TN 7th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.1 – புலி தங்கிய குகை

3.1 புலி தங்கிய குகை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.1 – புலி தங்கிய குகை.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

7th Standard Tamil Guide - Puli thangiya kukai

7th Std Tamil Text Book – Download

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் காவற்பெண்டு
  • சங்காலப் பெண்பாற் புலவர்.
  • கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்
படைப்பு புறநானூற்றின் ஒரு பாடல்

சொல்லும் பொருளும்

  • சிற்றில் – சிறு வீடு
  • யாண்டு – எங்கே
  • கல் அளை – கற்குகை
  • ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
  • குடில் – வீடு

பாடலின் பொருள்

(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்)

‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.

நூல் வெளி

  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார்.
  • இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
  • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள்
  • ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
  • இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள் ___________

  1. எனது
  2. எங்கு
  3. எவ்வளவு
  4. எது

விடை : எங்கு

2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ___________

  1. யாண்டு + உளனோ?
  2. யாண் + உளனோ?
  3. யா + உளனோ?
  4. யாண்டு + உனோ?

விடை : யாண்டு + உளனோ?

3. ‘கல் + அளை’ என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது ___________

  1. கல்லளை
  2. கல்அளை
  3. கலலளை
  4. கல்லுளை

விடை :  கல்லளை

குறு வினா

தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

தம் வயிற்றுக்குத் தாய் “புலி தங்கிய குகை” உவமையாகக் கூறுகிறார்

சிறு வினா

தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

சிறிய என் வீட்டில் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே ?” என என்னைக் கேட்கின்றாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் “புலி தங்கிய குகை” போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’  என்று தன் மகன் குறித்து தாய் கூறினார்.

கற்பவை கற்றபின்

1. சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

  • அஞ்சிஅத்தை மகள் நாகையார்
  • அஞ்சில் அஞ்சியார்
  • அள்ளூர் நன்முல்லையார்
  • ஆதி மந்தியார்
  • ஊன் பித்தை
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • கச்சிப்பேட்டு நன்னாகையார்
  • கழார்கீரன் எயிற்றாயர்
  • காக்கைப் பாடினியார்
  • காமக்கண்ணிப் பாலையார்
  • காவற்பெண்டு
  • ஞமிமிஞாலளாளர்
  • குளம்பாதாயனார்
  • குறமகள் இளவெயினி
  • குளமகள் குறியெயினி
  • குன்றியனார்
  • தாயகண்ணியார்
  • நக்கண்ணியார்
  • நல்வெல்லியார்
  • நன்னாகையார்
  • நெடும்பல்லியத்தை
  • பாரிமகளிர்
  • பூங்கண் உத்திரையார்
  • பெருங்கோப்பெண்டு
  • நக்கண்ணையார்
  • பேய்மகள் இளெவயினி
  • பொன்மணியார்
  • பொன்முடியார்
  • வெண்குயத்தியார்
  • வெள்ளிவீதியார்

2. பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.

7th Standard Tamil Guide - Puli thangiya kukai 7th Standard Tamil Guide - Puli thangiya kukai
வேல் வாள்
7th Standard Tamil Guide - Puli thangiya kukai 7th Standard Tamil Guide - Puli thangiya kukai
ஈட்டி அம்பு

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் ___________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. ஓளவையார்
  4. காவற்பெண்டு

விடை : காவற்பெண்டு

2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

  1. முல்லைப்பாட்டு
  2. புறநானூறு
  3. திருக்குறள்
  4. திருமுருகாற்றுப்படை

விடை : புறநானூறு

3. தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்

  1. புறநானூறு
  2. முல்லைப்பாட்டு
  3. திருக்குறள்
  4. திருமுருகாற்றுப்படை

விடை : புறநானூறு

4. பொருந்தா இணையைக் கண்டறிக

  1. காவற்பெண்டு – பெண்பாற் புலவர்
  2. காவற்பெண்டு – சங்காலப் புலவர்
  3. காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்
  4. காவற்பெண்டு – புறநானூறு்றில் பாடல் பாடினார்

விடை : காவற்பெண்டு – கோப்பெரு நற்கிள்ளியின் தாய்

5. கோப்பெரு நற்கிள்ளி ___________ மன்னன்

  1. சேர
  2. சோழ
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை : சோழ

6. காவற்பெண்டு பாடிய பாடலமைந்த நூல் ___________

  1. புறநானூறு
  2. முல்லைப்பாட்டு
  3. திருக்குறள்
  4. திருமுருகாற்றுப்படை

விடை : புறநானூறு

7. “புலி சேர்ந்து போகிய கல்அளை போல” இதில் ‘குகை’ என்பதன் பொருள்

  1. சேர்ந்து
  2. போகிய
  3. அளை
  4. போல

விடை : அளை

8. பொருந்தா இணையைக் கண்டறிக

  1. இல் – வீடு
  2. அளை – குகை
  3. ஈன்ற – பெற்ற
  4. யாண்டு – இங்கே

விடை : யாண்டு – இங்கே

9. குடில் என்பதன் பொருள் ……………

  1. வீடு
  2. காடு
  3. நாடு
  4. நகரம்

விடை : வீடு

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காவற்பெண்டு _______ என்னும் தலைப்பில் அமைந்தப் பாடலை எழுதியவர்.

விடை : புலிதங்கிய குகை

2. ________ பழங்காலம் தொட்டே கல்வியிலும், வீரத்திலும்   சிறந்து விளங்கினர்.

விடை : தமிழர்கள்

3. கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க புலவர் __________

விடை : காவற்பெண்டு

குறு வினா

1. தமிழர்கள் போர்க்களம் செல்வதை எவ்வாறு கருதின?

தமிழர்கள் நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமையாக கருதினர்.

2. “புலிசேர்ந்து போகிய கல்அளை போல” தொடர் பொருள் யாது?

புலி தங்கிச் சென்ற குகை போல்

தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர்.

3. புலவரிடம் உன் மகன் எங்கு உள்ளான்? என்று கேட்ட பெண்ணிற்கு புலவர் கூறுவதென்ன?

அன்னைே! உன் மகன் எங்கு உள்ளான்? என்று கேட்ட பெண்ணிற்கு புலவர் தன் மகன் போர்களத்தில் இருக்கக் கூடும் என்று கூறுகின்றார்

4. காவற்பெண்டு – சிறு குறிப்பு வரைக

  • காவற்பெண்டு சங்காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் காேப்பெரு நற்கிள்ளியின செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்கவர்.
  • சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் காெண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

5. புறநானூறு குறிப்பு வரைக

  • புறநானூறு எட்டுத்தாெகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின வாழ்க்கடை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment