TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 6 – எழில் கொஞ்சும் அருவி

எழில் கொஞ்சும் அருவி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 6 – எழில் கொஞ்சும் அருவி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Ezhil Konjum Aruvi

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

நீ வசிக்கும் பகுதியில் அல்லது மாவட்டத்தில் ஏதேனும் சுற்றுலாத்தலம் சென்று வந்துள்ளாயா? உனது அனுபவத்தை வகுப்பில் பகிர்ந்துகொள்.

நான் வசிக்கும் மாவட்டம் தென்காசி மாவட்டம். நான் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வேடந்தாங்கல் சுறு்லாத் தளத்திற்கு பள்ளியின் மூலம் இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளேன்.

வேடந்தாங்கலில் தான் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. முதலில் வேடந்தாங்கல் செல்வதற்கு முன் அவ்வூரின் அருகிலுள்ள வையாவூரல் வீற்றிருக்கு பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அக்கோயிவிலுக்கு சென்றதற்கு நாங்கள் மிகவும் ஆனந்தமடைந்தோம்.

பிறகு பறவைகள் சரணாலயம் சென்றோம். மிகப் பெரிய ஏரி அதில் எங்கு பார்த்தாலும் பல வகையான பறவையினங்கள். பெரும்பாலும் நீர்வாழ் பறவைகளோ வலசை போகின்றன. இது நீர்நிலை என்பதால் நீர் வாழ் பறவைகள் அதிகமாக உள்ளன.

இங்கு ஐரோப்பிய பறவையினங்களான ஊசிவால் வாத்து, உள்ளான், பழுப்ப வலாலாட்டி போன்ற பறவைகளைக் கண்டு களித்தோம்.

மேலும் பச்சைகாலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான் போன்ற பறவைகளை பார்த்தோம்.

நம்நாட்டுப் பறவையினமான உண்ணிக்கொக்கு, சிறிய நிர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை எனப் பல வகையான பறவைகளை தொலைநோக்கி மூலம் பார்த்தோம்.

சிறுது நேரம் மர நிழலில் விளையாடினோம். பின் சில இடங்களுக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பினோம்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.

  1. தங்கத்தை
  2. வெள்ளியை
  3. இரும்பை
  4. கற்பாறையை

விடை : வெள்ளியை

2. ‘ஒகேனக்கல்’ என்ற சொல்லின் பொருள் _________

  1. பவளப்பாறை
  2. வழுக்குப்பாறை
  3. பனிப்பாறை
  4. புகைப்பாறை

விடை : புகைப்பாறை

3. ‘வெண்புகை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. வெண் + புகை
  2. வெ + புகை
  3. வெண்மை + புகை
  4. வெம்மை + புக

விடை : வெண்மை + புகை

4. “பாதை + அமைத்து” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. பாதைஅமைத்து
  2. பாதையமைத்து
  3. பாதம்அமைத்து
  4. பாதயமைத்து

விடை : பாதையமைத்து

5. “தோற்றம்” இச்சொல்லின் எதிர்ச் சொல் _________

  1. தொடக்கம்
  2. மறைவு
  3. முதல்
  4. ஆரம்பம்

விடை : மறைவு

வினாக்களுக்கு விடையளி

1. ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.

தேசநாதீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் அருவி, தொங்கு பாலம்

2. ஒகேனக்கலில் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?

ஒகேனக்கலில் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு அருவிநீர் கல்பாறையில் பட்டுத் தெறித்து, வெண்புகை போலத் தோற்றம் அளிக்கும்.

3. சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன?

சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் தேசநாதீஸ்வரர் கோவில் ஆகும்.

4. ஒகேனக்கல் அருவி எங்கே அமைந்துள்ளது?

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் அருவி எழில் கொஞ்சும் மலையில் உள்ள அந்த அருவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.

சரியான தொடரை எனவும் தவறான தொடரை X எனவும் குறியிடுக. சரியா? தவறா?

3rd Standard - Ezhil Konjum Aruvi - Poruthamana Kuripiduga

1. ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. தவறு
2. அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும். சரி
3. கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது . சரி

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக

1. எழில்

  • அழகு

2. களிப்பு

  • மகிழ்ச்சி

3. நீராடலாம்

  • குளிக்கலாம்

4. பரவசம்

  • மகிழ்ச்சி

பொருத்தமான சொல்லால் நிரப்புக.

1. கடற்கரையில் ___________ (மனல்/மணல்) வீடு கட்டி விளையாடலாம்.

விடை : மணல்

2. மரத்தில் பழங்கள்___________ (குரைவாக/குறைவாக) உள்ளன.

விடை : குறைவாக  

3. வலப்பக்க சுவரின் மேல் ___________ (பல்லி/பள்ளி) இருக்கிறது.

விடை : பல்லி

4. ஆதிரைக்கு நல்ல___________ (வேலை/வேளை) கிடைத்துள்ளது.

விடை : வேலை

படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?

தேன் நீர்
விடை : தேநீர்
பனி பாறை
விடை : விடை : பனிப்பாறை
பூ மாலை
விடை : பூமாலை
இடி ஆப்பம்
விடை : இடியாப்பம்

உன்னை அறிந்துகொள்.

தமிழ்நாட்டில் கோடை வாழிடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் ஊட்டி (உதகமண்டலம்) ‘மலைகளின் அரசி’ என அழைக்கப்படுகிறது. இது, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சிந்திக்கலாமா?

படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது.? உன் கருத்துகளை வெளிப்படுத்துக.

தூய்மையான காற்று காடுகளில் தான் கிடைக்கிறது.

நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்து வரும் புகை காற்றை மாசுபடுத்துகிறது.

9. பாடலிலிருந்து உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதுக

பருப்பு அடை பாரம்மா
பதமாய் எடுத்து உண்ணம்மா
இனிப்புப் பணியாரம் வேணுமா
இங்கு வந்து பாரம்மா
வெள்ளை நிற உப்புமா
வேண்டும் மட்டும் தின்னும்மா
கரக் முரக் முறுக்கையே
கடித்துத் தின்னு நொறுக்கியே
சுவை மிகுந்த கொழுக்கட்டை
சூடாய் இருக்கு தட்டிலே !
வெல்லம் தேங்காய் சேர்த்துமே
வெண்ணெய் பிட்டும் ஈர்க்குமே !

 

  • பருப்பு அடை
  • உப்புமா
  • கொழுக்கட்டை
  • இனிப்பு பணியாரம்
  • முறுக்கு
  • வெண்ணெய் பிட்டு

இன எழுத்துகள்

உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்

மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்

ங்கை ங்கா
ஞ்சுளா ஞ்சலி
ஞ்சனா பாண்டியன்
காந்தி சாந்தி
ந்தன் ந்தா
ந்தனா ம்பிகா
இளமாறன் மணிமாறன்
இராமலிங்கம் ஜெயந்தி
காஞ்சனா ம்பு
ண்டபாணி ந்தினி

விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?

செம்பருத்தி குன்று
தொட்டிபாலம் ஞ்சி
சுண்டல் ந்தை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment