TN 8th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.2 – கோணக்காத்துப் பாட்டு

2.2 கோணக்காத்துப் பாட்டு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.2 – கோணக்காத்துப் பாட்டு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - konakathupattu

8th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • முகில் – மேகம்
  • வின்னம் – சேதம்
  • கெடிகலங்கி – மிக வருந்தி
  • வாகு – சரியாக
  • சம்பிரமுடன் – முறையாக
  • காலன் – எமன்
  • சேகரம் – கூட்டம்
  • மெத்த – மிகவும்
  • காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

பாடலின் பொருள்

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னாமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய பயுலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்ட ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக! காப்பாயா

நூல்வெளி

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
  • புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. வானில் கரு __________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

  1. முகில்
  2. துகில்
  3. வெயில்
  4. கயல்

விடை : முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் __________யும் ஓட்டிவிடும்.

  1. பாலனை
  2. காலனை
  3. ஆற்றலை
  4. நலத்தை

விடை : காலனை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________ .

  1. விழுந்த + அங்கே
  2. விழுந்த + ஆங்கே
  3. விழுந்தது + அங்கே
  4. விழுந்தது + ஆங்கே

விடை : விழுந்தது + அங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________ .

  1. செ + திறந்த
  2. செத்து + திறந்த
  3. செ + இறந்த
  4. செத்து + இறந்த

விடை :  செத்து + இறந்த

5. “பருத்தி + எல்லாம்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________ .

  1. பருத்திஎல்லாம்
  2. பருத்தியெல்லாம்
  3. பருத்தெல்லாம்
  4. பருத்திதெல்லாம்

விடை : பருத்தியெல்லாம்

குறு வினா

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.

சிறு வினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

வொங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.

சிந்தனை வினா

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

  • வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • காட்டுத்தீ ஏற்படும் நேரத்தில் காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்புறத்திற்கு வந்த தங்க வேண்டும்.
  • சுனாமி ஏற்படும்போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்கதல் வேண்டும்.
  • நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் சென்று தங்குதல் வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

1. மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.

நில நடுக்கங்கள்

நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்து சரிதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகழ்வுகளின் பின்னணியின் மக்களுக்குப் பேரழிவுகளுடன் பேரிழப்பும் ஏற்படுகிறது.

எரிமலை வெடித்துச் சிதறுதல்

ஒரு எரிமலை, வெடித்தப் பேரழிவாக சிதறும் போது ‘லார்வா’ தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகள் இருக்கும். அதனுள் பல்வேறு வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழிந்துவிடும்.

வெள்ளப் பெருக்கு

நீரோடத்தின் வலிமையானத மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்த ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சேதம் உண்டாக்குகிறது.

சுனாமி

சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் மிகுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போத ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம், மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண் பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூல காரணிகளாகும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும்.

சூறாவளி, புயல்

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூறாவளியின் போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழையும் பலத்த காற்றையும் கொண்டு வரும். இதனால் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அதிகமாக ஏற்படும்.

காட்டுத் தீ

காட்டுத் தீ என்பது, எரியக் கூடிய தாவரங்ளைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய அளவு தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம் எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளியைக் கடந்த செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. இதனால் பல உயிர்கள் எரிந்து சாம்பலாகின்றன. கடந்த ஆண்டு குரங்கனி காட்டத்தீ பாதிப்பு நாம் அறிந்ததே.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையத் தேர்ந்தெடு

1. ____________ அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும்.

  1. டெல்லி
  2. தமிழ்நாடு
  3. பஞ்சாப்
  4. அஸ்ஸாம்

விடை : தமிழ்நாடு

2. இயற்கை ____________ கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

  1. ஆசை
  2. அன்பு
  3. சீற்றம்
  4. நாற்றம்

விடை : சீற்றம்

3. “சேகரம்” என்பதன் பொருள் ____________ 

  1. கூட்டம்
  2. நாட்டம்
  3. பட்டம்
  4. கட்டம்

விடை : கூட்டம்

4. திரண்டு எழுந்த ____________ ஆல் உருவான காற்று வேகமாக அடித்தது.

  1. காற்றுகள்
  2. ஓசைகள்
  3. கூட்டங்கள்
  4. மேகங்கள்

விடை : மேகங்கள்

5. ____________ என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின

  1. தொண்டை
  2. ஆர்க்காடு
  3. வாங்கல்
  4. மைசூர்

விடை : மேகங்கள்

6. பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ____________ 

  1. தொண்டைமான் நாடு
  2. ஆர்க்காடு
  3. தெத்துக்காடு
  4. காங்கேய நாடு

விடை : காங்கேய நாடு

7. கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் பேண்டும் தெய்வம் ____________ 

  1. சிவன்
  2. திருமான்
  3. முருகன்
  4. பெருமாள்

விடை : முருகன்

8. நாட்டில் பெரும் பஞ்சம் எற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ____________ பாடல்களாகப் பாடினார்.

  1. ஒப்பாரி
  2. கும்மி
  3. வள்ளை
  4. சடங்கு

விடை : கும்பி

9. புலவர் ____________ தொகுத்தத பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்

  1. மீரா
  2. வீரா
  3. முரசு
  4. செ.இராசு

விடை : செ.இராசு

10. ____________ இயற்றிய காத்து நொண்டிச் சித்திலிருந்து சில பாடல்கள் பாடமாக அமைந்துள்ளது.

  1. அரங்கநாதன்
  2. வெங்கம்பூர் சாமிநாதன்
  3. கோதை நாயகி
  4. சி.சு.செல்லப்பா

விடை : வெங்கம்பூர் சாமிநாதன்

11. “வேகம் + உடன்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. வேகவுடன்
  2. வேகமுடன்
  3. வேகம்வூடன்
  4. வேகம் உடன்

விடை : வேகமுடன்

12. “செத்து + இறந்து” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. செத்துஇறந்து
  2. செத்திறந்து
  3. செதிறந்து
  4. செத்இறந்து

விடை : செத்திறந்து

13. “வேகம் + உடன்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. வேகமுடன்
  2. வேகம்உடன்
  3. வேகம் உடன்
  4. வேகம்முடன்

விடை : செத்திறந்து

14. “தென்னம் + பிள்ளை” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

  1. தென்னபிள்ளை
  2. தென்னம்பிள்ளை
  3. தென்னம்ப்பிள்ளை
  4. தென்னம்ப் பிள்ளை

விடை : தென்னம்பிள்ளை

குறு வினா

1. இயற்கை எவ்வாறு அழிவை ஏற்படுத்தும்?

இயற்கைச் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

2. வீடுகளின் கூரைகள் ஏன் சரிந்தன?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன.

3. வாங்கல் ஊரில் எவை வீணாயின?

வாங்கல் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

4. எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?

அழவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின

5. மாடி வீடுகள் எப்படி விழந்தன?

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

6. தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் எவை  இறந்தன?

தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன.

7. பஞ்சம் எற்பட்ட காலங்களில் புலவர்கள் எத்தகையப் பாடல்களை பாடினர்?

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப்பாடல்களாகப் பாடினர்.
  • பேச்சத் தமிழில் அமைந்த இவை பஞ்சக் கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment