TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.2 – மெய்ஞ்ஞான ஒளி

2.2 மெய்ஞ்ஞான ஒளி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.2 – மெய்ஞ்ஞான ஒளி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - meignana oli

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • பகராய் – தருவாய்
  • பராபரம் – மேலான பொருள்
  • ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
  • அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

பாடலின் பொருள்

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

நூல்வெளி

  • குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
  • இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
  • சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
  • எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
  • நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மனிதர்கள் தம் ___________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

  1. ஐந்திணைகளை
  2. அறுசுவைகளை
  3. நாற்றிசைகளை
  4. ஐம்பொறிகளை

விடை : ஐம்பொறிகளை

2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ___________

  1. பகர்ந்தனர்
  2. நுகர்ந்தனர்
  3. சிறந்தனர்
  4. துறந்தனர்

விடை : பகர்ந்தனர்

3. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. ஆனந்த + வெள்ளம்
  2. ஆனந்தன் + வெள்ளம்
  3. ஆனந்தம் + வெள்ளம்
  4. ஆனந்தர் + வெள்ளம்

விடை : ஆனந்தம் + வெள்ளம்

4. ‘உள் + இருக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

  1. உள்ளேயிருக்கும்
  2. உள்ளிருக்கும்
  3. உளிருக்கும்
  4. உளருக்கும்

விடை : உள்ளிருக்கும்

குறு வினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் இன்பப் பெருக்காய்க் கரை கடந்து பொங்கிடும் கடலாக, மேலான பரம் பொருள் விளங்குகின்றது.

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

மேலான பொருளின் மீது பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் மனிதனின் மனம் கலங்கும்

சிறு வினா

குணங்குடியார் பாரபரத்திடம் வேண்டுவன யாவை?

  • மேலான பொருளையும் தம் தீய எண்ணங்களையும் அடியோடு அழித்தவர்கள், மனதில் உள்ளே இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!
  • உன் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
  • நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்திற்குள் இன்பப்பொருக்காய் கரை கடந்து பொங்கும் கடலாக விளங்கி நிற்கின்றாள்
  • மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.

சிந்தனை வினா

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?

கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகியன ஐம்பொறிகள் ஆகும்.

  • கண்கள் மூலம் உயிர் இரக்கம் காட்டுதல் வேண்டும்.
  • செவி மூலம் பெரியோர்களின் நற்சொல் கேட்டல் வேண்டும்.
  • வாய்மூலம் துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறியும் இரக்கமான சொற்களையும் கூறுதல் வேண்டும்.
  • மூக்கின் மூலம் எரிவாயு கசிவு உள்ளிட்டவற்றை உணர்ந்து, விபத்திலிருந்து தடுக்க உதவுதல் வேண்டும்.
  • நம் உடல் மூலம் ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் உதவுதல் வேண்டும்.

கற்பவை கற்றபின்

கணணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக

ஆதி முதலே யகண்டபரி பூரணமென்று
ஓதுங் குணங்குடி கொண்டோனே நிராமயமே!
தேசிகனா னென்றெ திருநடன மாடுகின்ற
வாசாம கோசரமே வாழி நிராமயமே!

– நிராமயக்கண்ணி

மெய்தொழவு மேலும் மேலும் நந்திகேஸ்வரனைக்
கைதொழு வுங்கனவு கண்டேன் மனோன்மணியே!
கோப்பாக வும் உனையான் கொண்டாடிப் பாடவும் நீ
காப்பாக வுங்கனவு கண்டேன் மனோன்மணியே

– மனோன்மணிக்கண்ணி

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ‘சுல்தான் அப்துல்காதர்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் ___________

  1. குணங்குடி மஸ்தான் சாகிபு
  2. பாரதி
  3. சுரதா
  4. பாரதிதாசன்

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு

2. இளம் வயதிலேய முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் ___________

  1. வள்ளலார்
  2. குணங்குடி மஸ்தான் சாகிபு
  3. பட்டினத்தார்
  4. பாரதிதாசன்

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு

3. குணங்குடி மஸ்தான் சாகிபு தவமியற்றி ஞானம் பெற்ற மலைகளுள் தவறானது ___________

  1. சதுரகிரி மலை
  2. புறாமலை
  3. நாகமலை
  4. பொதிகை மலை

விடை : பொதிகை மலை

3. குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய நூல்களுள் தவறனாது ___________

  1. முதிர் கண்ணி
  2. எக்காளக் கண்ணி
  3. மனோன்மணிக் கண்ணி
  4. நந்தீசுவரக் கண்ணி

விடை : முதிர் கண்ணி

சிறு வினா

1. ஐம்பொறிகள் தொகை விளக்கம் கூறுக

  • கண்
  • செவி
  • வாய்
  • மூக்கு
  • மெய்

2. குணங்குடியார் தவம் இயற்றிய மலைகளை கூறுக

  • சதுரகிரி
  • புறாமலை
  • நாகமலை

3. குணங்குடி மஸ்தான் சாகிபு குறிப்பு வரைக

  • குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
  • இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
  • சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
  • எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment