TN 6th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 2.5 – முதலெழுத்தும் சார்பெழுத்தும்

2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.5 – முதலெழுத்தும் சார்பெழுத்தும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Muthaleluthum Sarbeluthum

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சிறுவினா

1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தன க்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது

சிந்தனை வினா

1. உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக

உயிர்மெய் எழுத்துகள்

  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்த எழுத்து

  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. __________ களைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்

விடை : முதல் எழுத்து

2. __________ எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.

விடை : உயிர்மெய்

3. __________ தனித்து இயங்காது.

விடை : ஆய்த எழுத்து

சிறுவினா

1. எழுத்துகளின் இரு வகைகளை எழுதுக?

  • முதல் எழுத்து
  • சார்பு எழுத்து

2. உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு எதனை ஒத்திருக்கும்?

உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

3. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?

  • முப்புள்ளி
  • முப்பாற்புள்ளி
  • தனிநிலை

4. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து காரணம் கூறு

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment