TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 2.2 – காற்றே வா

2.2 காற்றே வா

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 2.2 – காற்றே வா.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - karte vaa

10th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • மயலுறுத்து – மயங்கச்செய்
  • ப்ராண – ரஸம் – உயிர்வளி
  • லயத்துடன் – சீராக
  • சுமந்து – வினையெச்சம்
  • வீசி – வினையெச்சம்
  • மிகுந்த – பெயரெச்சம்
  • நல்லொளி – பண்புத்தொகை
  • நெடுங்காலம் – பண்புத்தொகை
  • நல்லலயத்துடன் – குறிப்புப்பெயரெச்சம்

நூல் வெளி

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்.
  • எட்டையபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.
  • கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
  • சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தம் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
  • கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.
  • இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்;
  • இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1.உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்  பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

  1. உருவகம், எதுகை
  2. மோனை, எதுகை
  3. முரண், இயைபு
  4. உவமை, எதுகை

விடை : மோனை, எதுகை

குறு வினா

வசன கவிதை – குறிப்பு வரைக

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்

சான்று:-

இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது

 – பாரதியார்

கூடுதல் வினாக்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

1. பாடுகிறோம் = பாடு + கிறு + ஓம்

  • பாடு – பகுதி
  • கிறு – நிகழ்கால இடைநிலை
  • ஓம் – தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி

2. வழிபடுகின்றோம் = வழிபடு + கின்று + ஓம்

  • வழிபடு – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஓம் – தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணையைக் கண்டுபிடி

  1. மயலுறுத்து – மயங்கச்செய்
  2. ப்ராண – ரஸம் – உயிர்வளி
  3. லயத்துடன் – சீராக
  4. வாசனை – மனம்

விடை : வாசனை – மனம்

2. “நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா” என்று பாராட்டப்பட்டவர் ___________

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

3. பாரதியார் ___________ என போற்றப்படுகிறார்.

  1. நர்மதைக்கு தந்தை
  2. பரணிக்கு தந்தை
  3. சிந்துக்குத் தந்தை
  4. கவிதைக்கு தந்தை

விடை : சிந்துக்குத் தந்தை

4. “கேலிச்சித்திரம், கருத்துப்படம்” போன்றவற்றை உருவாக்கியவர் ___________

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. சுரதா
  4. பாரதியார்

விடை : பாரதியார்

5. “பாட்டுக்காெரு புலவன்” என்று பாராட்டப் பெறுபவர் ___________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

6. “காற்று, வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. சுரதா

விடை : பாரதியார்

7. “ப்ராண-ரஸம்” என்ற சொல் உணர்த்தும் பொருள் ___________

  1. சீராக
  2. அழகு
  3. உயிர்வளி
  4. உடல்உயிர்

விடை : உயிர்வளி

8. காற்று எதைச் சுமந்து கொண்டு வரவேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?

  1. கவிதையை
  2. விடுதலையை
  3. மழையை
  4. மகரந்ததூளை

விடை : மகரந்ததூளை

9. வசனக்கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. சுரதா
  4. பாரதியார்

விடை : பாரதியார்

10. ஆங்கிலத்தில் Prose Poetry (Free Verse) என்றழைக்ப்படும் வடிவத்தை தமிழில் அறிமுகப்படுதியவர் 

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சுரதா

விடை : பாரதியார்

11. “புதுக்கவிதை” என்ற வடிவம் உருவாகக் காரணம் ___________

  1. பாரதியின் வசன கவிதை
  2. ஜப்பானியரின் ஹைக்கூ
  3. வீரமாமுனிவரின் உரைநடை
  4. கம்பரின் கவிநயம்

விடை : பாரதியின் வசன கவிதை

12. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் ___________

  1. இந்தியா, சுதேசமித்திரன்
  2. இந்தியா, எழுத்து
  3. சுதேசமித்திரன், எழுத்து
  4. கணையாழி, எழுத்து

விடை : இந்தியா, சுதேசமித்திரன்

13. “காற்றே வா” என்னும் கவிதையின் ஆசிரியர் __________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கண்ணதாசன்
  4. வாணிதாசன்

விடை : பாரதியார்

14. “காற்று __________ சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?

  1. கவிதையை
  2. மகரந்ததூளை
  3. விடுதலையை
  4. மழையை

விடை : மகரந்ததூளை

பொருத்துக

1. மயலுறுத்த அ. உயிர்வளி
2. ப்ராண – ரஸம் ஆ. மங்கச் செய்
3. லயத்துடன் இ. மணம்
4. வாசனை ஈ. சீராக
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப் பெற்றவர்?

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன், மகாகவி, கலைமகள்

2. பாரதியாரின் எழுதிய நூல்கள் சிலவற்றை எழுதுக

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி

3. பாரதியார் இதழாசியரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்களை எழுதுக

இந்தியா, சுதேசிமித்திரன்

4. வசன கவிதை என்றால் என்ன?

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்

5. புதுக்கவிதை உருவாக காரணம் யாது?

உணர்ச்சி பாெங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டு உள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

6. காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரியார் வேண்டுகிறார்?

மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து மிகுந்த உயிர் வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.

7. உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்” – என்று யார் யாரிடம் கூறுகின்றார்?

பாரதியார், காற்றிடம் கூறுகின்றார்

8. எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?

காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்ட காலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment