TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 5.3 – அகநானூறு

5.3 அகநானூறு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 5.3 – அகநானூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Agananuru

11th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • அகநானூறு 145 புலவர்கள் பாடல்களின் தொகுப்பாகும்.
  • (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
  • களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.
  • இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்
  • நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.
  • இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
  • வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பதியாக இடம் பெற்றுள்ளது.
திணை பாடல் வரிசை எண்ணிக்கை
பாலை 1, 3, 5, 7… 200
குறிஞ்சி 2, 8, 12, 18… 80
முல்லை 4, 14, 24, 34… 40
மருதம் 6, 16, 26, 36… 40
நெய்தல் 0, 20, 30, 40… 40

சொல்லும் பொருளும்

  • கொண்மூ – மேகம்
  • சமம் – போர்
  • விசும்பு – வானம்
  • அரவம் – ஆரவாரம்
  • ஆயம்  – சுற்றம்
  • தழலை, தட்டை – பறவைகள் ஓட்டும் கருவிகள்

இலக்கணக்குறிப்பு

  • அருஞ்சருமம் – பண்புத்தொகை
  • வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
  • எறிவாள் – வினைத்தொகை
  • அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலி
  • பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பாடநூல் வினாக்கள்

குறு வினா

1. நெருங்கின, இரங்கி – உறுப்பிலக்கணம் தருக

நெருங்கின = நெருங்கு + இன் + அ

  • நெருங்கு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

இரங்கி = இரங்கு + இ

  • இரங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

சிறு வினா

1. மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சி பொருள் யாது

  • மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள்.
  • வேங்கைமலர் அணிந்து தலைவி, தோழியருடன் தழலை, தட்டை  என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பிப் பறவைகளை ஒட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
  • அங்கே மழை பொழிவாயக என்று மேகத்திடம் கூறுவதுபோல், தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.
  • இதில் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருளாளவது, தலைவி தினப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் சென்று சந்திக்கலாம் என்பதாகும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • பெருங்கடல் – பண்புத்தொகை
  • முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
  • அறிமன்னர், உயர்விசும்பு – வினைத்தொகைகள்
  • வாழிய – வியங்கேளா வினை முற்று

பகுபத உறுப்பிலக்கணம்

1. இரங்கி =  இரங்கு + இ 

  • இரங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. மலர்ந்த = மலர் + த்(ந்) + த் + அ

  • மலர் – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

3. பொலிந்த = பொலி + த்(ந்) + த் + அ

  • பொலி – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ –  பெயரெச்ச விகுதி

4. புரிந்து = புரி + த்(ந்) + த் + உ

  • புரி – பகுதி
  • த் – சந்தி
  • ந்- ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

5. கழித்து = கழி + த்) + த் + உ

  • கழி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ –  வினையெச்ச விகுதி

6. வாழிய = வாழ் + இய

  • வாழ்- பகுதி
  • இய – வியங்கோள் வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதிகள்

1. ஆயமொடு = ஆயம் + ஒடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ஆயமொடு என்றாயிற்று

2. மின்னுடைக்கருவி = மின்னுடை + கருவி

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி மின்னுடைக்கருவி என்றாயிற்று.

3. பெருங்கடல் = பெருமை + கடல்

  • “ஈறுபோதல்” என்ற விதிப்படி பெரு + கடல் என்றாயிற்று.
  • “இனமிகல்” என்ற விதிப்படி பெருங்கடல் என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது ___________ பாடல்களின் சிற்ப்பு

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : அகநானூறு

2. அகநானூற்றினை பாடிய புலவர்களின் எண்ணிக்கை ___________

  1. 125
  2. 135
  3. 145
  4. 155

விடை : 145

3. அகநானூறு ___________ பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை : 3

4. அகநானூற்றின் வேறு பெயர்கள் ___________

  1. புறநானூறு
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. நெடுந்தொகை

விடை : நெடுந்தொகை

5. தினைப்புனம் காப்பவள் ___________ எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்

  1. குறமகள்
  2. தலைவி
  3. தோழி
  4. செவிலித்தாய்

விடை : குறமகள்

6. சிறைப்புறம் நின்ற தலைவனுக்கு தோழி கூறியதில் ___________ வெளிப்படுகிறது 

  1. உள்ளுறைப் பொருள்
  2. கருப்பொருள்
  3. இறைச்சிப்பொருள்
  4. உரிப்பொருள்

விடை : இறைச்சிப்பொருள்

7. சிறைப்புறம் நின்ற தலைவனுக்கு குறியிடம் (தலைவி உள்ள இடம்) சொன்னது ___________

  1. தோழி
  2. நற்றாய்
  3. செவிலி
  4. எவரும் இல்லை

விடை : தோழி

8. அகநானூற்றின் அடிவரை ___________

  1. 3 அடிமுதல் 6 அடிவரை
  2. 4 அடிமுதல் 8 அடிவரை
  3. 9 அடிமுதல் 12 அடிவரை
  4. 13 அடிமுதல் 31 அடிவரை

விடை : 13 அடிமுதல் 31 அடிவரை

9. களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 120

10. மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 180

11. நித்திலக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________

  1. 180
  2. 120
  3. 100
  4. 80

விடை : 100

13. அகநானூற்றைத் தொகுத்தவர் ___________

  1. பூரிக்கோ
  2. கூடலூர் கிழார்
  3. பாண்டியன் உக்கிரப் பெருவதியார்
  4. மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

விடை : மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

14. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் ___________

  1. பூரிக்கோ
  2. கூடலூர் கிழார்
  3. பாண்டியன் உக்கிரப் பெருவதி
  4. மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உத்திரசன்மர்

விடை : பாண்டியன் உக்கிரப் பெருவதி

15. அகநானூற்றூக் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் ___________

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  2. கபிலர்
  3. கும்பர்
  4. வரந்தருவார்

விடை : பாரதம் பாடிய பெருந்தேவனார்

16. “தினைப்புனம்” என பொருள் தரும் சொல் ___________

  1. அசோகு
  2. வானம்
  3. ஏனல்
  4. கடல்

விடை : தினைப்புனம்

பொருத்துக

1. குறிஞ்சி அ. ஊடலும் ஊடல் நிமித்தமும்
2. மருதம் ஆ. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
3. நெய்தல் இ. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
4. முல்லை ஈ. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. பாலை அ. வைகறை
2. நெய்தல் ஆ. மாலை
3. மருதம் இ. நண்பகல்
4. முல்லை ஈ. ஏற்பாடு
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. அகநானூற்றின் பிரிவுகளை எழுதுக

அகநானூற்றின் பிரிவுகள் மூன்று.

அவை : களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

2. அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பினை கூறுக

அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பதாகும்

3. உள்ளுறைக் கவிஞர் எவ்வாறு கூறுவர்?

  • உள்ளுறை பொதிந்த பாடலைப் பாடும் கவிஞர்  சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவர்.
  • அவ்வாறு கூறும்போது மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும்.
  • அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.

4. தோழியின் பொறுப்பு யாது?

தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்துக் குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பாகும்.

5. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அகத்திணைகள் ஐந்து வகைப்படும். அவை

  • குறிஞ்சி, முல்லை, மருததம், நெய்தல், பாலை

6. சிறுபொழுதுகள் எத்தனை? அவை யாவை?

சிறுபொழுதுகள் ஆறு. அவை

  • காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை

7. பெரும்பொழுதுகள் எத்தனை? அவை யாவை?

பெரும்பொழுதுகள் ஆறு. அவை

  • கார், கூதில், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

8. கரும்பொருள்கள் யாவை?

தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், பூ, மரம், நீர், உணவு, பறை, யாழ், பண், தொழில்

சிறுவினா

1. அகநானூறு சிறுகுறிப்பு வரைக

  • (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.
  • 145 புலவர்கள் அகநானூற்றினை பாடியுள்ளனர்.
  • இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்.
  • களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.

2. குறிஞ்சித்திணை – விளக்குக

  • “புணர்தலும் புணர்தல் நிமித்தமும்” என்னும் உரிப்பொருளைக் கொண்ட அகப்பாடல் குறிஞ்சித்திணைக்குரியது.
  • சிறுபொழுது – யாமம், பெரும்பொழுதுகள் – குளிர்காலம், முன்பனிக்காலம்,  தெய்வம், உணவு, ஊர், தொழில் முதலான கருப்பொருளை கொண்டமைவது குறிஞ்சித் திணையாகும்.

3. முல்லை திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் திருமால் (மாயோன்)
மக்கள் குறும்பொறை, நாடான், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
பறவை காட்டுக்கோழி
விலங்கு முயல், மான்
ஊர் பாடி
பூ முல்லை, பிடவம், தோன்றி
மரம் கொன்றை, காயா, குருத்தம்
நீர் குறுஞ்சுனை, கானாறு
உணவு வரகு, சாமை, முதிரை
பறை ஏறுகோட்பறை
யாழ் முல்லையாழ்
பண் சாதரிப்பண்
தொழில் சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், நெல் அரிதல், ஏறுதழுவுதல், ஆநிரை மேய்த்தல்

4. மருதம் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் வேந்தன்
மக்கள் ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள் (பறவை) நாரை,மகன்றில், அன்னம்
விலங்கு எருமை, நீர்நாய்
ஊர் பேரூர், மூதூர்
நீர் ஆற்றுநீர், கிணற்று நீர், குளத்து நீர்
பூ குவளை, தாமரை
மரம் மருதம், வஞ்சி, காஞ்சி
உணவு செந்நெல், வெண்ணெல்
பறை மணமுழவு, நெல்லரிகிணை
யாழ் மருத யாழ்
பண் மருதப்பண்
தொழில் நெல்லரிதல், வயலில் களை கட்டல்

5. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள் பற்றி கூறுக

தெய்வம் வருணன்
மக்கள் சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதன், பரத்தியர்
புள் (பறவை) கடற்காகம்
விலங்கு சுறாமீன்
ஊர் பாக்கம், பட்டிணம்
நீர் சுவர்நீர்க் கேணி, உவர் நீர்க்கேணி
பூ நெய்தல், தாழை
மரம் புன்னை, ஞாழல்
உணவு உப்பும் மீனும் விற்றப் பொருள்
பறை மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
யாழ் விளரி யாழ்
பண் செல்வழிப்பண்
தொழில் உப்பு உண்டாக்கல் விற்றல், மீன் பிடித்தல் உணக்கல்

6. ஐந்திணைகளின் முதற்பொழுதுகளையும், உரிப்பொருள்களையும் கூறுக

குறிஞ்சி

  • பெரும்பொழுது – குளிர்காலம், முன்பனிக்காலம்
  • சிறுபொழுது – யாமம்
  • உரிப்பொருள் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை

  • பெரும்பொழுது – கார்காலம்
  • சிறுபொழுது – மாலை
  • உரிப்பொருள் – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம்

  • பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
  • சிறுபொழுது – வைகறை
  • உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தமும்

மருதம்

  • பெரும்பொழுது – ஆறு பெரும் பொழுதுகள்
  • சிறுபொழுது – எற்பாடு
  • உரிப்பொருள் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை

  • பெரும்பொழுது – இளவேனில், முதுவேனில், பின்பனி
  • சிறுபொழுது – நண்பகல்
  • உரிப்பொருள் – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment