல்லணையின் கட்டுமானத் தொழில் உத்தியை கொண்டு ____________ அணையைக் கட்டினர்

  1. மேட்டூர்
  2. பவானிசாகர்
  3. தெளலீஸ்வரம்
  4. மாமல்லபுரம்

விடை : தெளலீஸ்வரம்

12. 1829 காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப்பொறுப்பாளராக நியமிக்கபட்டபவர்

  1. சர் ஆர்தர் காட்டன்
  2. காமராஜர்
  3. ஜான் பென்னி குவிக்
  4. தொ.பரமசிவன்

விடை : சர் ஆர்தர் காட்டன்

13. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
  2. குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
  3. ஊருணி – மக்கள் பருகு நீர் உள்ள இடம்
  4. ஊற்று – பெருங்கிணறு

விடை : ஊற்று – பெருங்கிணறு

14. நீர்நிலைகளோடு தொடர்பில்லாத ஒன்று ___________

  1. கடல்
  2. குண்டு
  3. சுட்டுக்கிணறு
  4. ஒட்டும் களிமணி

விடை : ஒட்டும் களிமணி

15. நீராடல் பருவம்” இடம்பெறும் சிற்றிலக்கியம் ___________

  1. பிள்ளைத்தமிழ்
  2. கலம்பகம்
  3. பள்ள
  4. உலா

விடை : பிள்ளைத்தமிழ்

பொருத்துக

1.கல்லணை அ. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர்
2. தெளலீஸ்வரம் அணை ஆ. கோதாவரி ஆறு
3. முல்லைப் பெரியாறு அணை இ. காவிரி ஆறு
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

பொருத்துக

1. கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு அ. குண்டு
2.பல வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் ஆ. ஊற்று
3. அடியில் இருந்து நீர் ஊறுவது இ. இலஞ்சி
4. குளிப்பதற்கேற்ற சிறுகுளம் ஈ. ஆழிக்கிணறு
விடை : 1 – ஈ, 2 – இ, 2 – ஆ, 3 – அ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. பழந்தமிழரின் அணைக்கட்டும் திறன் பாசன் மேலாண்மையை உலகுக்கு எடுத்தக்காட்டியவர் ____________

விடை : சர் ஆர்தர் காட்டன்

2. குளித்தல் என்ற சொல்லுக்கு ____________ என்பது பொருள்ளல்ல

விடை : உடம்பினைத் தேய்த்தல் அல்லது அழுக்கு நீக்குதல்

3. தஞ்சாவூர் மாவட்டம் பாசன வசதி பெற ____________ கட்டப்பட்டது

விடை :கல்லணை

4. _________ என்று பாடியவர் ஆண்டாள்

விடை : குள்ளக் குனிந்து நீராடி

5. தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை _________ என்று கூறுவர்

விடை : திருமஞ்சனம் ஆடல்

6. 1873-ல் _________ ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

விடை : கோதாவரி

7. _________  என்பது ஒளவையார் வாக்கு

விடை : சனி நீராடு

குறு வினா

1. இயற்கையின் கொடைகள் எவை?

மலைகள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், நீர்நிலைகள், வயல்வெளிகள், பசுமையான தோப்புகள்

2. மழை பற்றி மாங்குடி மருதனார் தரும் செய்தியாக மாணவர் வெண்மதி கூறுவனவற்றை எழுதுக

  • மழை உழவுக்கு உதவுகிறது.
  • விதைக்கு விதை ஆயிரமாகப் பெருகிறது.
  • நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன.

ஆகியவை மழை பற்றி மாங்குடி மருதனார் தரும் செய்திகளாகும்

3. முந்நீர் யாவை?

ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்

4. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நாடுகள் யாவை?

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா

5. உறை கிணறு, ஊருணி விளக்கம் தருக

  • உறைகிணறு : மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு உறைகிணறு ஆகும்.
  • ஊருணி : மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை ஊருணி ஆகும்.

6. திருமஞ்சனம் ஆடல் என்று எதனைக் கூறுவர்?

தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

7. உலக சுகாதார நிறுவனம் தரும் எச்சரிக்கை யாது?

உலக சுகாரார நிறுவனம், உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரிக்கிறது.

8. முல்லைப் பெரியாறு அணையால் பயன்படும் மாவட்டங்கள் எவை?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்

9. குமிழித் தூம்பு யார் காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

குமிழித் தூம்பு சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

10. நீர்நிலைக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

  • அகழி
  • அணை
  • ஊருணி
  • ஆழிக்கிணறு
  • உறைக்கிணறு
  • ஏரி
  • குளம்
  • கேணி
  • கண்மாய்

11. நிலமும், மரமும் எந்த நோக்கில் வளர்கின்றன மாங்குடி மருதனார் கூறுகிறார்?

மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகிறது. நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன மாங்குடி மருதனார் கூறுகிறார்.

12. ஜான் பென்னி குவிக் முல்லைப் பெரியார் அணையை எதற்காக கட்டினார்?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உதவுவதற்காக முல்லை பெரியார் அணையை ஜான் பென்னி குவிக் கட்டினார்

சிறு வினா

1. கல்லணை குறிப்பு வரைக

  • கரிகாலனின்  விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை.
  • கல்லணையின் நீளம் – 1808 அடி
  • கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி
  • கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி
  • வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டுள்ளது.
  • கல்லணையைக் கட்டிய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.
  • இவர் கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரைச் சூட்டினார்

2. கல்லணையை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுப்டம் பற்றி கூறுக

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.
  • அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்கு சென்றன.
  • அதன்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத களிமண்ணை புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதாமாகச் செய்தனர்.
  • இதுவே கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

3. தொ.பரமசிவன் குளித்தல் என்பதற்கு கூறும் விளக்கம் யாது

  • குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினை தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல் பொருள்
  • சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிவைத்தல் என்பதே அதன் பொருள்.
  • குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்து
  • இதுவே தொ.பரமசிவன் குளித்தல் என்பதற்கு தரும் விளக்கம் ஆகும்.

4. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் மூலம் பாசன மேலாண்மைக்கு எவ்வாறு தொண்டாற்றினார்?

  • இந்திய நீர் பாசனத்தின் தந்தையான சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர்.
  • கல்லணையைப் பல ஆண்டுக்காலம் ஆராய்ந்தார்.
  • கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் வெள்ளத்தாலும், வளர்ச்சியாலும் வளமை குன்றியது.
  • இந்நிலையில் சர் ஆர்தர் காட்டன் 1829-ல் காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதியாக பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார்
  • அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழிரின் அணைகட்டும் திறனையும், பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்
  • கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டினார்.
  • கல்லணையின் கட்டுமான உத்திகளை கொண்டு 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment