TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.5 – புணர்ச்சி

3.5 புணர்ச்சி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.5 – புணர்ச்சி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - punarchi

8th Std Tamil Text Book – Download

 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. விகாரப் புணர்ச்சி ………… வகைப்படும்.

  1. ஐந்து
  2. நான்கு
  3. மூன்று
  4. இரண்டு

விடை : மூன்று

2. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ………….

  1. இயல்பு
  2. தோன்றல்
  3. திரிதல்
  4. கெடுதல்

விடை : இயல்பு

பொருத்துக

1. மட்பாண்டம் தோன்றல் விகாரம்
2. மரவேர் இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு  திரிதல் விகாரம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

சிறு வினா

1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

நிலைமொழியும் வரும் மொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்

சான்று : தாய் மொழி

தாய் + மொழி = தாய் மொழிக இரு சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே இது இயல்பு புணர்ச்சி

2. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

மரம் + கட்டில் – திரில் விகாரப்புணர்ச்சியின் படி “ம்” என்பது “க்” ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்து, இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு.

கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து தோன்றல் விகாரத்தின் படி “க்” என்ற மெய்யெழுத்து தோன்றியது.

கூடுதல் வினாக்கள்

1. புணர்ச்சி என்றால் என்ன?

நிலை மொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதைப் புணர்ச்சி ஆகும்.

2. உயிரீற்றுப் புணர்ச்சி என்பது என்ன?

நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தா ல் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.

3. உயிர் முதல் புணர்ச்சி என்பதன் விளக்கம் கூறுக?

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர் முதல் புணர்ச்சி எனப்படும்.

4. விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?

இரண்டு சொற்கள் இணையும் போது நிலை மொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

5. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

6. தோன்றல் விகாரம் என்றால் என்ன?

நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.

7. திரிதல் விகாரம் என்றால் என்ன?

நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும்.

மொழியை ஆள்வோம்!

கேட்க.

நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

உழவும் நெசவும்

என் உயிர் கொடுத்த இன்னுயிர் பேச வைத்த இறைவனுக்கும் என் தமிழ் தாய்க்கு முதற்கண் வணக்கத்தைக் தெரிவித்துக் கொள்கிறேன். உழவும் நெசவும் எனும் நல்லதொர தலைப்பில் சில மணிதுளிகள் உங்களுடன் பேசுகிறேன்.

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்கிறது புறநானூறு. அதாவது ஒரு மனிதனுக்கு உணவும் உடையும் அவசியம் தேவை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறது. அந்த புறநானூற்று வரிகள் உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் இல்லை என்றால் என்ன ஆகும்? என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

உணவு இல்லாமல் வறுமையில் வாடி மண்ணின் வாய்க்கு உணவாக நாம் போய் இருப்போம். ஆடை இல்லாமல் போனால் மானம் அழிந்து மண்ணுக்கு இறையாய் இருப்போம். எனவே உழவும் நெசவும் இரு கண்களாக நாம் நினைக்க வேண்டும். எனவே உழவும் நெசவும் இரு கண்களாக நாம் நினைக்க வேண்டும். உணவுத் தொழிலுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவத்தினை நாம் கொடுக்க வேண்டும்.

எதிர்கால பாரதத்தை உருவாக்கக்கூடிய இளைஞர்களாகிய நாம் உழவுத் தொழிலையும் நெசவுத் தொழிலையும் கற்று அவை மேன்மையடைய நாம் உழைக்க வேண்டம் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.

தொழில்கள் பலவிதம்

ஆண்டவனுக்கும், அன்னைத் தமிழுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தொழில்கள் பலவிதம் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன்.

உழவுத் தொழில் நெசவுத் தொழில், சிறுதொழில், குறுந்தொழில், பெருந்தொழில் என தொழில்கள் பல உள்ளன. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்” என்றார் பாரதி. தொழில்களிலேயே முத்ன்மையான தொழில் உழவுத்தொழில் மற்றும் நெசவுத் தொழிலாகும். பிற தொழில்கள் அனைத்தம் இந்த இரு தொழில்கள் இடமிருந்து தான் தோன்றின.

சிறு முதலீடுகள் கொண்ட செய்யப்படும் தொழில்கள் சிறுதொழில்கள் எனப்பட்டன. குறு முதலீடுகளைக் கொண்டு செய்யப்பட்ட தொழில்கள் எனப்பட்டன. ஏழை எளிய மக்கள் குடிசைத்தொழிலை மேற்கொண்டனர். ஏதாவது ஒரு தொழில் கற்றுப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தில் நிபந்தனை. எனவே தொழில் வகைகளை அறிந்து ஏதேனும் ஒரு தொழிலைக் கற்று நாம் வாழ்வில் உயர வேண்டும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

சொல்லக் கேட்டு எழுதுக.

பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகின்றது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல்மின்சாரம் தயாரிக்க உதவுகின்றது.

மரபுத்தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப்பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.

கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

2. அவர் ஓர் அவசரக்குடுக்கை.

அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை

மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

1. ஆயிரங்காலத்துப் பயிர் அ. இயலாத செயல்.
2. கல்லில் நார் உரித்தல் ஆ. ஆராய்ந்து பாராமல்.
3. கம்பி நீட்டுதல் இ. இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
4. கானல்நீர் ஈ. நீண்டகாலமாக இருப்பது.
5. கண்ணை மூடிக்கொண்டு உ. விரைந்து வெளியேறுதல்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 –  ஆ

மரபுத்தொடர்களைத் தொடரில் எழுதுக

1. வாழையடி வாழையாக

  • வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

2. முதலைக்கண்ணீர்

  • காவலரிடம் மாட்டிக் கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.

3. எடுப்பார் கைப்பிள்ளை

  • நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.

கட்டுரை எழுதுக.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.

முன்னுரை

பெற்ற பிள்ளை உன்னைக் கைவிட்டாலம், கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும், நீ பழகிய கைத்தொழில் உன்னைக் கைவிடாமல் காப்பாற்றும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டம் என்பதே இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது.

கைத்தொழிலின் அவசியம்

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். புள்ளிக் கணக்கு வாழக்கைக்கு உதவாது என்பார்கள். அது உண்மையே நாம் கற்கும் கல்வியும் நம் எதிர்காலத்திற்கு ஒரு தொழில் கற்றக் கொடுக்கிறது என்றால் இல்லை. படித்து முடித்து பட்டம் பெற்று பின்னர் வேலை தேடும் போது தான் தெரியும். ஏதாவது ஒரு கைத்தொழிலாவது கற்று இருக்கலாமே என்று யோசிப்போம்.

கைத்தொழில் வகைகள்

பாய் பின்னுதல், கூடை பின்னுதல், அலங்கார பொம்மை செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுது பார்த்தல், கைபேசி பழுது பார்த்தல் என பலவகைத் தொழில்கள் கைத்தொழிலில் உள்ளன.

கைத்தொழிலின் பயன்கள்

கைத்தொழில் கற்றால் படித்த வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. கைத்தொழில் கற்ற உடன் வேலை தரும். வீட்டில் உள்ள பொருட்களை நாமே சரி செய்யலாம். கைத்தொழில்களை நாம் கற்றும் அதன் மூலம் பிறருக்கு அதனைக் கற்றுக் கொடுத்தும் பொருள் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

கைத்தொழிலால் தோன்றி கல்வி

தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறு தொழில் கல்வி ஆகியவை எல்லாம் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதொழில் பயிற்சி குறுந்தொழில் பயிற்சிக்காக கைத்தொழில் பலவற்றை இன்று தொழிற்கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.

முடிவுரை

வறுமையினால் பசி என்று வரக்கூடிய ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, ஒரு தூண்டிலை வாங்கி கொடுக்கலாம். அதுதான் அவருடைய வறுமையை நீண்ட காலம் போக்கும். இதுதான் கைத்தொழிலின் சிறப்பாகும்.

கைத்தொழில் கற்போம்! கவலை இல்லாமல் வாழ்வோம்!!

மொழியோடு விளையாடு

ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!

8th Standard - punarchi - Moliyodu vilaiyadu

இடமிருந்து வலம் :-

1. சிவகாசி 

  • பட்டாசு

5. திருபாச்சி

  • அரிவாள்

7. திருநெல்வேலி

  • அல்வா

12. கோவில்பட்டி

  • கடலைமிட்டாய்

வலமிருந்து இடம் :-

3. மதுரை

  • மல்லிகை

4. பண்ருட்டி

  • பலாப்பழம்

9. தஞ்சாவூர்

  • தலையாட்டி பொம்மை

10. மணப்பாறை

  • முறுக்கு

மேலிருந்து கீழ் :-

1. காஞ்சிபுரம்

  • பட்டுப்புடவை

2. சேலம்

  • மாம்பழம்

4. பழனி

  • பஞ்சாமிர்தம்

கீழிருந்து மேல் :-

6. தூத்துக்குடி

  • உப்பு

8. ஸ்ரீவில்லிப்புத்தூர்

  • பால்கோவா

11. திண்டுக்கல்

  • பூட்டு

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

  1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தெளிவேன்.
  2. நெசவுத் தொழிலின் சிறப்பை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

  • நூல் – Thread
  • தறி – Loom
  • தையல் – Stitch
  • ஆலை – Factory
  • பால்பண்ணை – Dairy farm
  • சாயம் ஏற்றுதல் – Dyeing
  • தோல் பதனிடுதல் – Tanning
  • ஆயத்த ஆடை – Readymade Dress

இணையத்தில் காண்க

குடிசைத் தொழில்களின் பட்டியலை இணையத்தில் தேடி எழுதுக.

  • மூலிகை குளியல் பொடி தயாரிப்பு
  • நெல்லி மிட்டாய் தயாரிப்பு
  • பிரட் தயாரிப்பு
  • கற்பூரம் தயாரிப்பு
  • சர்பத் தயாரிப்பு
  • பினாயில் தயாரிப்பு
  • காகித கவர் தயாரிப்பு
  • காகித தட்டு தயாரிப்பு
  • மெழுகுவர்த்தி தயாரிப்பு
  • குளியல் சோப்பு தயாரிப்பு

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment