TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 1.1 – இளந்தமிழே

1.1 இளந்தமிழே

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 1.1 – இளந்தமிழே. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - ilantamilae

12th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்;
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;
  • மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்;
  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்;
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்;
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

இலக்கணக் குறிப்பு

  • செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
  • சிவந்து – வினையெச்சம்
  • வியர்வைவெள்ளம் – உருவகம்
  • முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

1. சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆ ன்

  • சாய் – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. விம்முகின்ற = விம்மு + கின்று + அ

  • விம்மு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை,
  • அ – பெயரெச்ச விகுதி.

3. வியந்து = விய + த் (ந்) + த் + உ

  • விய – பகுதி, த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

4. இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்

  • இரு – பகுதி,
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1. செம்பரிதி = செம்மை + பரிதி

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம்பரிதி” என்றாயிற்று

2.வானமெல்லாம் = வானம் + எல்லாம்

  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வானமெல்லாம்” என்றாயிற்று

3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “உன்னை + ய் + அல்லால்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உன்னையல்லால்” என்றாயிற்று

4. செந்தமிழே = செம்மை + தமிழே

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + தமிழே” என்றாயிற்று
  • முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்தமிழே” என்றாயிற்று.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
௨) பொதிகையில் தோன்றியது
௩) வள்ளல்களைத் தந்தது

  1. க மட்டும் சரி
  2. ௧, ௨ இரண்டும் சரி
  3. ௩ மட்டும் சரி
  4. ௧, ௩ இரண்டும் சரி

விடை : ௧, ௩ இரண்டும் சரி

குறு வினா

கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் வீற்றிருக்கும் வியர்வை முத்துகளைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

சிறு வினா

1. ’செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

  • கதிரவன் தன் கதிர்களை சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலை முகட்டில் தன் தலை சாய்க்கிறான்.
  • கதிரவனின் கதிரொளிபட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

2. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.

– நன்னூல்

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

– சிற்பி பாலசுப்பிரமணியம்

நன்னூல் சிற்பி பாலசுப்பிரமணியம்
பழையவற்றை ஒதுக்கி புதியவற்றைப் புகுத்த வேண்டும் பழமை செல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும்
தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் கால மாறுதலுக்கு ஏற்ப புதிய சொல், பொருள் வழக்கம் தேவை தமிழ்த்தாயின் பழமைமிகு செயல்பாடுகளுக்கு புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா.

நெடு வினா

தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய்க் காணப்டுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே என் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாகும் இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • என் பழமையான நலன்களை எல்லாம் புதுபித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

கற்பவை கற்றபின்

தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம்பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.

மதன் எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறை பற்றிய ஒரு விளக்கம் தேவை.
சுதன் சொல்லுங்க! மொழி வாழ்த்த வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும்?
மதன் இப்பொதெல்லாம் இறைவாழ்த்து இரந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.
சுதன் அது இடமாற்றம் இல்லை. ஒதுக்கப்படுவதும் இல்லை.
மதன் நேற்று போல் இன்று இல்லை என்கீறிர்களா?
சுதன் அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் விருப்ப தெய்வங்களை வணங்கி விட்டுத் தொடங்குவதுதான வழக்கம்.
மதன் தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.
சுதன் வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வகமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
மதன் மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம்?
சுதன் மொழி தெயவத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் – என்பார்.
மதன் அப்போ, மொழிப் பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா?
சுதன் நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வத சாலச்சிறந்தது.
மதன் நன்றி சுதன்
சுதன் நன்றி மதன், மீண்டும் சந்திப்போம்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • வியந்து, ஈன்று, கூவி, உடைத்து – வினையெச்சங்கள்
  • தமிழ்க்குயில் – உருவகம்

புணர்ச்சி விதி

வீற்றிருக்கும் = வீற்று + இருக்கும்

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “ வீற்ற் + இருக்கும்” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வீற்றிருக்கும்” என்றாயிற்று

செந்நிறம் = செம்மை + நிறம்

  • ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + நிறம்” என்றாயிற்று
  • முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்நிறம்” என்றாயிற்று

பலவுள் தெரிக

1. குற்றால மலையை __________ எனவும் குறிப்பர்

  1. திராவிட மலை
  2. பொதிகை மலை
  3. பனி மலை
  4. சுவாமி மலை

விடை : பொதிகை மலை

2. சிற்பி பாலசுப்பிமணியம் __________ நூலை மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்

  1. அக்கினி
  2. ஒளிப்பறவை
  3. அக்கினி சாட்சி
  4. சூரிய நிழல்

விடை : அக்கினி சாட்சி

3. சாய்ப்பான் –  பகுபத உறுப்பிலக்கணம்

  1. சாய்ப்பு + ஆன்
  2. சாய் + ப் +ஆன்
  3. சாய் + ப் + ப் + அன்
  4. சாய் + ப் + ப் + ஆன்

விடை : சாய் + ப் + ப் + ஆன்

4. சிற்பி பாலசுப்பிமணியத்தின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

  1. ஒரு கிராமத்தின் கதை
  2. ஒரு கிராமத்தின் நதி
  3. ஒரு கிராமமே அழுதது
  4. ஒரு புளியமரத்தின் கதை

விடை : ஒரு கிராமத்தின் நதி

5. செந்தமிழ் – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

  1. ஈறுபோதல், இனமிகல்
  2. ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
  3. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
  4. ஈறுபோதல்

விடை : ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

5. செந்தமிழ் – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

  1. ஈறுபோதல், இனமிகல்
  2. ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
  3. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
  4. ஈறுபோதல்

விடை : ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

6. வியர்வை வெள்ளம் – இலக்கணக் குறிப்பு

  1. உவமையாகுபெயர்
  2. கருவியாகுபெயர்
  3. உருவம்
  4. உவமைத்தொகை

விடை : உருவம்

7. சிற்பி பாலசுப்பிரமணியம் படைப்புகளில் ஒன்று

  1. சூரியகாந்தி
  2. சூரியபார்வை
  3. ஒளிப்பூ
  4. குரியநிழல்

விடை : குரியநிழல்

8. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகங்களில் பொருந்தாதது

  1. கவிஞர்
  2. மொழிபெயர்ப்பாளர்
  3. பேராசிரியர்
  4. ஓவியர்

விடை : மொழிபெயர்ப்பாளர்

9. சிவந்து – இலக்கணக்குறிப்பு 

  1. பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. வினைத்தொகை
  4. உருவகம்

விடை : வினையெச்சம்

10. செம்பரிதி – புணர்ச்சி விதி

  1. ஈறுபோதல், இனமிகல்
  2. ஈறுபோதல்
  3. ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
  4. ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

விடை : ஈறுபோதல்

குறு வினா

1. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்களை யாவை?

ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி

2. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்

3. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் யாவை?

ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி

4. முத்தமிழ் ஈன்று தந்த வள்ளல்கள் யாவர்?

அதியன், பாரி, காரி, பேகன், ஆய், ஓரி, நள்ளி

5. சிற்பி பாலசுப்பிரமணியம் – குறிப்பு வரைக

  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர்.
  • மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
  • இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளர், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய கவிதை நூல்களை படைத்துள்ளளார்.
  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும், புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment