TN 7th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.1 – மலைப்பொழிவு

3.1 மலைப்பொழிவு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.1 – மலைப்பொழிவு.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Malaipolivu

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் முத்தையா
சிறப்புப்பெயர் கவியரசு, கவிப்பேரரசு
பணி பாடலாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர்
படைப்புகள் ஆட்டனத்தி ஆதிமந்தி, குமரிக்கண்டம், சேரமான் காதலி, மாங்கனி, தைப்பாவை, இயேசுகாவியம்

சொல்லும் பொருளும்

  • சாந்தம் – அமைதி
  • தாரணி – உலகம்
  • மகத்துவம் – சிறப்பு
  • தத்துவம் – உண்மை
  • பேதங்கள் – வேறுபாடுகள்
  • இரக்கம் – கருணை

பாடலின் பொருள்

(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. மனிதன்

ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

நூல்வெளி

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
  • இவர் “கவியரசு” என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
  • இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும்.
  • இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது …………………………

  1. பணம்
  2. பொறுமை
  3. புகழ்
  4. வீடு

விடை : பொறுமை

2. சாந்த குணம் உடையவர்கள் ………………………… முழுவதையும் பெறுவர்.

  1. புத்தகம்
  2. செல்வம்
  3. உலகம்
  4. துன்பம்

விடை : உலகம்

3. ’மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………..

  1. மலை + யளவு
  2. மலை + அளவு
  3. மலையின் + அளவு
  4. மலையில் + அளவு

விடை : மலை + அளவு

4. ’தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

  1. தன் + னாடு
  2. தன்மை + னாடு
  3. தன் + நாடு
  4. தன்மை + நாடு

விடை : தன் + நாடு

5. “இவை + இல்லாது” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….

  1. இவையில்லாது
  2. இவைஇல்லாது
  3. இவயில்லாது
  4. இவஇல்லாது

விடை : இவையில்லாது

பொருத்துக.

1. சாந்தம் அ. சிறப்பு
2. மகத்துவம் ஆ. உலகம்
3. தாரணி இ. கருணை
4. இரக்கம் ஈ. அமைதி
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும்.

3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்

சிறு வினா

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.
  • வாழ்க்கையில் தேவைப்படும் பொறுமை. அது மண்ணையும், விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்றார்.
  • சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.
  • அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்.
  • பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.

சிந்தனை வினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகிய அழிந்து மனிதநேயம் மலர வேண்டும். அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.

கற்பவை கற்றபின்

இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

ஒரு நாள் பெரிய பிரசங்க கூட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு ஒர சிறுவன் இயேசுவைக் காண வந்தான். அங்கு சுமார் 5000 பேர் இருந்தனர். சிறவன் 5 ரொட்டி, 2 மீன்கள் கொண்டு வந்தான். அதனை இயேசு ஆசீர்வதிக்க அவை பலவாகப் பெருகி 5000 பேருக்கு கொடுக்கப்பட்டு மீதம் 12 கூடைகள் இருந்தன.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கண்ணதாசனின் இயற்பெயர் ____________

  1. சுப்பிரமணியன்
  2. சுப்புரத்தினம்
  3. முத்தையா
  4. இராஜகோபாலன்

விடை : முத்தையா

2. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது ___________

  1. பாஞ்சாலி சபதம்
  2. சேரமான் காதலி
  3. இயேசு காவியம்
  4. மாங்கனி

விடை : பாஞ்சாலி சபதம்

3. ___________ உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்

  1. இரக்கம்
  2. சாந்தம்
  3. அமைதி
  4. அன்பு

விடை : இரக்கம்

4. ஆசையில் விழுந்த மனித வாழ்வு …………….. போன்றது

  1. மலர்சோலை
  2. பாலைவனம்
  3. உலகம்
  4. அமைதி

விடை : பாலைவனம்

5. கண்ணதாசனின் சிறப்பு பெயர் _____________

  1. உவமைக்கவிஞர்
  2.  கவியரசு
  3. பாவலரேறு
  4. பாவேந்தர்

விடை : கவியரசு

சிறு வினா

1. உலகம் எப்போது உயர்வடையும்?

எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.

2. இறைவனின் இரக்கத்தை பெறுவோர் யார்?

இரக்கம் உடையோரே பேறு பெற்றவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்த்தை பெறுவர்.

3. யாருடைய வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும்?

ஆசையில் விழுந்த மனிதன் வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகவிடும்.

4. எப்போது வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறும்?

மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால்,  அவன் வாழக்கை மலர்சோலையாக மாறிவிடும்.

5. இயேசுகாவியம் பற்றி எழுதுக

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்

6. உண்மையில்லா உறவுகளாக வாழ்பவர் யாவர்?

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றன. மேலும் அவர்கள் தன்னாடு என்றும். பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment