TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 4.2 – இதில் வெற்றி பெற

4.2 இதில் வெற்றி பெற

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 4.2 – இதில் வெற்றி பெற. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - ithil Vertri peyra

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இப்பாடப்பகுதி, கவிஞர் சுரதாவின் ‘துறைமுகம்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் ‘சுரதா’வின் இயற்பெயர் இராசகோபாலன்.;
  • அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்;
  • முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்;
  • “தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்” உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
  • இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. சுரதா நடத்திய கவிதை இதழ்

  1. இலக்கியம்
  2. காவியம்
  3. ஊர்வலம்
  4. விண்மீன்

விடை : காவியம்

2. விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
   வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு இத்தொடர் தரும் முழுமையான பொருள்:

  1. விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
  2. விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
  3. வெண்மதியும் முகிலும் வேறு வேறு
  4. விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

விடை : விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

குறு வினா

1. வசனம், கவிதை வேறுபாடு தருக.

வசனம்

எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

கவிதை

எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிகென்று எல்லை வைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.

நெடு வினா

கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.

கவிதை

  • சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்ய எதுகை, மோனை அமைத்து எழுத வேண்டும்.
  • அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
  • சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள்

  • எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
  • அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல்.
  • சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.
  • அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.
  • அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

சிறந்த கவிதை

  • கவிதைக்குரிய உறுப்புகளை வைத்து கவிதை எழுதும்போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.
  • தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.
  • செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகள் எப்போதும் புகழ் தங்கும்.
  • இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

  • செங்கதிரும் முகிலும், பனித்துளியும் மழையும் – எண்ணுமைகள்
  • வேறுவேறு – அடுக்குத்தொடர்
  • எதுகைமோனை – உம்மைத்தொகை

புணர்ச்சி விதிகள்

1. எழுத்தெண்ணி = எழுத்து + எண்ணி

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “எழுத்த் + எண்ணி” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “எழுத்தெண்ணி” என்றாயிற்று.

2 பூவென்று= பூ + என்று

  • உயிர்வரின்….. ஏனைய உயர்வழி வவ்வும்” என்ற விதிப்படி “பூவ் + என்று” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “பூவென்று” என்றாயிற்று.

3. அடியளவு = அடி + அளவு

  • உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “அடிய் + அளவு” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “அடியளவு” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது

  1. கவிதை
  2. கொச்சைச் சொற்கள்
  3. பாட்டு
  4. உரைநடை

விடை : உரைநடை

2. முன்னோர் போல் கற்று வந்தால் உள்ளத்தால் விளைவது

  1. அறம், பொருள்
  2. அறம், மறம்
  3. அறம், அருள்
  4. பொருள், இன்பம்

விடை : அறம், பொருள்

3. கூற்று 1 – பழுத்திருந்தால் சாறு வரும்; வயலில் தண்ணீர் பாய்ந்தால் ஏர் வரும்.

கூற்று 2 – அடியின் கீழ் அடியிருந்தால் தொடை வரும்

  1. கூற்று இரண்டும் தவறு
  2. கூற்று இரண்டும் சரி
  3. கூற்று 1 மட்டும் சரி
  4. கூற்று 2 மட்டும் சரி

விடை : கூற்று இரண்டும் சரி

4. இதில் வெற்றி பெற என்னும் சுரதாவின் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

  1. தேன்மழை
  2. அமுதும் தேனும்
  3. மங்கையர்கரசி
  4. துறைமுகம்

விடை : துறைமுகம்

5. சுரதா என்பதன் விளக்கம்

  1. சுப்புரத்தினதாசன்
  2. சுதாரகுநாததாசன்
  3. சுப்பிரமணியரத்தினதாசன்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : சுப்புரத்தினதாசன்

6. சுரதா பெற்றுள்ள விருதுகள்

1. தமிழக அரசின் கலைமாமணி விருது

2. பாரதிதாசன் விருது

3. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

  1. 1, 2 சரி
  2. 2, 3 சரி
  3. 1, 3 சரி
  4. மூன்றும் சரி

விடை : மூன்றும் சரி

7. சுரதாவின் இயற்பெயர் 

  1. கேபால்
  2. இராசகோபாலன்
  3. துரைகோபாலன்
  4. இராசகோபால்

விடை : இராசகோபாலன்

8. தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும் – என்று எழுதியவர்

  1. இராமலிங்க அடிகள்
  2. மு.மேத்தா
  3. பாரதி
  4. சுரதா

விடை : சுரதா

9. விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகலுதட வேறு – என்னும் அடிகளில் இடம் பெற்றள்ள நயம்

  1. எதுகை
  2. மோனை
  3. இயைபு
  4. முரண்

விடை : எதுகை

10. சுரதாவின் ‘காவியம்’ என்னும் இதழ்

  1. முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது
  2. முழுக்க முழுக்க சிறுகதைகளைக் கொண்டது
  3. குறும்புதினங்களின் தொகுப்பினைக் கொண்டது.
  4. இவற்றில் ஏதுமில்லை.

விடை : முழுக்க முழுக்கக் கவிதைகளைக் கொண்டது

11. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்

  1. சுரதா
  2. இராமலிங்க அடிகள்
  3. மு.மேத்தா
  4. பாரதி

விடை : சுரதா

12. தேன்மழை, துறை, மங்கையர்கரசி, அமுதும் தேனும் உள்ளி்ட்ட நூல்களை படைத்தவர்

  1. சுப்பிரமணிய பாரதி
  2. சுரதா
  3. பாதிதாசன்
  4. மு.மேத்தா

விடை : சுரதா

13. சுரதா நடத்திய இதழ் 

  1. எழுத்து
  2. தென்றல்
  3. குயில்
  4. காவியம்

விடை : காவியம்

குறு வினா

1. “இதில் வெற்றி பெற” என்ற சுரதாவின் கவிதையில் இடம் பெற்றுள்ள உவமை எடுத்து எழுதுக

செடியில் பூத்த பூமீது வண்டு வந்து தங்கும்

2. சுரதா நடத்திய இதழ்கள் யாவை?

இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்

3. உரைநடை, கவிதை – வேறுபடுத்துக

  • உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது
  • கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அடைவது

4. அறம்பொருள் உள்ளத்தில் விளைய என்ன செய்ய வேண்டும் என்கிறார் சுரதா?

நுட்பமான எழுத்தை எண்ணி முன்னோர்கள் போன்று கற்று வரும் பட்சத்தில் அறம் பொருள்கள் உள்ளத்தில் விளையும் என்று சுரதா கூறுகிறார்.

5. விண்வெளியில் இயங்குவனாகவச் சுரதா கூறுவன யாவை?

வெண்மதி (வெண்ணிலவு), செங்கதிரோன் (சூரியன்), முகில் (மேகம்)

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment