TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.2 – இளைய தோழனுக்கு

3.2 இளைய தோழனுக்கு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.2 – இளைய தோழனுக்கு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Ilaiya Tholanuku

8th Std Tamil Text Book – Download

மனப்பாடப் பாடல்

ஓடிவந்து கைகுலுக்க
ஒருவருமில்லையா?
உன்னுடன் நீயே
கைகுலுக்கிக் கொள்!

தூங்கி விழுந்தால்
பூமி உனக்குப்
படுக்கையாகிறது.
விழித்து நடந்தால்
அதுவே உனக்குப்
பாதையாகிறது!

நீ
விழித்தெழும் திசையே
பூமிக்குக் கிழக்கு!
உன்
விரல்களில் ஒளிரும்
சூரியவிளக்கு!

நட!
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட!

– மு.மேத்தா

பாடலின் பொருள்

செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.

உலகிற்க ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாககி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அது உனக்கும் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்டம் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான்.

நூல் வெளி

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா.
  • கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்
  • கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும், திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உன்னுடன் நீயே …………….. கொள்.

  1. சேர்நது
  2. பகை
  3. கைகுலுக்கிக்
  4. நட்பு

விடை : கைகுலுக்கிக்

2. கவலைகள் ……………. அல்ல

  1. சுமைகள்
  2. சுவைகள்
  3. துன்பங்கள்
  4. கைக்குழந்தைகள்

விடை : கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

  1. விழி + எழும்
  2. விழித்து + எழும்
  3. விழி + தெழும்
  4. விழித் + தெழும்

விடை : விழித்து + எழும்

4. ‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

  1. போவது + இல்லை
  2. போ + இல்லை
  3. போவது + தில்லை
  4. போவது + தில்லை

விடை : போவது + இல்லை

5. ‘படுக்கையாகிறது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

  1. படுக்கை + யாகிறது
  2. படுக்கையா + ஆகிறது
  3. படுக்கையா + கிறது
  4. படுக்கை + ஆகிறது

விடை : படுக்கை + ஆகிறது

6. ‘தூக்கி + கொண்டு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

  1. தூக்கிகொண்டு
  2. தூக்குக்கொண்டு
  3. தூக்கிக்கொண்டு
  4. தூக்குகொண்டு

விடை : தூக்கிக்கொண்டு

7. ‘விழித்து + எழும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

  1. விழியெழும்
  2. விழித்தெழும்
  3. விழித்தழும்
  4. விழித்துஎழும்

விடை : விழித்தெழும்

குறு வினா

1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்

2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

நெய்யாகவும், திரியாகவும் நீ மாறினால் தோல்வியும் உனக்கு தூண்டுகோலாகும்.

சிறு வினா

பூமி எப்போது பாதையாகும்?

  • நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய் படுக்கையாகும்
  • நீ பிடித்து நடந்தால் அந்த பூமியே உனக்குப் பாதையாகும்.

சிந்தனை வினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

வாழ்வில் உயர

ஊக்கம் சொல்லும் சொல்லில் உண்மை
தன்னம்பிக்கை நடுவுநிலைமை
தளராத முயற்சி ஒருமைப்பாடு
காலம் அறிந்து செயல்படுதல் இரக்கம்
செய்யும் செயலில் நேர்மை அன்பு

ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

கற்பவை கற்றபின்

1. ‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.

சிப்பியின் தன்னம்பிக்கையால்
விளைந்தது முத்து
விதையின் தன்னம்பிக்கையால்
உயர்தது விருட்சம்
ஆமையின் தன்னம்பிக்கையால்
விளைந்தது வெற்றி

மேகத்தின் தன்னம்பிக்கையால்
விளைந்தது மழை
உழவனின் தன்னம்பிக்கையால்
விளைந்தது நெற்பயிர்
மேதைகளின் தன்னம்பிக்கையால்
விளைந்தது கண்டுபிடிப்புகள்

2. நம்பிக்கையே வெற்றி’– என்பதை உணர்ததும் கதை ஒன்றைத் தேடி எழுதி வருக.

நல்லூர் என்ற சிற்றூரில் கணபதி என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழை. அக்கம் பக்கம் உள்ள வயல்களில் விவசாயக் கூலியாகச் செல்வான். ஆறு மாதங்களாக மழையில்லாததால் அக்கம் பக்கம் உள்ள வயல்களில் கனபதிக்கு வேலை இல்லை.

வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக விற்று சில மாதம, அவரது குடும்பம் உணவு உண்டது. இனி வீட்டில் விற்பதற்கு பொருள் இல்லை. வறுமையை நினைத்து கணபதி மனம் தளரவில்லை. வெற்று நிலத்தை உற்று நோக்கிய அவனுக்கு, நிலமே அவனை வாழவைக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

மண்ணைக் கையில் எடுத்தான். அவற்றிற்கு உருவம் கொடுத்தான். வணண்ம் தீட்டி அருகில் உள்ள நகரத்திற்கு கொண்டுபோய் சாலையோரமாக வைத்து விற்றான்.

வருமானம் பெருகி பெரிய மண்பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்தான். இணையத்தில் தன் பொருட்களை விளம்பரப் படுத்தினான். அவனது வணிகம் இணையத்தில் பெருகியத. நம்பிக்கையால் கணபதி உயர்ந்து மகா கணபதி ஆனான்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் _____________

  1. பாரதியார்
  2. மு.மேத்தா.
  3. சுரதா
  4. கவிமணி

விடை : கைகுலுக்கிக்

2. சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல் _____________

  1. ஆகாயத்துக்கு அடுத்தவீடு
  2. கண்ணீர்பூக்கள்
  3. மகுட நிலா
  4. ஊர்வலம்

விடை : ஆகாயத்துக்கு அடுத்தவீடு

3. நீ செல்லும் _____________ உன்னை எதிர்க்கப் போவதில்லை

  1. நாள்
  2. திசை
  3. பாதைகள்
  4. கவலைகள்

விடை : பாதைகள்

4. உன் விரல்களில் _____________ விளக்காக ஒளி வீசும்

  1. நிலா
  2. கதிரவன்
  3. வானவில்
  4. விண்மீன்

விடை : கதிரவன்

குறு வினா

1. “பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை” என்று கவிஞர் மேத்தா கூறக் காரணம் யாது?

  • செயல்படத் தொடங்கும் நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள் தான்.
  • உனது பாதங்கள் நடக்கத் தயராக் இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை என்றார் மேத்தா

2. வாழ்க்கையில் நம்பிக்கை எதற்கு உறுதுணையாக இருக்கிறது?

நம்பிக்கையின் ஆற்றலை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கினால் வாழ்வில் வெற்றி பெறலாம்

3. புத்துணர்வு ஊட்டுபவர் யார்?

  • உன்னை பராட்டி புத்துணர்வு அளிக்க ஒருவரும் இல்லை என்று வருந்தாதே!
  •  உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டி புத்துணர்வு ஊட்ட முடியாது.

4. மு.மேத்தா எழுதியுள்ள நூல்கள் யாவை?

  • கண்ணீர்ப் பூக்கள்
  • சோழ நிலா
  • மகுட நிலா

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment