TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 6.1 – காலத்தை வென்ற கலை

6.1 காலத்தை வென்ற கலை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 6.1 – காலத்தை வென்ற கலை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Kalathai Vendra kalai

11th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

கூற்று 1 : தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்

கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையை சார்ந்தவை

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று இரண்டும் தவறு
  3. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  4. கூற்று இரண்டும் சரி

விடை : கூற்று இரண்டும் சரி

குறு வினா

1. இந்தியக் கட்டக் கலையின் மூன்று வகைகள் யாவை

நாகரம், வேசரம், திராவிடம்

2. ஓலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?

  • ஓலோகமாதவீச்சுரம் கோவில் கல்வெட்டில் “எருதந் குஞ்சர மல்லி” என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் “சோமயன் அமிர்தவல்லி” என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.
  • இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சிறு வினா

1. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றக்கோவில்கள் குறித்து நீவீர் அறிவன யாவை?

ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்:-

ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலியச் சொல்லிற்கும் “புதுமை” என்று பொருள், சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது, அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.

ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல் முதலான இடங்களில் காணலாம்

கற்றக் கோவில்கள்:-

செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கல்லை அடுக்கி கோவில் கட்டுவது “கற்றளி” எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை கற்றளிக் கோவில்களுக்குச் சான்றாகும்.

நெடு வினா

“கல்லும் கதை சொல்லும்” – என்னும் தொடர்,  தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக

காலத்தை வென்று நின்ற கலை:-

ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில் இராசராச சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு:-

சுற்றுச்சுவரின் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லம் அந்தக் கல் இசை, நடனம், நாகடம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்திகளை தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளை தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலகமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளை கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது:-

காேவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்க செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள், எண்ணற்ற வராற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

ஓவியங்கள் கூறும் கதை:-

கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில் தட்சணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெயரி அளவில் வரைந்து வைத்துள்ளதை இன்றளவும் காண முடிகிறது. கோவில் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்தைக் கதைகதையாக இன்றும் இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை:-

ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சைப் பெரிய கோவிலை ஒரு முறை காணும் போது, “கல்வி கதை சொல்லும்” என்பது தெளிவாகப் புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை __________

  1. கல்வியும் கலையும்
  2. கல்வியும் தொழிலும்
  3. தொழிலும் அறிவியலும்
  4. கலையும் அறிவியலும்

விடை : கல்வியும் கலையும்

2. ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது __________

  1. கலை
  2. கல்வி
  3. தொழில்
  4. அறிவியல்

விடை : கலை

3. பிரடிரிகா வொன்ஸ்லீவிங் __________யை “உறைந்த போன இசை” என்று கூறியுள்ளார்.

  1. சிற்பக்கலை
  2. ஓவியக்கலை
  3. கட்டக்கலை
  4. இசைக்கலை

விடை : பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

4. தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது ___________

  1. கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
  2. இராசராசன் திருவாயில் கோபுரம்
  3. இராசராசன் கோபுரம்
  4. மதுராந்தகன் கோபுரம்

விடை : கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

5. “தட்சிண மேரு” என அழைக்கப்படுவது ___________

  1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  2. திருவில்லிபுத்தூர் கோவில்
  3. ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
  4. தஞ்சைப் பெரிய கோவில்

விடை : தஞ்சைப் பெரிய கோவில்

6. செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களை கட்டியவன் ___________

  1. சோழன் செங்கணான்
  2. முதலாம் மகேந்திரவர்மன்
  3. இராசசிம்மன்
  4. இரண்டாம் குலோத்துங்க சோழன்

விடை : சோழன் செங்கணான்

7. “இராசசிம்மேச்சுரம்” என அழைக்கப்படும் கோவில் ___________

  1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  2. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  3. ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
  4. தஞ்சைப் பெரிய கோவில்

விடை : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

8. ___________ பெரியதொரு கோவிலைக் கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டிய கோவில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

  1. இராஜேந்திரனுக்குப்
  2. இராசராசனுக்குப்
  3. இராசவர்மனுக்கு
  4. இராச ராஜேந்திரனுக்கு

விடை : இராசராசனுக்குப்

9. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம் ___________

  1. காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
  2. அஜந்தா, தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
  3. அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல்
  4. காஞ்சிபுரம், எல்லோரா, சித்தனவாசல்

விடை : அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல்

10. திராவிட கலைப்பாணியில் அமைந்துள்ள கோவில் ___________

  1. மதுரை மீனாட்சியம்மன் கோவில்
  2. நெல்லையப்பர் கோவில்
  3. காஞ்சி கைலாசநாதர் கோவில்
  4. தஞ்சைப் பெரிய கோவில்

விடை : தஞ்சைப் பெரிய கோவில்

11. எஸ்.கே.கோவிந்தசாமி ___________ உள்ள ஓவியங்களை கண்டறிந்தவர்

  1. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்
  2. நெல்லையப்பர் கோவிலில்
  3. காஞ்சி கைலாசநாதர் கோவிலில்
  4. தஞ்சைப் பெரிய கோவிலில்

விடை : தஞ்சைப் பெரிய கோவிலில்

12. ‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியர் ___________

  1. முதலாம் நரசிம்மவர்மன்
  2. இராசராச சோழன்
  3. இரண்டாம் நரசிம்மவர்மன்
  4. மகேந்திரவர்மன்

விடை : இரண்டாம் நரசிம்மவர்மன்

13. காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைந்த மன்னன் ___________

  1. முதலாம் நரசிம்மவர்மன்
  2. இராசராச சோழன்
  3. மகேந்திரவர்மன்
  4. இராசசிம்மன்

விடை : இராசசிம்மன்

14. குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ___________

  1. சோழன் செங்கணான்
  2. முதலாம் மகேந்திரவர்மன்
  3. இராசசிம்மன்
  4. இரண்டாம் குலோத்துங்க சோழன்

விடை : முதலாம் மகேந்திரவர்மன்

15. தஞ்சை பெரிய கோவிலை இராசராசன் தான் கட்டினான் என உறுதி செய்வதர் ___________

  1. இத்தாலி ஃப்ரெஸ்கோ
  2. ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
  3. எஸ்.கே. கோவிந்தசாமி
  4. கோவலூர் உடையான்

விடை : ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

16. தமிழக அரசின் சின்னம் ___________

  1. ஆலமரம்
  2. கோவில் நந்தி
  3. கோவில் கோபுரம்
  4. திருவாயில்

விடை : கோவில் கோபுரம்

17. இராசராசன் _____________ கட்டும் மரபைத் தோற்றுவித்தவன் 

  1. நான்கு கோபுரங்கள்
  2. மூன்று கோபுரங்கள்
  3. ஐந்து கோபுரங்கள்
  4. இரண்டு கோபுரங்கள்

விடை : இரண்டு கோபுரங்கள்

18. நான்கு கோபுரங்கள் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் _____________

  1. முதலாம் குலோங்க சோழன்
  2. முதலாம் இராசராசன்
  3. இரண்டாம் இராசேந்திரன்
  4. இரண்டாம் குலோங்க சோழன்

விடை : இரண்டாம் குலோங்க சோழன்

19. புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது _____________

  1. சோழ அரசு
  2. சேர அரசு
  3. விஜயநகர அரசு
  4. பாண்டிய அரசு

விடை : விஜயநகர அரசு

20. “ஒலோகமாதேவீச்சுரம்” கோவிலை திருவையாற்றில் கட்டியவர் _____________

  1. எருதந் குஞ்சர மல்லி
  2. சோமயன் அமிர்தவல்லி
  3. ஓலோகமாதேவை
  4. குந்தவைதேவி

விடை : ஓலோகமாதேவை

21. “விசித்திரசித்தன்” என்று அழைக்கப்பட்டவன் _____________

  1. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
  2. இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவன்
  3. இரண்டாம் இராசேந்திரன்
  4. முதலாம் குலோங்க சோழன்

விடை : முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

பொருத்துக

1. தட்சிணமேரு அ. வாயில்களின் மேல் அமைவது
2. விமானம் ஆ. கருங்கற்களை அடுக்கி கட்டுவது
3. கோபுரம் இ. தஞ்சை பெரிய கோவில்
4. கற்றளி ஈ. அகநாழிகை மேல் அமைக்கப்படுவது
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பொருத்துக

அ. தஞ்சாவூர் அ. கடற்கரைக் கோவில்
ஆ. மகாபலிபுரம் ஆ. ஓலோகமாதேவீச்சுரம்
இ. காஞ்சிபுரம் இ. தட்சிணமேரு
ஈ. திருவையாறு ஈ. கைலாசநாதர் கோவில்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. கேரளாந்தகன் வாயில் கோபுரம் என பெயரிடக் காரணம் யாது?

பெரியகோவிலின் கோபுரங்களில் உயரமானது, கேரளாந்தகன் கோபுரம். இராசராசன் 988ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் “கேரளாந்தகன் வாயில் கோபுரம்’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2. கற்றளி என்றால் என்ன?

கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் கற்றளி என்று பெயர்.

3. கருவறையை எவ்வாறு அழைப்பார்கள்?

கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.

4. கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?

  • கோபுரம் ;  நுழைவு வாயிலின் மேல் அமைக்கப்படுவது
  • விமானம் ; “கருவறை” என்னும் அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது

5. பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது?

தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்கால சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்

6. கள்ளிக் கோவில்கள் சிலவற்றை கூறு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில்

7. கள்ளிக் கோவிலை முதலில் உருவாக்கியன் யார்?

கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் “கற்றளி”க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னன் உருவாக்கினான்.

8. பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேல மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்த செங்கற்களை அடுக்கி கோவில்களை கட்டினர்.

9. குடவரைக் கோவில் என்பது யாது?

செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் குடைவரைக் கோவிலாகும்

சிறு வினா

1. தஞ்சை பெரியகோவில் விமான அமைப்பின் சிறப்பினை விளக்குக

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உயரமானதும் பெயரிதம் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டப்பட்ட கோவிலாகும்.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம் 216 அடி உயரத்தையும்,  13 தளங்களையும் கொண்டுள்ளது,
  • இதனை இராசராசன் “தட்சிணமேரு” எனப் பெருமையுடன் அழைத்தான்.

2. கலை என்பது குறித்து நீ அறிவன யாவை

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை நம் மனத்தல் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை என பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில் தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment