TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.1 – ஆசாரக்கோவை

2.1 ஆசாரக்கோவை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.1 – ஆசாரக்கோவை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Aacharakovai

6th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
  • நட்டல் – நட்பு கொள்ளுதல்

பாடலின் பொருள்

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.
  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.
  • இனிய சொற்களைப் பேசுதல்.
  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
  • கல்வி அறிவு பெறுதல்.
  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்.
  • அறிவுடையவராய் இருத்தல்.
  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

நூல் வெளி

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்.
  • இந்நூல்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பிறரிடம் நான் _______ பேசுவேன்.

  1. கடுஞ்சொல்
  2. இன்சொல்
  3. வன்சொல்
  4. கொடுஞ்சொல்

விடை : இன்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.

  1. வம்பு
  2. அமைதி
  3. அடக்கம்
  4. பொறை

விடை : பொறை

3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. அறிவுடைமை
  2. அறிவுஉடைமை
  3. அறியுடைமை
  4. அறிஉடைமை

விடை : அறிவுடைமை

4. “இவை + எட்டும்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. இவைஎட்டும்
  2. இவையெட்டும்
  3. இவ்வெட்டும்
  4. இவ்எட்டும்

விடை : இவையெட்டும்

5. “நன்றியறிதல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. நன்றி + யறிதல்
  2. நன்றி + அறிதல்
  3. நன்று + அறிதல்
  4. நன்று + அறிதல்

விடை : நன்றி + அறிதல்

6. “பொறையுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பொறுமை + உடைமை
  2. பொறை + யுடைமை
  3. பொறு + யுடைமை
  4. பொறை + உடைமை

விடை : பொறை + உடைமை

குறு வினா

1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?

எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது துன்பம்.

2. நாம் யாருடன் நட்புக் காெள்ள வேண்டும்?

நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ள வேண்டும்.

சிறு வினா

1. ஆசாரக்காேவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
  • இனிய சொற்களைப் பேசுதல்;
  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
  • கல்வி அறிவு பெறுதல்;
  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
  • அறிவுடையவராய் இருத்தல்;
  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

சிந்தனை வினா

1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.

பரிவு இரக்கம்
நட்பு  ஒழுக்கும்
மூத்தோர்களை மதித்தல் எளிமை
உதவி செய்தல் கீழ்ப்படிதல்
அரவணைப்பு இன்சொல் பேசுதல்
அடக்கம் இன்னா செய்யாமை
விருந்தோம்பல் காலந்தவறாமை
கருணை அன்பு
தெய்வ பயம் அமைதி
சிக்கனம் உண்மை பேசுதல்
நண்றியுணர்வு

2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.

விதையை மண்ணில்  புதைத்தால் அது எப்பாடுபட்டாவது முளைத்து பலன் தரும் பெரிய மரமாகும். அதுபோல நல்ல ஒழுக்கங்களை மனதில் விதைத்தால், அவ்வொழுக்கங்கள் தலை சிறந்த சான்றோனாக மாற்றும். எனவே நல்லொழுக்கங்களின் வித்து எனக் கூறுவர்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஆசாரக்கோவையில் ஆசிரியர் ____________

  1. பாரதிதாசன்
  2. ஒளவையார்
  3. பெருவாயின் முள்ளியார்
  4. கவிமணி

விடை : பெருவாயின் முள்ளியார்

2. ___________ மறக்கக் கூடாது

  1. பிறர் செய்த தீங்கினை
  2. பிறர் செய்த கொடுமையை
  3. பிறர் கூறிய தீயசொற்களை
  4. பிறர் செய்த உதவியை

விடை : பிறர் செய்த உதவியை

3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________

  1. 300
  2. 100
  3. 200
  4. 400

விடை : 100

4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _____________

  1. கயத்தாறு
  2. வயலூர்
  3. மானாமதுரை
  4. கயத்தூர்

விடை : கயத்தூர்

5. ஆசாரக்கோவை _________ நூல்களுள் ஒன்று.

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. பதினெண்மேல்கணக்கு
  3. பத்துப்பாட்டு
  4. எட்டுத்தொகை

விடை : பதினெண்கீழ்கணக்கு

6. “நட்டல்” என்பதன் பொருள் ______________

  1. காத்தல்
  2. நட்புக் கொள்ளுதல்
  3. கடைபிடித்தல்
  4. நன்மை செய்தல்

விடை : நட்புக் கொள்ளுதல்

7. நல்லொழக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை ______________

  1. 7
  2. 9
  3. 6
  4. 8

விடை : 8

குறு வினா

1. எது நல்ல மனிதர்களை உருவாக்கும்?

நல்லொழுக்கம் நல்ல மனிதர்களை உருவாக்கும்.

2. நாம் ஒழுக்க நெறிகளை அறிவதனால் பெறும் பயன் யாது?

நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால் தான் நலவாழ்வு வாழ முடியும்.

3. அறநூல்கள் எவற்றை விளக்குகின்றன?

நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன.

4. எதனை மறத்தல் கூடாது?

பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது

5. எவ்வாறு இருத்த வேண்டும்

கல்வி அறிவுடன், பிறருக்கு உதவும் தன்மையுடன் அறிவுடையவராய் இருத்தல் வேண்டும்.

6. ஆசாரக்கோவை என்பதன் பொருள் யாது?

ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment